மதுரை ஆட்சியர்கள் அடிக்கடி மாற்றம் நிர்வாகச் சீர்கேட்டை வெளிப்படுத்துகிறது கே.பாலகிருஷ்ணன் கருத்து
மதுரை, அக்.12- மக்களவைத் தேர்தல் தொடங்கி தற்போது வரை மதுரை மாவட்டத்தில் மூன்று ஆட்சி யர்கள் மாற்றம் செய்யப்பட்டு நான்காவதாக ஆட்சியர் வினய் பொறுப்பேற்க உள்ளார், இது அரசின் நிர்வாகச் சீர்கேட்டையே வெளிப்படுத்துகிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மதுரையில் கூறினார். மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த ச.நடராஜன் மக்களவைத் தேர்தலின்போது தேர்தல் நடத்தை விதிகளை மீறியது தொடர்பாக எழுந்த புகாரில் தேர்தல் ஆணை யம் இடமாற்றம் செய்தது. அதையடுத்து நாகராஜன் நியமிக்கப்பட்டார். தேர்தல் நடத்தை விதிகள் முடிவடைந்த நிலையில் மக்கள் பணிகளில் கவனம் செலுத்தத் தொடங்கினார். 1,500 அங்கன்வாடி பணி யாளர்களை நேர்மையாக நியமனம் செய்தார். இதனால் வெகுண்டெழுந்த தமிழக அரசு அவரை உடனடியாக இடமாற்றம் செய்தது. இவரைத் தொடர்ந்து த.சு.ராஜ சேகர் மதுரை ஆட்சியராக பொறுப்பேற்றார். இவர் மாவட்ட நிர்வாகத்தை லேசாக முன்னோக்கி இழுத்துச் செல்ல முயற்சித்தார். சில நடவடிக்கைகளையும் மேற்கொண்டார். இந்த நிலையில் இரண்டு நாட்கள் சாதாரண விடுப்பில் சென்ற அவர் ஒரேடியாக மாவட்டத்தைவிட்டே தூக்கி யடிக்கப்பட்டுவிட்டார். த.சு.ராஜசேகர் இடத்திற்கு அரியலூர் மாவட்ட ஆட்சியராக பொறுப்பு வகிக்கும் டாக்டர் வினய் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் திங்களன்று பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில், மதுரை ஆட்சி யர் தொடர்ந்து மாற்றப்பட்டுக்கொண்டே யிருப்பது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணனிடம் கேட்டதற்கு, அரசு நிர்வாகம் சீர்கேடு அடைந்துவிட்டது என்பதற்கு இது வும் ஓர் உதாரணம் என்றார்.
இலவச வீட்டு மனைப்பட்டா, 200 நாள் வேலை கோரி விவசாயத் தொழிலாளர்கள் போராட்டம்
திண்டுக்கல், அக்.12- இலவச வீட்டு மனைப்பட்டா, 200 நாள் வேலை கேட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பாக மனு கொடுக்கும் போராட்டம் நடை பெற்றது. பழனி தாலுகா அலுவலகம் முன்பாக பழனி, தொப்பம்பட்டி ஒன்றியக்குழுக்கள் சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் அருள்செல்வன் சிறப்புரையாற்றினார். விவசாயிகள் சங்க மாவட்டத்தலைவர் பி.செல்வராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். திண்டுக்கல் தாலுகா அலுவலகம் முன்பாக ரெட்டியார்சத்திரம் மற்றும் திண் டுக்கல் ஒன்றியம் சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.பெருமாள் ஆத ரித்துப் பேசினார். சங்க நிர்வாகிகள் பழ னிச்சாமி, அம்மையப்பன், நாகராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். வேடசந்தூர், வடமதுரை ஒன்றியக்குழுக் கள் சார்பாக நடைபெற்ற வேடசந்தூரில் தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டப் பொருளாளர் கண்ணன், நிர்வாகிகள் சம்சுதீன், சங்கர், சிக்கணன், கல்யாணசுந்தரம் உள்ளிட்டோர் பேசினர். தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் எம்.ஆர்.முத்துச்சாமி, மாவட்ட தலைவர் டி.முத்துச்சாமி ஆத ரித்துப் பேசினர். ஒட்டன்சத்திரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஆறுச்சாமி தலைமை வகித்தார். மாவட்டத்தலைவர் வசந்தாமணி சிறப்புரையாற்றினார். நிலக்கோட்டை, வத்தலக்குண்டு ஒன்றியக்குழுக்கள் சார்பாக நிலக்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு நிலவை ஒன்றியச் செயலாளர் எம்.ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். சங்க நிர்வாகிகள் மற்றும் விவ சாயத் தொழிலாளர்கள் கலந்து கொண்ட னர்.
சிவகங்கையில் விவசாயத்தொழிலாளர்கள் போராட்டம்
சிவகங்கை,அக்.12- அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் ஓய்வூதியம்,வீட்டுமனைப்பட்டா கேட்டு சிவகங்கையில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. சிவகங்கை தனி வட்டாட்சியர் பாலகிருஷ்ணனிடம் மனு கொடுத்து பேசினர். விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் மணியம்மா, சிவகங்கை ஒன்றிய செயலாளர் முத்துக்கருப்பன், ஒன்றிய தலைவர் வேங்கையா, தனசேகரன், தர்மராஜ், மாவட்டக்குழு உறுப்பினர் பஞ்சவர்ணம், கீழச்சாளூர் சிகப்பி,மேலச்சாளூர் கிளைச் செயலாளர் லெட்சுமி,வி.புதுப்பட்டி கிளைச் செயலாளர் மாயம்மாள் உள்ளிட்டோர் 200 பேர் மனு கொடுத்து பேசினர். தகுதியான அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்கப்படும் என்று வட்டாட்சியர் பாலகிருஷ்ணன் கூறினார்.இதில் மாற்றுத்திறனாளி ஒருவருக்கு ஒஏபி வழங்க உடனடியாக வட்டாட்சியர் உத்தரவு அளித்தார்.
கணினியில் வைரஸ் கிருமிகளை ஏற்றி நூதன மோசடி கோவை, அக்.12– புகைப்பட ஸ்டுடியோவில் உள்ள கணினியில் வைரஸ் கிருமிகளை ஏற்றி, அதனை நீக்க அமெரிக்கா டாலர் கேட்டு நூதன மோசடியில் ஈடுபடுவதாக பாதிக் கப்பட்ட ஸ்டுடியோ உரிமையாளர் கணினி யின் பாகத்துடன் வந்து கோவை மாநகர துணை ஆணையரிடம் மனு அளித்தனர். கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் அன்பு போட்டோஸ், வீடியோஸ் ஸ்டுடியோ நடத்தி வருபவர் நா.முத்துக்குமார். இவர்கடந்த 2 ஆம் தேதியன்று திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் மற்றும்தொழில் சம்மந்தமான புகைப்படங்கள், வீடியோக்கள் எடிட் செய்யும் கணினியில் இருந்த அனைத்து பைல்களும் பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதன் மூலம் ஹேக்கர்கள் மோசடி என்பதை உறுதி செய்தார். சுமார் 3 டி.பி. அளவிலான பைல்கல் ஹேக் செய்யப்பட்ட கணினியில் உள்ளதாகவும், சம்மந்தப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு பதில் சொல்ல முடியாமல் மன உளைச்சலுக்கும், பொருளா தார பாதிப்புக்கும் ஆளாகி உள்ளதாக கூறி, ஹேக்கிங்கால் பாதிக்கப்பட்ட முத்துக்குமார் கோவை மாநகர காவல்துறை குற்றப்பிரிவு துணை ஆணையரிடம் மனு அளித்தார். அந்த மனுவை சைபர் கிரைம் பிரிவிற்கு மாற்றப்பட்டு விசாரிக்கப்படும் என துணை ஆணையர் தெரிவித்துள்ளார்.