சிபிஎம் அந்தநல்லூர் ஒன்றியச் செயலாளராக எம்.கருணாநிதி தேர்வு
திருச்சிராப்பள்ளி, ஜுன் 10- சிபிஎம் திருச்சி மாநகர் மாவட்டம் அந்தநல்லூர் ஒன்றியக் குழுக் கூட்டம், ஜீயபுரம் கட்சி அலுவலகத்தில் தோழர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் எஸ். ஸ்ரீதர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பா. லெனின் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் அந்தநல்லூர் ஒன்றியச் செயலாளராக எம்.கருணாநிதி தேர்வு செய்யப்பட்டார். அந்தநல்லூர் ஊராட்சியில் நூறு நாள் வேலை திட்டத்தை முழுமையாக அமல்படுத்தி முறையான ஊதியம் வழங்க வேண்டும். திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் மனித உயிர் பலியாவதை தடுத்திட உரிய சாலை விரிவாக்கம் செய்து பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.