பொங்க வைப்போம்
மாமா பொங்க வைப்போம்
எல்லோரும் ஒன்றென்றே
சொல்லி வைப்போம்
மஞ்ச கொண்டா!
மாமா இஞ்சி கொண்டா!
மாவிலை தோரணம்
சேர்த்து கொண்டா!
பாலு பொங்க மாமா
வீடு பொங்க பார்க்கும்.
இடமெல்லாம் மகிழ்ச்சி பொங்க.
பொங்க வைப்போம் மாமா
பொங்க வைப்போம்.
எல்லோரும் ஒன்றென்றே
சொல்லி வைப்போம்
குப்பைகள ஒண்ணா
சேர்த்து வச்சி கொளுத்திடும்
நாளத்தான் போக. என்போம்
தப்புகள எல்லாம் தட்டி கேட்கும்
தைரியம் பெரும்நாளாய்
ஆக்கி வைப்போம்.
பொங்க வைப்போம் மாமா
பொங்க வைப்போம்.
எல்லோரும் ஒன்றென்றே
சொல்லி வைப்போம்
மாரி காலத்தில் பார் வானத்துல
மக்கள மயக்க வரும் வானவில்லு
மாறி வரும் நம்ம தேசத்துல
பண்பாடும் அதுதான்னு
தெரிந்து கொள்ளு.
வெல்லம் முந்திரி ஏலம் சேர்ந்தே
வேகிற பொங்கலில்
வாசம் வரும்
அல்லா ராமர் ஏசு
மக்கள் அனைவரும்
ஒன்றானால் பாசம் வரும்.
மார்கழி வாசலில்
கோலம் போட்டு
மலர்கள வச்சே அலங்கரிச்சோம்-
நம் மன வாசலை
அன்பு கொண்டே நிரப்பினால்
சிறப்புண்டு உணர்ந்து கொள்வோம்
பொங்க வைப்போம் மாமா
பொங்க வைப்போம்.
எல்லோரும் ஒன்றென்றே
சொல்லி வைப்போம்
-ஜீவி