tamilnadu

img

பழங்குடி மக்கள் வாழும் 16 மாவட்டங்களிலும் ஏகலைவா மாதிரிப் பள்ளிகள் துவக்க வேண்டும்

சென்னை,ஏப்.19- பழங்குடி மக்கள்  வாழும் 16 மாவட்டங் களிலும் ஏகலைவா மாதிரிப் பள்ளிகள் துவக்க வேண்டும்  என்று சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை தமிழக  அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்  துறை மானியக் கோரிக்கைகள் மீது விவா தம் நடைபெற்றது . இதில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் கந்தர்வகோட்டை தொகுதி உறுப்பினர் எம்.சின்னதுரை பேசி யது வருமாறு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் உயர்நிலை விழிப்புணர்வு மற்றும் கண்கா ணிப்புக்குழு கூட்டம் மூன்று மாதத்திற்கு ஒருமுறை  முதலமைச்சர் தலைமையில் நடத்தப்பட்டு அக்கூட்டத்தில் அரசியல் கட்சி களின் சார்பில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் முன் வைக்கும் கோரிக்கை கள் நிறைவேற்றப்படுவது பாராட்டத்தக்க தாகும்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் கல்வி மற்றும் சமூக பொருளாதார  ரீதியாக உயர்வடையச் செய்யவும், சமத் துவ சமுதாயத்தினை உருவாக்கவும், நிதி நிலை அறிக்கையில் பல திட்டங்களை அறி விப்பு செய்ததை வரவேற்கிறோம். சமூக, பொருளாதார ரீதியாக, ஆதிதிரா விட மக்களின் பின்தங்கிய நிலைமையை சரிசெய்திட சிறப்பு ஏற்பாடுகளை செய்வ தற்கு மாநில அரசுக்கு அதிகாரம் அளித்தது  தான் அரசமைப்புச் சட்டம் 1951 ஷரத்து 15, பிரிவு (4)ன்படி கொண்டு வரப்பெற்ற முதல்  சட்டத் திருத்தமாகும். அதன் பின்னர் சிறப்பு  உட்கூறுத் திட்டங்கள், இட ஒதுக்கீடு, தீண்  டாமை ஒழிப்பு சட்டங்கள், அரசு நலத்திட்ட  உதவிகள், தாட்கோ கடன் என பல்வேறு  சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு பிறகும்  ஆதிதிராவிட மக்களின் சமூக, பொருளா தாரம் எந்த அளவிற்கு மேம்படுத்தப்பட் டுள்ளது என்பதை ஆய்வுகளுக்கு உட் படுத்தி அடுத்தகட்ட வளர்ச்சிக்கு திட்டம் வகுக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வாழ்வை மேம்படுத்த வேண்டுமென்றால் அம்மக்களுக்கு நிலம், உணவு, வேலை, கல்வி வழங்குவதற்கான உத்தரவாதம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாமல் மாற்றம் ஏற்படும் என்று கருதுவது எளிதானதாக இருக்காது.

கல்வி நிலையங்களில்  சாதியப் பாகுபாடு

கல்வி நிலையங்களில் மாணவர்கள், ஆசிரியர்களிடம் துவங்கும் சாதியப் பாகுப்  பாடுகளை களைந்திட உறுதியான நிர்வாக  ஏற்பாடுகளை செய்ய வேண்டும். மாண வர்களிடையே சமத்துவ சிந்தனையை மேம்  படுத்தும் வகையில் மனித உரிமை மற்றும்  சமூக நீதிக் கல்வியை பாடத் திட்டத்தில் கொண்டு வர வேண்டும். காவல் நிலையங்க ளில் பணிபுரிவோரிடம் சாதியப் பாகுபாடு கள் தடுக்க வேண்டும். வெளிநாடு சென்று படிக்கும் மாணவர் கள் அனைவருக்கும் உதவித் தொகை வழங்க வேண்டும். இளங்கலை படிக்கும் மாணவர்கள், தனியார் மருத்துவக் கல் லூரியில் படிக்கும் மாணவர்களின் நலனை பாதுகாக்க வேண்டும்.

துணைத்திட்ட நிதி பயன்பாடு

ஆதிதிராவிடர் துணைத் திட்டமானது 21 செயலாக்கத்துறைகள் மற்றும் 48 அம லாக்கத்துறைகள் மூலம் செயல்படுத்தப் படுகிறது. ஒவ்வொரு துறையிலும் ஒருங்கி ணைப்பு அலுவலர் (நோடல்  ஆபிசர்) நியமனம் செய்யப்பட்டு திட்டங்கள் கண்காணிக்கப்படுகின்றன. ஆனாலும், ஆதிதிராவிடர் நலத் துறைக்கு ஒதுக்கீடு செய்யும் நிதிகள்... என்று (அவர் தெரிவித்த கருத்துகள் அவை  குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது.) குறிப்பாக, கடந்த 2016 -2017 ஆம்  ஆண்டுகளில் ரூ. 29,574.65 லட்சமாக இருந்து, 2021- 2022  ஆம் ஆண்டுகளில் ரூ. 2,41,853.98 லட்சமாக.... என்று (தெரி வித்த கருத்தும் மீண்டும் நீக்கப்பட்டது).  இதற்கான ஆதாரங்களை  கேட்டால்  துறை வாரியான அனைத்து ஆதாரங்க ளையும் கையில் வைத்திருக்கிறோம். எனவே, இத்தகைய போக்கை களைந்திட வேண்டும். குறிப்பிட்ட காலத்  திற்குள் ஒதுக்கீடு செய்து ஆதிதிராவிட மக்களின் நலனை காப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி யினர் குடியிருப்புகள் மேம்பாட்டு திட் டத்திற்கான தொகை ஆண்டொன்றுக்கு ரூ. 100 கோடி என்பது அதிகரிக்க வேண்  டும். குறைந்தது ரூ. 6 லட்சம் செலவில்  வீடுகள் கட்ட அரசு உதவிட வேண்டும்.  இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்  கிட கூடுதல் முக்கியத்துவம் தர வேண்  டும். சமூக பொருளாதாரத்தில் பின்தங் கிய கிறித்துவ ஆதிதிராவிடர்களையும் பட்டியல் இனத்தவருக்குள் கொண்டு வந்து சலுகைகள் வழங்க வேண்டும்.

வேங்கைவயல்...

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை தொகுதிக்குட்பட்ட வேங்கை வயல் கிராமத்தில் குடி  தண்ணீரில் மலத்தை கலந்து இழி செய லைச் செய்த குற்றவாளிகளை கைது செய்ய  முதலமைச்சர் உத்தரவிட்டார். ஆனாலும், குற்றவாளிகளை இதுவரை  கண்டுபிடிக்க முடியாதது கவலைய ளிக்கிறது. அப்பகுதியில் வேறு வித மான தீங்குகளை ஏற்படுத்துகிறது. விரைந்து வேங்கை வயல் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டுகிறேன். சட்டத்துறை அமைச்சர் ரகுபதி  குறுக்கீடு: இந்த சம்பவம் குறித்து முதல மைச்சர் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தர விட்டுள்ளார். நீதிமன்றமும் தலையிட்டுள்  ளது. மேலும், நீதிபதி தலைமையிலும் விசாரணை துவங்கியுள்ளது. விரைந்து குற்றவாளிகளை கண்டுபிடித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். எம்.சின்னதுரை: திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு ஒன்றியம், தென்முடியனூர் கிராமத்தில் ஆலய வழிபாட்டு உரிமையை அரசு உறுதிப்  படுத்திய பிறகும் மீண்டும் கோவில் மூடப் பட்டது. அதன் உரிமையை கேட்டதற்  காக பேராசிரியர் முருகன் மிரட்டப்பட் டுள்ளார். ஒரு கடைக்கு தீ வைத்து எரித்  துள்ளனர். வழக்குகள் பதிவு செய்யப் பட்டு நடவடிக்கை எடுத்து வரும்போதே உரிமைகள் மறுக்கப்படுகிறது. அமைச்சர் எ.வ.வேலு: அரசும், மாவட்ட நிர்வாகமும் தலையீடு செய்து  தலித் மக்களை கோவிலுக்கு அழைத்து  சென்றது. மேலும், அந்த மக்கள் வழி படவும் அனைத்து வழிவகைகளையும் செய்து கொடுத்தது. எம்.சின்னதுரை: இப்பிரச்சனையில் அரசு தலையீடு செய்து முத்து மாரி யம்மன் கோவில் வழிபாட்டு உரிமையை உறுதிப்படுத்த வேண்டும். அங்கு வாழும்  தலித் மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். பட்டியலின ஊராட்சி மன்றத் தலைவர்கள் மீதான பாரபட்சம், பாகு பாடுகள் களைவதற்கு மாவட்ட ஆட்சி யர்கள் மூலமாக உரிய நிர்வாக அறி வுறுத்தல்களை செய்து ஜனநாயகப் பூர்வமாக செயல்படுவதை அரசு உறு திப்படுத்த வேண்டும்.

சாதிமறுப்பு திருமணம் செய்தால் கொலை

தஞ்சாவூர் மாவட்டம், சோழபுரம் பேரூராட்சியில் சாதி மறுப்பு திருமணம் செய்த சரண்யா, மோகன் கௌரவக் கொலை செய்யப்பட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங் கரை அடுத்த அருணபதி கிராமத்தைச் சார்ந்த சுபாஷ் என்பவர் வேறு சமூ கத்தைச் சார்ந்த அனுசியா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். சாதி மறுப்பு திருமணம் செய்ததற்காக  இரட்டை கொலை நடந்துள்ளது. பெற்றத்  தாயை கொலை செய்யும் அளவிற்கு சாதிய வெறித்தனம் நீடிக்கிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில்  கூறப்பட்டுள்ள அடிப்படை உரிமை களான வாழ்வதற்கான உரிமை, அதி லும் குறிப்பாக தன் உடலின் மீதான சுதந்தி ரம் மற்றும் யாருடன் இருக்க வேண்டும்,  வாழ வேண்டும் என்ற உரிமைகள் வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற கருத்து சுதந்திரத்தை முடமாக்குகிறது. சாதி, மத, இன வகுப்பு அடிப்படை யில் உயர்வு-தாழ்வு கருதி கவுரவ கொலை உள்ளிட்ட குற்றச் செயல்களை  தடுத்திட தனிச் சட்டம் இயற்றிட வேண்  டும். இது குறித்து 29.5.2015 அன்று பேர வைச் செயலகத்தில் அப்போதைய சிபிஐ(எம்) சட்டமன்றக்குழுத் தலைவர் அ.சவுந்தரராசன் சமர்பித்ததையும் தமிழ்நாடு அரசு கணக்கில் கொள்ள வேண்டும். சாதி மறுப்பு திருமணங்கள் செய்த வர்களுக்கு வழங்கப்படும் பணப் பயன்  ரூ. 2 லட்சமாக உயர்த்த வேண்டும். அர சுப் பணிகளில் முன்னுரிமை வழங்க வேண்டும். உசிலம்பட்டி விமலாதேவி வழக்கில் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள படி அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு பிரிவுகளை ஏற்படுத்தி செயல்படுத்த வேண்டும்.

துப்புரவு பொறியியல் துறை துவக்குக!

மலக்குழிகளில் தொழிலாளர்கள் மரணமடைவதை தடுக்க வேண்டும். புதிய தொழில்நுட்பங்களையும், எந்தி ரங்களையும், கருவிகளையும் உரு வாக்கி மலக்குழி மரணங்களை தடுக்க  விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். உலகின் பல நாடுகளில் உயர்கல்வி யில் ஒரு துறையாக துப்புரவுப் பொறியி யல் துறை உள்ளது. தமிழ்நாட்டிலும் அண்ணா பல்கலைக் கழகத்தில் துப்புர வுப் பொறியியல் துறை துவக்க வேண்  டும். திண்டுக்கல், வேடசந்தூர் ஒன்றியம்  நாகையன்கோட்டையில் தலித் பெண் கள் இருவர் கடத்தப்பட்டது.... பேரவைத் தலைவர் மு.அப்பாவு: அது குறித்து வழக்குப் பதிவு செய்து  இருக்கிறார்கள் அந்த விவகாரம் காவல்  துறை நீதித்துறை சம்பந்தப்பட்டதாகும். எம்.சின்னதுரை: பாதிக்கப்பட்ட வர்கள் கூறுகிற அனைத்து வழக்குகளி லும் அரசு சிறப்பு வழக்கறிஞர்களை நிய மிக்க வேண்டும். அருந்ததிய மக்களுக்கு இளை யான்குடியில் வீடு கட்ட தடை.  கும்மி டிப்பூண்டி, நங்கவள்ளி பேரூராட்சியில் மயான வசதி மறுப்பு, பொதுவாக அருந்ததிய மக்கள் பிரச்சனைகளை தீர்ப்பதற்கும், குடியிருப்பு பகுதியில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுக்க வேண்டுகிறேன். அனைத்து துறைகளிலும் பின்ன டைவு காலிப் பணியிடங்கள், அருந்ததி யர் உள் ஒதுக்கீடு காலிப் பணியிடங்கள் நிரப்ப வேண்டும். தூய்மை காவலர், அலுவலக காவலர், தபால், டெங்கு கொசு ஒழிப்பு, கடைநிலை ஊழியர்கள் அனைவரும் அரசுப் பணியாளர்களாக நியமிக்க வேண்டும். பஞ்சமி நிலம் - பட்டியலின மற்றும்  பழங்குடி மக்களுக்காக வழங்கப்பட்ட  நிலங்கள் விதிகளை மீறி ஆக்கிரமிக் கப்பட்டுள்ளதை கண்டறிந்து பயனாளி களிடம் ஒப்படைக்க வேண்டும்.

ஒரே ஊர் ஒரே சுடுகாடு

சாதியின் அழிக்க முடியாத அடை யாளமாக இருக்கிற சாதிக்கு ஒரு மயா னம் என்கிற முறையை தவிர்த்து “ஒரே  ஊர் - ஒரே சுடுகாடு” என்கிற சமத்துவ மயா னங்களை அமைக்க அரசு முன்வர வேண்டும். கல்வித்துறைக்கும், காவல்துறைக் கும் இனசுழற்சி அடிப்படையில் 2012 ஆம் ஆண்டு வேலைவாய்ப்பு அலுவல கத்தின் மூலமாக தூய்மைக் காவலர் பணி  நியமனம் செய்யப்பட்டது. கல்வித்துறை யில் சேர்ந்தவர்களை பணி நிரந்தரம்  செய்து விட்டனர். ஆனால்  காவல்துறை யில் சேர்ந்தவர்களை 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. பாரபட்சமில்லா மல் காவல்துறையில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களை பணி நிரந்த ரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பழங்குடியினருக்கான வாழ்வாதார உரிமையான வன உரிமைச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்தி பழங்குடி மக்களின் அனுபவ நிலங்களுக்கு நில உரிமைச் சான்று வழங்க வேண்டும்.

பழங்குடியினச் சான்று

பழங்குடியினர் பட்டியலில் புலை யன், ஈரோடு மலையாளி, வேட்டைக் காரன், குறவன் இனத்தின் உட்பிரிவு கள், குருமன்ஸ் இனத்தின் உட்பிரிவு களை பழங்குடியினர் பட்டியலில் இணைத்திட வேண்டும். பழங்குடியினருக்கான வாழ்வாதார உரிமையான வன உரிமைச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்தி பழங்குடி மக்களின் அனுபவ நிலங்களுக்கு நில உரிமைச் சான்று வழங்க வேண்டும். பழங்குடியினர் பட்டியலில் புலை யன், ஈரோடு மலையாளி, வேட்டைக்கா ரன், குறவன் இனத்தின் உட்பிரிவுகள், குருமன்ஸ் இனத்தின் உட்பிரிவுகளை பழங்குடியினர் பட்டியலில் இணைக்க வேண்டும். பழங்குடியின மக்கள் இனச்சான்றி தழ் பெறும் முறையை எளிதாக்கிட வேண்டும். நேரடியாக விண்ணப்பங்கள் பெற்று உரிய காலத்தில் வழங்க வேண்டும்.

அரசு கல்லூரி, மாதிரி பள்ளிகள்

சேலம் அல்லது விழுப்புரம் மாவட்  டத்தை மையப்படுத்தி பழங்குடி மாண வர்களுக்கான அரசு கலைக்கல்லூரிகள் திறக்க வேண்டும். பழங்குடி மக்கள் வாழும் 16 மாவட்  டங்களிலும், தருமபுரி, கரூர் ஏகலைவா மாதிரிப்பள்ளிகள் திறக்க வேண்டும். சேலம் மாவட்டம், ஏற்காடு மலைக்கு உட்பட்ட மாரமங்கலம் பகுதியில் உள்ள  18 கிராமங்களில் பழங்குடியின மக்கள்  வசித்து வருகின்றனர். இவர்கள் அப்பகு தியில் உள்ள 6ஆம் நம்பர் பீல்டு வழிச்  சாலையை காலங்காலமாக பயன் படுத்தி வந்துள்ளனர். தற்போது அங் குள்ள எஸ்டேட் முதலாளி மண்சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இதுசம்பந்தமான வழக்கில் சேலம் முதன்மை நீதிமன்றம் மண் சாலை அமைக்க வேண்டுமென தீர்ப்பு  கூறியும், மாவட்ட நிர்வாகம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் கிடப்பில் போட்டு வருகிறது. இதனால் அங்கே பதற்றம் நிலவுகிறது. முதல மைச்சர் உடனடியாக தலையிட்டு பழங்குடியின மக்களின் கோரிக்கையை நிறைவேற்றித் தர வேண்டும்.

சிப்காட் தொழிற்பூங்கா

புதுக்கோட்டை மாவட்டத்தில் 1990க்கு பிறகு கட்டப்பட்ட தொகுப்பு வீடுகள் அனைத்தும் சேதம் அடைந்  துள்ளன. அந்த வீடுகள் அனைத்தை யும் புதுப்பிப்பதற்கு அரசு உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும். புதுக்கோட்டை மாவட்டத்தில் கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதி என்பது மிகவும் பின் தங்கிய தொகு தியாகும். இதனால் வேலை வாய்ப்  புக்கு செல்ல முடியாமல் இளைஞர்கள் தவிக்கிறார்கள். வான் மழையை நம்பியே வாழக்கூடிய ஒரு தொகுதி யாக இருக்கிறது. இதனால், நிலத்தடி  நீர் ஆதாரம் குறைந்து கொண்டிருக்கி றது. ஆகவே சிப்காட் பூங்கா ஒன்றை  துவங்க வேண்டுமென்று கேட்டுக்கொள் கிறேன். மேலும் எனது தொகுதி மிகவும்  கிராமப்புற பகுதிகளை உள்ளடக்கிய தாகும். எனவே, கோட்டாட்சியர் அலு வலகம் அமைத்து கொடுக்க வேண்டும். மேலும், கந்தர்வக்கோட்டையை மையப்  படுத்தி துணை கண்காணிப்பாளர் அலு வலகம் துவக்க வேண்டும். கிராமப்புற மக்கள் அதிகமாக இருக்கும் இடங்களில் ஒவ்வொரு ஊராட்சிக்கும் ஒரு சமுதாயக் கூடம்  அமைத்து கொடுப்பதற்கு ஆதி திரா விடர் நலத்துறை முன்வரவேண்டும். உழைக்கும் மக்களுக்காக ஏழை-எளிய மக்கள் போராடுவதற்கு காவல்துறை அனுமதி மறுக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.