புதுதில்லி, ஆக.22 - கொள்ளை லாபம் ஈட்டுபவர்களிட மிருந்து மக்களையும், இயற்கையை யும் பாதுகாத்திட உறுதியேற்போம் என்று ‘நாம்-20 (We-20)’ என்னும் பதாகையின்கீழ் நடைபெற்ற 70க்கும் மேற்பட்ட அமைப்புகளின் உச்சி மாநாடு உறுதி ஏற்றுள்ளது. தில்லியில் உள்ள தோழர் ஹர்கிசன் சிங் சுர்ஜித் பவனில் ‘நாம்-20’ என்னும் பதாகையின்கீழ் 70க்கும் மேற்பட்ட அமைப்புகளின் சங்கமம் ஆகஸ்ட் 18 முதல் மூன்று நாட்கள் நடைபெற்றன. மாநாட்டில் சமூக செயற்பாட்டாளர்கள் டீஸ்டா செதல்வாத், மேதா பட்கர், பேரா.ஜெயதி கோஷ், மனோஜ் ஜா, ஹர்ஷ் மந்தர், பேரா.அருண் குமார், சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறு ப்பினர்கள் பிருந்தா காரத், ஹன்னன் முல்லா மற்றும் ராஜீவ் கவுடா, தாமஸ் பிராங்கோ உட்பட நாடு முழுவது மிருந்து 500க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றார்கள்.
உச்சி மாநாட்டில் பங்கேற்ற ஜனநாயக உரிமைகளுக்கான செயற் பாட்டாளர் டீஸ்டா செதல்வாத் பேசுகை யில், ஜனநாயகத்தின் தாய் என்று கூறப்பட்ட இந்தியாவில் தற்போது அரசின் குணம் மாறியிருக்கிறது என்றும், நாடாளுமன்றம் அரசமைப்புச் சட்டத்தை அரித்து வீழ்த்தும் வகை யில் பயன்படுத்தப்பட்டுக் கொண்டி ருக்கிறது என்றும் விமர்சித்தார். பொருளாதார வல்லுநர் பேரா.அருண்குமார் பேசுகையில், நம் நாட்டின் கொள்கைகளில் விளிம்பு நிலை மக்களின் நலன்கள் கண்டு கொள்ளப்ப டவில்லை என்றும் இது முற்றிலுமாக பணக்காரர்களின் நலன் களையே பிரதிபலிக்கிறது என்றும், நம் நாட்டின் ஆளும் வர்க்கம், ஜி.20 வள ரும் நாடுகளில் உள்ள ஆளும் வர்க்கங் களுடன் கைகோர்த்துக்கொண்டிருக் கிறது என்றும் கூறினார். ஆட்சியாளர்கள் என்னதான் சலுகைகள் வழங்கிய போதிலும் தனி யார் நிறுவனங்கள் அரசு விரும்பும் துறைகளில் முதலீடு செய்ய முன்வரத் தயாரில்லை என்று ராஜீவ் கவுடா கூறினார். ராஷ்ட்ரிய ஜனதா தளத்தைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் மனோஜ் ஜா பேசுகையில், பாசி சத்திற்கு எதிரான போராட்டத்தை வீதி களிலிருந்து நாடாளுமன்றம் வரை நடத்திட வேண்டும் என்றார். ஹர்ஷ் மந்தர் பேசுகையில், “2024இல் ஒன்றிய அரசாங்கம் மாற வில்லை என்றால், மணிப்பூரின் கதை நம் அனைவரின் கதைகளாக மாறி விடும்” என்றார். ‘நாம் 20’ உச்சி மாநாடு மூன்று நாட்கள் நடைபெறுவதாக இருந்தது. எனினும் காவல்துறையினரின் கெடு பிடியால் மூன்றாவது நாள் நிகழ்வு களைத் தொடர முடியவில்லை. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. (ந.நி.)