tamilnadu

img

தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு

தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு

மேற்கு தொடர்ச்சி மலைகளின் வனப்பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கருவேல மரங்கள் மற்றும் யூக லிப்டஸ் மரங்களை அகற்ற உத்தர விடக் கோரி சரவணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு  தொடுத்திருந்தார். இந்த வழக்கை விசா ரித்த உயர்நீதிமன்றம், வனப்பகுதியில் ஆக்கிரமித்துள்ள அந்நிய மரங்களை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பதில் மனுத் தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி கள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கர வர்த்தி அமர்வில் மீண்டும் விசார ணைக்கு வந்தது. அப்போது வனத் துறை சார்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் ஏ.சீனிவாசன், “அந்நிய மரங்களை அகற்றுவது குறித்து தமிழ்நாடு அரசு கொள்கை முடிவெ டுத்து, இந்தியாவில் அந்நிய மரங்களை  அகற்றும் மாநிலங்களில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு அரசு திகழ்ந்து வருகிறது” என தெரிவித்தார். வனப்பகுதிகளில் ஆக்கிரமித் துள்ள அந்நிய மரங்களை அகற்று வதில் நவீன இயந்திரங்கள் பயன்படுத்தப் பட்டு வருவதாகவும், குறிப்பாக எவ்வ ளவு மரங்கள் அகற்றப்படுகிறது என்பது  குறித்து வனத்துறை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு  வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டி னார். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு  முதன்மை தலைமை வனப்பாதுகாவ லர் ஸ்ரீனிவாஸ் ரெட்டி சார்பில் அறிக்கை  தாக்கல் செய்யப்பட்டது. அதில், “நீதி மன்ற உத்தரவுப்படி வனத்தை ஆக்கிர மித்துள்ள அந்நிய மரங்களை அகற்ற  நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரு கிறது. 25 மாவட்ட வனப்பகுதிகள் மண்  வளத்தை பாதிக்கும் வகையில், 4038 ஏக்கர் ஆக்கிரமித்துள்ள அந்நிய வகை,  உண்ணி செடி வகைகள் இருப்பது கண்டறியப்பட்டு, அதில் 3605 ஏக்கர் பரப்பில் பரவிய இருந்த உண்ணி செடி கள் அகற்றப்பட்டுள்ளன. இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் அனைத்து உண்ணி செடி வகை களும் வனப்பகுதியில் இருந்து அகற்றப் படும்” என குறிப்பிடப்பட்டுள்ளது. இதே போல் வனப்பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தும் விதமாக சீமை  கருவேலம், மஞ்சள் கொடி எனப்ப டும் சீமை அகத்தி, யூகலிப்டஸ் மரங்கள் மற்றும் உண்ணி செடி இனங்கள் 20,339 ஏக்கர் பரப்பளவில் உள்ளதாக கண்டறியப்பட்டன. அதன் விவரங்கள் குறித்து, வனத்துறையின் இணையதளத்தில் பிரத்யேக பக்கங் கள் உருவாக்கப்பட்டு அதில் அந்நிய மரங்களை அகற்றுவதற்கான தரவுகள்  பதிவேற்றப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு எடுத்துள்ள  இந்த நடவடிக்கைகளுக்கு, நீதிபதிகள்  பாராட்டு தெரிவித்து வழக்கு விசார ணையை ஏப்.25 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.