மதுரை, ஜூலை 13- தமிழக அரசு புறக்கணிப்பு, இந்திய மாணவர் சங்கத் தலைவர் வீட்டிலேயே கைது, பல்கலைக்கழகத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மாணவர் சங்கம் எதிர்ப்பு, மதுரை மாநகரில் ஜனநாயக இயக்கங்கள் ஆர்ப்பாட்டம் - என பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் 54-ஆவது பட்டமளிப்பு விழா புதனன்று பல்கலை வளாகத்தில் உள்ள. மு.வ. அரங்கில் நடைபெற்றது. மதுரை காமராசர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மாநில ஆளுநர் அரசியலை புகுத்துவதாலும் தமிழக அரசுக்கே தெரியாமல் தன்னிச்சையாக விழாவை நடத்துவதாலும் பட்டமளிப்பு விழாவை தமிழக அரசு புறக்கணித்தது. பொதுவாக பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழாவை, அந்த பல்கலைக் கழகத்தின் நிர்வாகம், அதாவது துணைவேந்தர் உள்ளிட்டவர்கள்தான் நடத்துவது என்பது அனைத்து பல்கலைக் கழகங்களிலும் இருக்கின்ற நடைமுறை. அதன் அடிப்படையில் தான் பட்டமளிப்பு விழா 53 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்தாண்டு கௌரவ விருந்தின ரை அழைக்கிறோம் எனக் கூறி ஒன்றிய அமைச்சர் எல்.முருகனை அழைத்து ஆளுநர் ஆர்.என்.ரவி பேசவைத்தார். தமிழக அரசு எதிர்பார்த்தது போலவே பல்கலை. பட்டமளிப்பு விழா “மோடியின் புகழ்பாடும்” விழாவாகவே இருந்தது. விழாவில் பேசிய அமைச்சர் எல்.முருகன், “பிரதமர் மோடிக்கு தமிழ் மீது பாசம் உள்ளது. அவர் ஐக்கிய நாடுகள் சபையில் கூட திருக்குறளைத் தான் மேற்கோள் காட்டிப் பேசினார். எந்த உரை என்றாலும் திருக்குறளை மேற்கோள் காட்டித்தான் பேசுகிறார்” என்று புல்ல ரித்துப் பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், “இந்தியா வில் வேலை கேட்பவர்களே இருக்கக் கூடாது. இளைஞர்கள் எல்லாம் வேலை கொடுப்பவர்களாக மாறவேண்டும்” என்றார். “கொரோனா தொற்றுக் காலத்தி லிருந்து இந்தியா மீண்டு பொருளா தாரத்தில் வளர்ச்சி கண்டுள்ளது. எட்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த இந்தியா இப்போது இல்லை. நாடு வளர்ந்திருக் கிறது. 100-ஆம் ஆண்டு சுதந்திர தினத் தன்று, நாட்டின் குடிமக்கள், மாணவர்கள், இளைஞர்கள் அனைத்து வகையிலும் முன்னேற்றம் கண்டிருக்க வேண்டு மென மோடி அரசு செயல்பட்டுவரு கிறது. ஒவ்வொருவரும் தாய்மொழியை கற்க வேண்டும். தமிழ் மொழியை ஊக்கப் படுத்த வேண்டுமென்பதற்காகவே புதிய கல்விக் கொள்கை கொண்டுவரப் பட்டுள்ளது. ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டேண்ட் அப் இந்தியா, டிஜிட்டல் இந்தியா என பல வற்றை மோடி அறிமுகப்படுத்தியிருக் கிறார். இதெல்லாம் நாட்டின் நலன்கரு தித்தான்” என்றும் கூறிக்கொண்டார். அமைச்சர் எல்.முருகன் தவறியும் கூட, காமராசர் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சி யாரால், எப்படி சாத்தியமானது. இதற்கு அடித்தளமிட்டவர்கள் யார் என்பது குறித்து பேசவில்லை. நிகழ்வில் கலந்துகொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி மாணவர்களுக்கு பட்டங் களை வழங்கினார். பெங்களூரு தேசிய அறிவியல் மையத்தின் உயிரியல் துறை முதுகலை பேராசிரியர் பி.பலராமன் சிறப்புரையாற்றினார். துணைவேந்தர் ஜெ.குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மாணவர் சங்கத் தலைவர் கைது
மதுரை காமராசர் பல்கலைக்கழ கத்தின் வரம்புகளை மீறி பட்டமளிப்பு விழாவை நடத்தும் ஆளுநரின் நட வடிக்கையைக் கண்டித்தும். மாணவர் விரோத, மதவெறி அரசியலைப் புகுத்தும் மோசமான செயல்பாட்டை ஆளுநர் கைவிட வேண்டுமென வலி யுறுத்தியும் தங்களது எதிர்ப்பை தெரி விக்கும் விதமாக இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் வீ.மாரி யப்பன் தலைமையில் காமராசர் பல் கலைக்கழகத்தை முற்றுகையிட்ட மாநில துணைத் தலைவர் எம்.கண்ணன், மாநகர் மாவட்டத் தலைவர் பாலா, மாவட்டச் செயலாளர் வேல்தேவா உள்ளிட்ட பலரை காவல்துறையினர் கைது செய்தனர்.
மாணவர் தலைவரின் வீட்டை முற்றுகையிட்டு கைது
முன்னதாக புதனன்று காலை மாணவர் சங்கத்தின் புறநகர் மாவட்டத் தலைவர் க.ராகுல்ஜியின் வீட்டை, சமய நல்லூர் காவல்துறை துணைக் கண்கா ணிப்பாளர் தலைமையில் சென்ற காவல்துறையினர் முற்றுகையிட்டு வீட்டைச் சூழ்ந்து நின்றிருந்தனர். க.ராகுலின் பெற்றோர் கருணாநிதி-பொன்னுத்தாய் (மாதர் சங்க மாநிலச் செயலாளர்) ஆகியோர் எதற் காக வீட்டின் முன்பு காவல்துறையினர் காத்திருக்கின்றனர் என விசாரித்தபோது காவல்துறை துணைக் கண்காணிப் பாளர், மாணவர் சங்கத் தலைவர் க.ராகுல்ஜி ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிர்ப்புத் தெரிவித்து மாணவர்களை திரட்டி போராட்டம் நடத்தப்போகிறார்; எனவே அவரை முன்னெச்சரிக்கை நட வடிக்கையாக கைது செய்ய வந்திருக் கிறோம் என்றனர். தகவலறிந்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர், வாலிபர் சங்கம், விவ சாயிகள் சங்கம், விவசாயத் தொழிலாளர் சங்க நிர்வாகிகள், ராகுல்ஜியின் வீட்டின் முன்பு குவிந்தனர். அவரை கைது செய்து அழைத்துச் சென்றபோது ஆளுநர் ரவியின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து விண்ணதிரும் முழக்கங்களை எழுப்பினர். பட்டமளிப்பு விழாவை தன்னிச்சை யாக நடத்திய ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காமராசர் பல்கலை.யில் போராட்டம் நடத்திய தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த 30 பேர் கைது செய்யப்பட்டனர். விழாவில் தமிழக அரசுத் தரப்பில் எந்த அதிகாரியும் பங்கேற்கவில்லை.