இந்தியாவில் வேலை நேரத்தை உயர்த்த ஒன்றிய அரசும், தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநில அரசுகளும் முடிவெடுத்தன. தமிழகத்தில் வேலை நேர அதிகரிப்பை தொழிலாளர்களும் இடதுசாரிகளும் கடுமையாக எதிர்க்கிறார்கள். எதிர்ப்பைத் தொடர்ந்து தொழிற்சாலை சட்டத் திருதத மசோதா சட்டத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களின் உடல் நலன், மன நலன், ஆயுட்காலம் ஆகியவற்றை ஒதுக்கிவைக்கும் எந்த வளர்ச்சியும் வளர்ச்சியாகாது, வளர்ச்சியும் அடையாது. வேலை நேரம் உள்ளிட்ட எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் சரி, தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்கு “சங்கம்” என்கிற வலுவான “அமைப்பு ஆயுதம்” வேண்டும். சங்கங்களின் உரிமைகளைப் பறிப்பதற்கும் கூட்டுப் பேர உரிமையை மறுப்பதற்கும் முதலாளிகள் முயற்சிக்கிறார்கள். அதை எதிர்த்து அமெரிக்கா உள்ளிட்ட எல்லா நாடுகளிலும் போராட்டங்கள் வீறுகொண்டு எழுந்துள்ளன. இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் அந்தப் போராட்டப் பாரம்பரியத்தை தொடர்ந்து நடைமுறைப்படுத்த சபதமேற்போம்!