தொகுதி மறுசீரமைப்பு சதித்திட்டத்தை எதிர்ப்போம்!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24ஆவது அகில இந்திய மாநாடு மதுரையில் வரும் ஏப்ரல் 2 முதல் 6 வரை நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு பெரம்பலூரில் கட்சியின் சார்பில் சிறப்பு கருத்தரங்கம் மற்றும் நிதியளிப்பு கூட்டம் சனிக்கிழமை அன்று நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் பி.ரமேஷ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ் வில், பெரம்பலூர் மாவட்டக் குழு சார்பில் ரூ.5 லட்சம் நிதியை கட்சி யின் மாநிலச் செயலாளர் பெ. சண் முகத்திடம் வழங்கினர். மாநிலக் குழு உறுப்பினர் சாமி.நடராஜன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் என்.செல்லதுரை, ரெங்கநாதன், ஏ.கே. ராஜேந்திரன், கலையரசி ஆகியோர் வர விருக்கும் மாநாடு குறித்து எடுத்துரைத் தனர்.
தமிழக அரசின் வாக்குறுதிகள் நிறைவேற வேண்டும்
நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், “மத்தியில் ஆளும் அரசால் மாநில அரசுக்குப் பாதிப்பு ஏற்பட்டால், தமிழக அரசுடன் கைகோர்த்து ஒன்றிய அரசை எதிர்த்துப் போராடுவோம். அதே வேளையில், தமிழக அரசால் பொது மக்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டால் மக்களோடு மக்களாக நின்று போராடு வோம். திமுக அரசு தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளில் 78% நிறை வேற்றியதாகக் கூறுகிறது; மீதமுள்ள 22% வாக்குறுதிகளையும் இன்னும் ஓராண்டுக்குள் நிறைவேற்ற வேண்டும். குறிப்பாக, பழைய ஓய்வூதி யத் திட்டத்தை அரசு அமல்படுத்த வேண்டும்
” என பேசினார். தொகுதி மறுசீரமைப்பு - தென்மாநிலங்களுக்கு பாதிப்பு
நிகழ்வின் பின்னர் செய்தியா ளர்களைச் சந்தித்த பெ. சண்முகம், “ஒன்றிய அரசின் தொகுதி மறு சீரமைப்பு சதித்திட்டத்திற்கு எதிராக, பாதிக்கப்படக்கூடிய மாநிலங்களின் முதலமைச்சர்கள் கலந்துகொள்ளும் மாநாடு சென்னையில் நடைபெறுவது நல்ல முன்முயற்சி. மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுசீர மைப்பு செய்தால் தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களின் நாடாளுமன்ற தொகுதிகள் எண் ணிக்கை குறையும் அபாயம் உள்ள தாகவும், ஒன்றிய அரசு தன்னிச்சை யாக முடிவெடுக்காமல் அகில இந்திய அளவில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி கருத்துக்களைக் கேட்டு முடிவெடுக்க வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தினார்.
பாஜக மாநிலங்களில் முதலில் போதைப்பொருள் தடுக்கப்பட வேண்டும்
தமிழகத்தில் பாஜக நடத்தும் டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டம் குறித்து கேட்டபோது,”அண்ணாமலை நடத்தும் போராட்டம் ஒரு நாடகம். அவருக்கு டாஸ்மாக்கை எதிர்ப்ப தற்கு எந்தவித தார்மீக உரிமையும் இல்லை. முதலில் பாஜக ஆளும் மாநிலங்களில் போதைப்பொ ருள்களைத் தடுக்கட்டும். போதைப் பொருள் கட்டாயம் தடுக்கப்பட வேண்டும் என்பதில் மாறுபட்ட கருத்து இல்லை என்றும், ஆனால் அர சாங்கமே இதுபோன்ற விற்பனையில் ஈடுபடுவதை தடுக்க வேண்டும் என்பதும் முக்கியம் என்றும் கூறினார். குறிப்பாக,”வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூடுதலான தொகுதிகளில் போட்டியிடும்” என்றும் உறுதிபட தெரி வித்தார். நடிகர் விஜய் தலைமையிலான தவெக கட்சியின் ‘ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு’ என்ற அழைப்பு குறித்து கேட்டபோது,” அவர் இப்போது தான் அரசியலில் நுழைந்திருக்கிறார். இன்னும் வளர வேண்டியது எவ்வளவோ இருக்கிறது. ஆனால் கட்சி ஆரம்பித்தவுடனே நேரடியாக முதலமைச்சர் ஆக நினைப்பது சாத்தி யமில்லை” என்று குறிப்பிட்டார். தமிழ்நாட்டில் தற்போது பதிவு செய்யப்பட்ட 63 கட்சிகளுடன், பதிவு செய்யப்படாத கட்சிகளும் இருப்ப தாகவும், இவற்றுக்கிடையே தமிழக வெற்றி கழகமும் ஒன்று என்றும் பெ.சண்முகம் தெரிவித்தார். எஸ்.அகஸ்டின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.