tamilnadu

img

‘இரவும் எமக்கானதே!’ பாலின சமத்துவ நடை!

‘பாலின பாகுபாடற்ற சமத்துவ சமுதாயத்தை ஒன்றிணை ந்து உருவாக்க செயல்படுவோம்’ எனும் முழக்கத்தோடு சனிக்கிழமையன்று (நவ.16) இரவு 10 மணிக்கு சென்னை சிம்சன் பெரியார்  சிலையில் இருந்து, உழைப்பாளர் சிலை வரை பாலின சமத்துவ நடை ஊர்வலத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அழைப்பு விடுத்திருந்தது.

அதிரவைத்த பறை இசை

இதில் திரைக் கலைஞர்கள், படைப்பாளி கள், இலக்கியவாதிகள், பல்வேறு ஆளுமை கள், பெண்கள் ஏராளமானோர் திரண்டனர். பறை இசை அதிர, பாலின சமத்துவக் கருத்துக் கள் முழங்க தொழிற்சங்கத் தலைவர் அ.சவுந்தர ராசன், திரைக்கலைஞர் ரோகிணி, தமுஎகச பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா, சிபிஎம் மத்திய சென்னை மாவட்டச் செய லாளர் ஜி.செல்வா உள்ளிட்டோர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர். உறுதியேற்பு இதனை தொடர்ந்து குழந்தைகள், மாண வர்களை முன்னிறுத்தி தலைவர்கள் ஊர்வலத்தை தொடங்கினர். அனுமதி மறுத்து காவல்துறையினர் ஊர்வலத்தை தடுத்தனர். இதனையடுத்து அண்ணாசாலையில் நூற்றுக் கணக்கானோர் அமர்ந்து நிகழ்வை தொடங்கி னர். காம்ரேட் டாக்கீஸ் கேங்ஸ்டா பாடல்கள், அபிஷா, நேயா இருவரின் அசத்தலான ராப் பாடல்கள், மாற்று ஊடகத்தின் பறையாட்டம், கானா பாடல்கள் என குழுமியிருந்தோரை துள்ளிட வைத்தது.  இதனை தொடர்ந்து உறுதியேற்பு நிகழ்வு நடைபெற்றது. பாதுகாப்பான சமூகம் அப்போது செய்தியாளர்களிடம் பேசிய திரைக்கலைஞர் ரோகிணி, “குற்றச்சாட்டுகள் அதிகமாக சொல்லப்படுகிறதா? குற்றங்கள் அதிகரித்துள்ளதா? தெரியவில்லை. பெண்க ளுக்கு பாதுகாப்பற்ற நாடாகவே இந்தியா உள்ளது. இதை சரி செய்ய வேண்டிய கட்டா யத்தில் அரசு உள்ளது. இந்த இரவும் எங்களுக் கானது, எல்லோருக்குமானது, பெண்களுக்கு மானது. இரவு நேரங்களில் பெண்கள் வெளியே நடமாடக் கூடாது என்கின்றனர். பெண்களுக்கு பாதுகாப்பானதாக இந்த சமூகம் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த நடை நடத்தப்படுகிறது” என்றார்.

யாருக்கும் சமத்துவம் இல்லை

“சமத்துவம் என்ற வார்த்தை உச்சரிப்பில் மட்டுமே உள்ளது. எல்லா தலைவர்களும் சமத்துவம் என்று உச்சரிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். சட்டத்தின் முன்னால் அனைவரும் சமம். தெய்வத்தின் முன்னாள் எல்லாம் சமம். ஆனால் அப்படி எதுவும் இல்லை. பாலின சமத்துவமும் இல்லை. சமத்துவம் யாருக்கும் இல்லை. எனவேதான் இதுபோன்ற பாலின சமத்துவ நடையை நடத்துகிறோம்.

70 விழுக்காடு...

தொழிலாளியை முதலாளி அடக்குகிறான். ஆனால், பெண்களை வீட்டில் உள்ளவர்களே அடக்குகிறார்கள். யாரை நம்பி வந்தார்களோ, யாரை காவலர்கள் என்று பெண்கள் நினைக் கிறார்களோ அவர்களே அடக்குகிறார்கள். இன்றைக்கு 70 விழுக்காடு பெண்கள் ஏதோ ஒரு வகையில் பாலின ஒடுக்குமுறைக்கு உள்ளா கிறார்கள். நாகரிக சமூகத்தில், ஏராளமான சட்டங்கள் உள்ளபோதும் இது நீடிப்பதற் கான காரணம் என்ன? உள்ளத்து அளவிலேயே பாலின சமத்துவம் அவசியம் என்பதை மக்களி டத்தில் பதிய வைக்க வேண்டி உள்ளது. அதற்காக இந்த நிகழ்வு நடத்தப்படுகிறது” என்று சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தர ராசன் கூறினார். இதையடுத்து பேசிய சிபிஎம் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, “இரவு நேரத்தில் பேரணி நடத்தினால் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்துவிடும், போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்படும் என்று  கதை சொல்லி காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. ஹாப்பி ஸ்டீட் நடத்தினால் அனுமதி தருகிற காவல்துறை இந்நிகழ்வுக்கு அனுமதி மறுத்துள்ளது. அரசு செய்ய வேண்டி யதை மக்கள் இயக்கமான மார்க்சிஸ்ட் கட்சி செய்கிறது. காவல்துறையில் உள்ள பாலின ஒடுக்குமுறைக்கு  எதிராகவும் மார்க்சிஸ்ட் கட்சி குரல்எழுப்புகிறது”என்றார். தனியார் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றும் திருநங்கை மரக்கா, “மார்க்சிஸ்ட் கட்சியின் இந்த முன்னெடுப்பு மிகுந்த உற்சாகமும் நம்பிக் கையும் அளிக்கிறது” என்று பெருமிதத்தோடு கூறினார்.