பனாஜி, பிப்.14- உத்தராகண்ட், கோவா சட்டப் பேரவைத் தேர்தல்களுக்கான ஒரே கட்ட வாக்குப்பதிவு திங்களன்று காலை துவங்கி யது. உத்தரகண்டை விட கோவா மாநிலத் தில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடை பெற்றது. மாலை 5 மணி நிலவரப்படி 40 தொகுதிகளை கொண்ட கோவாவில் 75.29% வாக்குகள் பதிவாகின. 70 தொகுதிகளை கொண்ட உத்தரகண்டில் 59.37% வாக்குகள் பதிவாகியுள்ளன. உத்தரப்பிரதேசம் : 60.44% உத்தரப்பிரதேசத்தில் 2-ஆம் கட்டமாக சஹாரன்பூர், பிஜ்னோர், மொரதாபாத், சம்பல், ராம்பூர், அம்ரோஹா, படாவுன், பரெய்லி, ஷாஜஹான்பூர் ஆகிய 9 மாவட் டங்களுக்குட்பட்ட 55 தொகுதிகளில் திங்களன்று காலை வாக்குப்பதிவு தொ டங்கியது. மாலை 5 மணி நிலவரப்படி 60.44% வாக்குகள் பதிவாகின. 403 தொகுதிகளைக் கொண்ட உத்தரப்பிரதேசத் தில் முதல்கட்டமாக 58 தொகுதிகளில் கடந்த 10-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.