tamilnadu

img

லோக் ஆயுக்தா தலைவர், உறுப்பினர்கள் பதவியேற்பு

லோக் ஆயுக்தா தலைவர், உறுப்பினர்கள் பதவியேற்பு

தமிழ்நாடு லோக் ஆயுக்தாவின் தலைவ ராக நீதியரசர் பி.ராஜமாணிக்கமும், உறுப்பி னர்களாக நீதிபதிகள் வீ.ராமராஜ், ஆறுமுக  மோகன் அலங்காமணி ஆகியோரும் செவ்வாயன்று (மார்ச் 4) சென்னை கிண்டி யில் உள்ள லோக் ஆயுக்தா அலுவலகத்தில் பதவியேற்றுக் கொண்டனர். மாநில அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பி னர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அலுவலர்கள் உள்ளிட்டோர் மீதான ஊழல் புகார்களை  லோக் ஆயுக்தா விசாரித்து வருகிறது.  லோக் ஆயுக்தாவின் தலைவராக பொறுப் பேற்றுக் கொண்ட பி.ராஜமாணிக்கம் சென்னை உயர் நீதிமன்ற நீதியரசராக பணி யாற்றி 2021 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். அதன்பின் லோக்  ஆயுக்தா உறுப்பி னராக நியமிக்கப் பட்ட அவர், அதன் பொறுப்புத் தலைவராக இருந்தார். தற்போது  தலைவராக நியமிக்கப்பட்டு உள்ள அவர்  2027 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை  இந்த பொறுப்பில் இருப்பார். உறுப்பினர்கள் லோக் ஆயுக்தா உறுப்பினராக நிய மிக்கப்பட்ட நீதிபதி வீ.ராமராஜ், திண்டுக்கல்  மாவட்டம் பழனி அருகே உள்ள கணக்கன் பட்டி கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். நீதி நிர்வாகத்தில் முனைவர் பட்டமும், காவல் நிர்வாகத்தில் இளம்  முனைவர் பட்டமும் பெற்றவர். அரசிய லமைப்பு மற்றும் சர்வதேச சட்டம், தொழிலா ளர் நலன் மற்றும் நிர்வாக சட்டம், குற்ற வியல் மற்றும் காவல் நிர்வாகம், பொது  நிர்வாகம், அரசியல் அறிவியல், குற்ற வியல் நீதி, குழந்தைகள் உரிமைகள் மற்றும்  பாதுகாப்பு ஆகியவற்றில் முதுநிலை பட்டங்கள் உட்பட 15 பட்டங்கள் பெற்று உள்ளார். 30 ஆண்டுகள் வழக்கறிஞராக பணி யாற்றிய அவர், தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் ஆணையத்தில் உறுப்பினராக வும், அரியலூர் மற்றும் நாமக்கல் மாவட்டங் களில் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவராகவும் பணிபுரிந்தவர். இவர் 2030 ஆம் ஆண்டு வரை உறுப்பி னராக தொடர்வார். மற்றொரு உறுப்பினர் நீதிபதி ஆறுமுக மோகன் அலங்காமணி, கன்னியாகுமரி மாவட்டத்தில் 1960 ஆம் ஆண்டில் பிறந்த வர். வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பா யத்தில் 14 ஆண்டுகள் உறுப்பினராக பணி யாற்றி ஓய்வு பெற்றவர். இவரும் லோக் ஆயுக்தா உறுப்பினராக பதவி ஏற்றுக் கொண்டுள்ளார்.