tamilnadu

img

மதுரை மீனாட்சி திருக்கல்யாணம்

மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல் யாணம் உற்சவர் சன்னதியில் திங்கட் கிழமை (மே 4) காலை 9.05 முதல் 9.30 மணிக்குள் நடைபெற்றது.

சித்திரைத் திருவிழா, மீனாட்சி திருக்கல்யா ணத்தை அடிப்படையாக கொண்டது. கொரோனா ஊரடங்கு காரணமாக திருவிழா நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. ஆனால், திருக்கல்யா ணத்தை மட்டும் நடத்த கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. இதன்படி திங்கள் காலை 9:05 முதல் 9: 30 மணிக்குள் திருக்கல்யாணம் நடந்தது. திருக்கல்யாணம், கோவில் இணைய தளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

மீனாட்சியின் திருமணத்தை நான்கு சிவாச்சாரியார்கள் நடத்தி வைத்தனர். இதே போல், அழகர்கோவில் கள்ளழகர் கோவிலில் சித்திரை திருவிழா ரத்தான நிலையில், மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி கோவில் வளாகத்தில் மே 8- ஆம் தேதி நடக்கிறது.

பாதுகாப்பு ஏற்பாடுகளை பின்பற்றாத பட்டர்கள்

கோவிலில் திருக்கல்யாணம் வைபவம் நடைபெறும் இடத்தில் இருந்த பட்டர்கள் முகக் கவசம் அணிவதை தவிர்த்து திருக்கல்யாண வைபவம் நிகழ்ச்சிகளை நடத்தினர். 

கடந்த சில நாட்களுக்கு முன்புதான் மீனாட்சி அம்மன் கோயில் பட்டர் அவர்களின் தாயார் ஒருவர் கொரோனா நோய் தொற்று காரணமாக உயிரிழந்தார் என்பது நினைவு கூரத்தக்கது.

வீடுகளில் இருந்த மக்கள் கூட சமூக இடைவெளியை கடைப்பிடித்தும் போதிய பாதுகாப்போடும் அமர்ந்து தொலைக்காட்சியை பார்த்து வந்த நிலையில் மீனாட்சி அம்மன் கோவிலில் இது போன்றவைகளை கடைபிடிக்காதது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.