tamilnadu

தீக்கதிர் விரைவு செய்திகள்

மதுரை: அருவிமலை, சோமகிரிமலை, முறிமலைகளை பல்லுயிரி மரபு தளமாக அறிவிக்க கோரிக்கை

மதுரை, ஏப்.10- மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், அருவிமலை அடிவாரமான கண்மாய்ப்பட்டி கிராமத்தில் மலைப்பாம்பு இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வனத்துறையின் மீட்பு குழுவினர் புதனன்று மலைப்பாம்பை பிடித்து கொட்டாம் பட்டி அருகில் உள்ள வனப்பகுதியில் அதனை விட்டனர். அருவிமலை, சோமகிரிமலை, முறிமலை,  புலிமலை உள்ளிட்ட மலைகள் அருகருகே அமைந்துள்ளது. இம்மலைகள் அனைத்தும் பல்லுயிரி பெருக் கம் நிறைந்த மலைக்குன்றுகளாகும். கடந்த ஆறு மாதத்தில் கண்மாய்ப்பட்டியில் மலைப்பாம்பு பிடிபடுவது இது இரண்டாவது முறையாகும்.  அருவிமலை, சோமகிரி மலை, புலிமலை உள்ளிட்ட மலைக்குன்றுகளில் 800 ஆண்டு பழமையான தமிழ் கல்வெட்டுகள் காணப்படுகின்றன.  புலிமலையில் பெருகற்காலத்தைச் சேர்ந்த  பாறை ஓவியங்கள் கண்டறியப் பட்டுள்ளன. சாம்பல் நிற  தேவாங்கு, வெருகு, புனுகுபூனை, குழி முயல், காட்டுப் பன்றி உள்ளிட்ட காட்டுயிர்கள் வாழிடமாகவும் இம்மலைகள் விளங்குகின்றன. இருமாதங்களுக்கு முன்பு சோமகிரிமலை அடிவார காட்டில் புள்ளிமான்கள் இருப்பது ஆவணம் செய்யப்பட்டது.   வரலாற்று அடிப்படையிலும், பல்லுயிரிய வகைமை அடிப்படையிலும் இம்மூன்று மலைகளும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும்.  இம்மலைகளின் வரலாற்று சுவடுகளையும், பல்லுயி ரிய பெருக்கத்தையும் பாது காக்கும் பொருட்டு இம்மூன்று மலைகளையும் உள்ளடக்கிய பகுதியை பல்லுயிரிய மரபு தளமாக அறிவித்து பாதுகாக்க வேண்டுமென தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறோம் என்று மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

மகளிர் குழு பெண்களிடம் ரூ.8 கோடி மோசடி

சிவகங்கை, ஏப்.10- சிவகங்கை மாவட்டம் மகளிர் சுய உதவிக் குழு பெண்  களிடம் பல கோடி ரூபாய் பணத்தை மோசடி செய்தவர்  மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்ட பெண்  கள் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் குவிந்தனர். திருப்பத்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள புதுப்  பட்டி, மலம்பட்டி, சக்கம்பட்டி, வேலங்குடி, ஆத்திரம்பட்டி  உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் 50க்கும் மேற்  பட்ட மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த 500க்கும்  மேற்பட்ட பெண்களிடம் பல தனியார் நிதி நிறுவனங்கள்  சுமார் ரூ.8 கோடி வரை கடன் பெற்ற மகளிர் குழு ஒருங்கி ணைப்பாளர் செல்வராணி என்பவர் கடனை தான் செலுத்தி  கொள்வதாக கூறி நிதி நிறுவனங்களிடம் கடனை செலுத்தா மல் மோசடி செய்துவிட்டு தலைமறைவாகி உள்ளார். தனியார் நிதி நிறுவனங்கள் தங்களை கடனை கட்டச்  சொல்லி தொந்தரவு செய்து வருவதாகவும், இது குறித்து  செல்வராணி மீது நடவடிக்கை எடுக்க திருப்பத்தூர் காவல்  நிலையத்தில் புகார் அளிக்க சென்ற போது புகாரை வாங்க  மறுத்து விட்டதால் பாதிக்கப்பட்ட பெண்கள் மகளிர் சுய  உதவிக் குழு தலைவி செல்வராணி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நூற்றுக்கும் மேற்பட்டோர் காவல் கண்கா ணிப்பாளரிடம் நேரடியாக மனு அளித்தனர்.

மே 20 இல் பாஜக அரசை கண்டித்து  11 இடங்களில் மறியல் போரட்டம்

ஒன்றிய பாஜக அரசின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை கண்டித்து மே 20 ஆம் தேதியன்று விருதுநகர் மாவட்டத்தில் 11 இடங்களில் மறியல் போராட்டம் நடத்து வது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. விருதுநகரில் உள்ள தொமுச அலுவல கத்தில் அனைத்து தொழிற்சங்க நிர்வாகி கள் கூட்டம் நடைபெற்றது. தொமுச மாவட்  டச் செயலாளர் மாடசாமி தலைமையேற்றார்.  சிஐடியு மாவட்டச் செயலாளர் பி.என்.தேவா,  மாவட்ட துணைத் தலைவர் ஜி.வேலுச்சாமி, ஏஐடியுசி சார்பில் கா.சமுத்திரம், ஐஎன்டியுசி சார்பில் ஜி.கண்ணன், யுடியுசி சார்பில் இளங்கோவன்,  எம்எல்எப் சார்பில்  காதர் மைதீன், எம்எல்எப் நிர்வாகி ஆறுமுக  சக்திவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வரும் ஏப்ரல் 15 இல் சிவகாசியில் பிஎப்  அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது  என்றும், மே 10 இல் மாவட்டம் முழுவதும் வேலை நிறுத்தப் பிரச்சாரம் செய்வது என்றும், மே 20 அன்று மாவட்டம் முழுவதும் 11 இடங்களில் மறியல் செய்வது என்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.