மதுரை, ஏப்.22- 12 மணி நேர வேலை சட்டத் திருத்த மசோதாவை தமிழக அரசு திரும்பப் பெறக் கோரி இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்தின் மதுரை மாநகர் மாவட்டக்குழு சார்பில் சனிக்கிழமை யன்று சாலை மறியல் போராட்டம் நடை பெற்றது. தொழிலாளர்களுக்கு விரோதமான இச்சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி பெரியார் பேருந்து நிலையம் கட்டபொம்மன் சிலை அரு கில் நடைபெற்ற மறியலுக்கு மாவட்டத் தலைவர் அ.பாவேல் சிந்தன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் த.செல்வா, மாவட்ட நிர்வாகிகள் வேல்தேவா , நிருபனா , நவீன், கெளதம் பாரதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் பங் கேற்றவர்கள் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டனர்.