tamilnadu

img

“உயர்கல்வியை பாதுகாப்பதற்கு” கிடைத்த வெற்றி தொழிற்சங்கங்கள் மகிழ்ச்சி ; கொண்டாட்டம்

மதுரை, மார்ச் 4- மதுரை காமராஜர் பல்கலைக் கழக சிண்டிகேட் தேர்தலில் உயர்கல்வி யைப் பாதுகாப்போம், கல்வியைக் காப்போம், மாணவர் நலன் காப்போம், பல்கலைக்கழகத்தை பாதுகாப்போம் என உரத்து முழங்கிய அணி வெற்றி பெற்றுள்ளது. 13 வருடங்களுக்குப் பிறகு நடை பெற்ற மதுரை காமராசர் பல்கலைக் கழக கல்விக்குழுவின் ஆட்சிக் குழு, ஆட்சிப் பேரவை மற்றும் நிலைக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் வெள்ளியன்று நடைபெற்றது. மொத்தமுள்ள 14 இடங்களில் மூட்டா, டிஎன்ஜிசிடிஏ, மூஃபா, (MUFA) முபா (MUPA), டான்சாக், எம்கேயு-ஏஎஸ்ஏ இணைந்து போட்டியிட்டன. இந்த அணி மொத்தம் 10 இடங்களில் போட்டியிட்டு 10 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. ஆட்சிக் குழு: ஆர்.சண்முகவேல், எம்.தவமணி கிறிஸ்டோபர், எஸ்.புஸ்பராஜ். ஆட்சிப்பேரவை: சி.கோபி, ஜி.பிரபாகரன், எம்.சுல்தான் இப்ரா ஹிம். நிலைக் குழு: ஞா.பகவதியப்பன், ஏ.சிபு, பி.செல்வி, வி.இமயவரம்பன் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

வெற்றி பெற்றவர்கள் கூறுகை யில், நிர்வாகச்சீர்கேடுகளால் நிதி நெருக்கடியில் சிக்கி உள்ள பல்கலைக் கழகத்தின் மாண்பைக் காப்பதற்கும், உயர்கல்வி சூழலைக் காப்பதற்கும் உழைக்க இந்த வாய்ப்பை நல்கிய மதுரை காமராசர் பல்கலைக்கழ கத்தின் கல்விக்குழு உறுப்பினர்க ளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.  நெருக்கடி மிகுந்த இந்த சூழலில், தொழிற்சங்கங்களின் வேட்பாளர்க ளின் வெற்றிக்காக அயராது உழைத்து, அனைத்து வேட்பாளர்க ளின் வெற்றியையும் உறுதி செய்த  மூட்டா மற்றும் தோழமைச் சங்கங்க ளின் ஒவ்வொரு உறுப்பினர்களுக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுக ளையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்றனர். மூட்டா அணி போட்டியிடாத நான்கு இடங்களில் மற்றவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் சனிக்கிழமை மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசனை சந்தி த்து வாழ்த்து பெற்றனர். இவர்களு டன் மூட்டா நிர்வாகி ஏ.செந்தாமரைக் கண்ணன், மூட்டா முன்னாள் நிர்வாகி எஸ்.விவேகானந்தன் உள்ளிட்ட பலர் வந்திருந்தனர்.

நிதி நெருக்கடி

தேர்தல் களத்தில் பணியாற்றிய ஊழியர்கள் கூறுகையில், பல்க லைக்கழகத்திற்கு வருமானம் ரூ.40 கோடி. ஆண்டுச் செலவு ரூ.100 கோடி. காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு போதுமான நிதியை அரசு ஒதுக்க வேண்டும். அதே நேரத்தில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்புவதன் மூலம் நிதி ஆதாரத்தை பெருக்குவ தற்கான வழிமுறைகளை, ஆலோச னைகளை கேட்டறிய முடியும். தமிழ்நாடு அரசும் கூட இதற்காக வழி முறைகளை ஆராயச் சொல்லி யுள்ளது.

காவிமய முயற்சி தோல்வி

குறிப்பாக ஆர்எஸ்எஸ் மற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி விரும்பிய நபர்களும் தேர்தலில் போட்டியிட் டுள்ளனர். இந்தப் பத்து இடங்களில் ஒரு இடத்திலும் ஆர்எஸ்எஸ் அமைப்போ அவர்களால் மறை முகமாக நிறுத்தப்பட்டவர்களாலோ வெற்றி பெறமுடியவில்லை. இதன் மூலம் கல்வியை காவிமயமாக்கும் முயற்சி க்கு தடுப்பு அரணாக செயல்படு வார்கள். இருப்பினும் பல்கலைக்கழ கத்தில் ஆர்எஸ்எஸ், ஏபிவிபி அமைப் பினர் பகிரங்கமாக செயல்படுகின்ற னர். இவர்களை பேராசிரியர்கள்-ஊழி யர்கள்-மாணவர்களிடமிருந்து தனி மைப்படுத்துவோம். உயர்கல்வியைப் பாதுகாப்போம் என்றனர். இந்தநிலையில், “ஆர்எஸ்எஸ்-விசி கூட்டணிக்கு எதிராகப் போட்டி யிட்ட பத்து இடங்களில்  அசோசியே ஷன் பேனல் வெற்றி பெற்றது. எல்லா  அச்சுறுத்தல்களையும் மீறி, விரை வான மற்றும் உறுதியான முடிவின் உதவியுடன் மட்டுமே இந்த வெற்றி சாத்தியமானது”. என்ற ட்விட்டர் பதிவு வைரலாகி வருகிறது.