மதுரை:
மதுரை பேரையூர் அணைக்கரைப் பட்டியைச் சேர்ந்த ரமேஷ், காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப் பட்ட நிலையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். ரமேஷின் மரணத்திற்கு நீதி கேட்டு அப்பகுதிமக்கள் போராட்டம் நடத்தினர். அப்போதுகாவல்துறை கண்காணிப்பாளர், உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் ஆகியோர் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலப் பொதுச் செயலாளர் கே.சாமுவேல் ராஜ், மாநிலத் தலைவர் செல்லக்கண்ணு உள்ளிட்ட கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போதுசம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்வதாகவும்,வேறு மாவட்டத்திற்கு மாற்றம் செய்வதாகவும் கூறினர். அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்க மறுத்த மக்கள் காவலர்களை கைது செய்ய வேண்டும். ரமேஷ் உயிரிழந்த வழக்கை தீண்டாமை வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் பதிவு செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.
இந்தச் சூழ்நிலையில் காவல் கண்காணிப்பாளர் காவல்ஆய்வாளர் ஜெயக்கண்ணன், பரமசிவம் ஆகியோரை தற்காலிக பணிநீக்கம் செய்துஉத்தரவிட்டார். பணிநீக்கம் செய்யப்பட்டஅவர்கள் ஒரு வார காலத்திற்குள்ளாகவே ஜெயக்கண்ணன் மேலூர் காவல் நிலையத்திலும், பரமசிவம் செக்காணுரணி காவல்நிலையத்திலும் பணியில் சேர்க்கப்பட்டனர்.இதனால் அதிர்ச்சியடைந்த அணைக்கரைப்பட்டி மக்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் கிராமத்தில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர். கிராம மக்களுடன் தீண்டாமைஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் த.செல்லக்கண்ணு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சி.முத்துராணி, கல்லுப்பட்டி ஒன்றியச் செயலாளர் வி.சமையன், மாவட்டக்குழு உறுப்பினர்வி.முருகன், ஒன்றியக் குழு உறுப்பினர் கள் சங்கர், ராமர், செல்லத்துரை ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.போராட்டம் குறித்து கிராம மக்கள் கூறுகையில், “ரமேஷ் உயிரிழப்பிற்கு காரணமான காவலர்களை கைது செய்ய வேண்டும். வழக்கை எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்ய வேண்டும். காவலர்களை பணியிடை நீக்கம் செய்தது ஒரு கண் துடைப்பு என்பது ஒரு வாரத்தில் தெரிந்துவிட்டது.
நியாயம் கிடைக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும் என்றனர். செவ்வாயன்று மூன்றாவது நாளாக போராட்டம் தொடர்ந்தது.இதற்கிடையில் அணைக்கரைப் பட்டி சம்பவத்திற்கு நியாயம் கேட்டு தமிழகம் முழுவதும் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல பல்வேறு அமைப்புகள் ஆலோசித்து வருவதாகவும் முதற்கட்டமாக ஓரிரு தினங்களில் உசிலம்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அணைக்கரைப்பட்டி ரமேஷின்சகோதரர் இதயக்கனி அதே கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டதையடுத்து ரமேஷின் குடும்பத்தினரை ஒருமாத காலமாக காவல்துறையினர் விசாரணை என்ற பெயரில் டார்ச்சர் செய் துள்ளனர். இறுதியில் காவல்துறையின் விசாரணைக்கு சென்ற ரமேஷ் தூக்கில்தொங்கி பலியானார். இதற்கு காவல் துறை தான் காரணம் என்பது அணைக் கரைப்பட்டி மக்களின் குற்றச்சாட்டாகும்.
நமது சிறப்பு நிருபர்