tamilnadu

img

கோயில்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அனுமதி!

கோயில்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சி  உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அனுமதி!

மதுரை, ஜூன் 4 - மாநிலம் முழுவதும் உள்ள கோயில் களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடத்து வதற்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்  கிளை நிபந்தனையுடன்  அனுமதி வழங்கி உள்ளது. திண்டுக்கல், தேனி, இராமநாதபுரம் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கோவில் திரு விழாவை முன்னிட்டு ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு அந்தந்த காவல்துறை அனுமதி வழங்குவது வழக்கம். ஆனால் சட்டம் – ஒழுங்கு பிரச்ச னைகளை காரணம் காட்டி காவல்துறை யினர் அனுமதி மறுத்ததன் காரணமாக, 7-க்கும் மேற்பட்ட மனுக்கள் உயர் நீதி மன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப் பட்டிருந்தன. இந்த மனுக்கள், நீதிபதி புகழேந்தி முன்னிலையில் புதனன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில், “கடந்த பல ஆண்டுகளாக கோவில் திருவிழாவின் போது ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.  ஆனால் தற்போது சட்டம் – ஒழுங்கு  பிரச்சனைகளைக் காட்டி காவல்துறை யினர் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க மறுக்கின்றனர்” என்று தெரி விக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி, “சமூக ஊடக காலம் இது. இந்த சூழலில், ஆடல் பாடல் கலை நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரி மனு தாக்கல் செய்து உள்ளீர்கள். இந்த ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த அதிக பணம் செலவு செய்யப்படுகிறது. எனவே, ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த நிபந்தனையுடன் அனுமதி வழங்கப்படுகிறது. ஆடல், பாடல் நடைபெறும் உள்ளாட்சி அமைப்பு களின் செயலரிடம், ரூ. 25 ஆயிரம் மனு தாரர் செலுத்த வேண்டும். இந்த 25 ஆயி ரத்தைக் கொண்டு, அந்த கிராமத்தில் நீர்  நிலைகளைத் தூர்வார வேண்டும். இத னால், கிராமம் செழிப்பாக இருக்கும்” என  உத்தரவிட்டார். தமிழகம் முழுவதும் உள்ள கோயில் களில் நடைபெறும் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு காவல் துறையினர் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க லாம் என கடந்த மார்ச் மாதம் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத் தக்கது.