நாகப்பட்டினம், டிச.17 - நாகப்பட்டினத்தை அடுத்த தெற்கு பொய்கைநல்லூர் ஊராட்சியில் கடல் நீர் ஊருக்குள் புகுவதால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகிறது. இதை நாகைமாலி எம்எல்ஏ நேரில் சென்று ஆய்வு செய்தார். நாகப்பட்டினம் மாவட்டம் தெற்கு பொய் கைநல்லூர் ஊராட்சி கடலோர கிராமம் ஆகும். வடகிழக்கு பருவமழை செய்து வரும் சூழலில் வெள்ள நீர் வடிய வைக்கும் வடி கால் வழியாக உவர் நீரானது வெள்ளக் காலங் களில் ஊருக்குள் வந்து விடுகிறது. ஊருக் குள் வரும் கடல் நீரானது விவசாயம் செய்கிற பகுதிகளிலும். மக்கள் குடியிருக்கும் பகுதி களிலும் சூழ்ந்து விடுகிறது. இதனால் சாகுபடி செய்த பயிர்கள் கருகி விடுகின்றன. கடல்நீர் மீண்டும் வடியாமல் விவ சாய நிலங்களிலேயே தங்கி விடுவதால் மண் வளம் பாதிப்புக்கு உள்ளாகிறது. நாளடை வில் சாகுபடி செய்ய முடியாத நிலைக்கு மண்வளம் மாறிவிடுகிறது.
பிறகு எந்த சாகு படியும் செய்ய முடியாமல் வறண்ட பூமியாக மாறி எதற்கும் பயனற்ற நிலையில் கிடக் கிறது. மாதத்திற்கு இரண்டு முறை ஊருக்குள் தண்ணீர் வந்து செல்வதும், வெள்ள காலங் களில் வடிகால் வழியாகவே விவசாயப் பகுதிக்கு கடல்நீர் புகுவதும் வாடிக்கையாகி விடுகிறது. இப்படி கடல்நீர் அடிக்கடி ஊருக்குள் வரும் பட்சத்தில் நிலத்தடி நீர்மட்டத்தின் அளவில் மாற்றம் ஏற்பட்டு நாள டைவில் குடிநீரும் உப்பு நீராக மாறி விடக் கூடிய அபாயமும் உள்ளது. பாதிப்புக்கு உள்ளான அந்த பகுதியை கீழ்வேளூர் எம்எல்ஏ நாகைமாலி நேரில் சென்று ஆய்வு செய்தார். இப்பகுதி விவசா யிகளிடமும், பொதுமக்களிடமும் கோரிக்கை களை கேட்டறிந்தார். கடல் முகத்துவாரமான வெள்ள நீர் வடியும் இடத்தில் கதவணை கட்டி தருமாறு மக்கள் கோரிக்கை வைத்தனர். கோரிக்கையை ஏற்று அரசு அதிகாரிகளின் ஆலோசனைப்படி கட்டித் தரப்படும் என வாக்குறுதி அளித்தார். ஆய்வின்போது சிபிஎம் மாவட்ட செயற் குழு உறுப்பினர் ப.சுபாஷ் சந்திரபோஸ், நாகை நகர குழு உறுப்பினர் வி.சுந்தர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் ஒன்றிய கவுன்சிலர் ஆகியோர் உடனிருந்தனர்.