தமிழ்நாட்டு தொழிலாளி வர்க்க முக்கிய தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவர். மாணவப் பருவத்திலேயே பொதுவுடைமை இயக்கத்தில் இணைந்து செயலாற்றியவர். தலைமறைவு வாழ்க்கையும், நீண்ட சிறை வாழ்க்கையும் அவரது இயக்கப் பணிக்கு இடையூறாக இருக்கவில்லை. சென்னை சதி வழக்கு, திருச்சி சதி வழக்கு ஆகியவற்றில் தண்டனை பெற்றவர். நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் திறம்பட செயலாற்றியவர். கிளர்ச்சி பிரச்சார பேச்சாளர். சிஐடியு தலைவராக சிறப்பாக பணியாற்றியவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு, மத்தியக் குழு, அரசியல் தலைமைக் குழு ஆகியவற்றில் நீண்டகாலம் பணியாற்றியவர். அவரது வழியில் மக்கள் பணியில் ஈடுபட உறுதியேற்போம்.
மே 21 - தோழர் ஆர்.உமாநாத் நினைவுநாள்