பால சாகித்ய புரஸ்கார் விருது பெற்ற கவிஞர் மு.முருகேஷ்; சிறந்த புதினத்திற்கான முத்தமிழறிஞர் கலைஞர் மு. கருணாநிதி பொற்கிழி விருது பெற்ற அவரது இணையர் அ. வெண்ணிலா ஆகியோரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் பி. சம்பத் ஆகியோர் சால்வை அணிவித்து தங்களது வாழ்த்துக்களையும், பாராட்டுதல்களையும் தெரிவித்தனர்.
இச்சந்திப்பின் போது மு. முருகேஷ், பால சாகித்ய புரஸ்கார் விருது பெற்ற “அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை” என்ற தனது புத்தகத்தை கே. பாலகிருஷ்ணனுக்கு வழங்கினார்.