tamilnadu

img

தாய்மொழி வழிக்கல்வியே சிறந்தது!

சென்னை, செப். 3 - தாய்மொழி வழிக் கல்விதான் சிறந்தது என்று சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் கூறினார்.   ஒர்க்கர்ஸ் எஜூகேஷன் டிரஸ்ட் - சிஐடியு நடத்தும் நிர்மல்  தொடக்கப்பள்ளி மற்றும் உயர் நிலைப் பள்ளி ஆண்டு விழா சனிக் கிழமை (ஆக.31) பள்ளி வளா கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு தலைமை தாங்கி  பேசிய,  பள்ளியின் செயலாளரும், சிஐடியு மாநிலத் தலைவருமான அ.சவுந்தரராசன் பேசுகையில், “தாய்மொழி தமிழில் படித்தால் வேலை கிடைக்குமா என்று சந்தே கிப்பது தமிழகத்திற்கு ஏற்பட்ட துயரம். தாய்மொழி வழிக் கல்வி தான் சிறந்தது, சிந்தனையை தூண்டும், திறமையை வளர்க்கும். தாய்ப்பாலுக்கு இணையானது வேறு இல்லை. அதுபோல தாய்மொழி வழிக்  கல்வியை விட சிறந்தது வேறு இல்லை. தமிழ் மொழி வழி பாடப்பிரிவு கள் இருந்தாலும் அவர்களுக்கு ஒரு பாடமாக ஆங்கிலம் கற்றுத்தரப்படு கிறது. இருப்பினும், மக்கள் ஆங்கில வழிக் கல்வி வேண்டும் என்று கேட் கின்றனர். அதனையும் நிறைவேற்ற முயற்சிப்போம். தொழிலாளிகளின் உழைப்பில் உருவான பணத்திலி ருந்து பள்ளி நடத்தப்படுகிறது. அதற்கேற்ப குழந்தைகள் நன்றாக படிக்க வேண்டும்” என்றார். திரைப்பட இயக்குநர் சீனுராம சாமி பேசுகையில், “கிராமத்தில் அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படித்த மாணவன் நான். ஆசிரியர் கள்தான் நாடகம் நடத்தவும், நடிக்க வும் ஊக்குவித்தனர். ஆசிரியர்க ளால்தான் இன்றைக்கு உயர்ந்து நிற்கிறேன். ஆசிரியர்கள் திட்டினா லும், கடிந்து கொண்டாலும் அது மாணவர்களின் வளர்ச்சிக்குதான் என்பதை உணர்ந்து குழந்தைகளும், பெற்றோர்களும் இருக்க வேண்டும். மதிப்பெண்களை வைத்து குழந்தை களை மதிப்பிடாதீர்கள். இந்த தலைமுறை குழந்தைகள் நம்மை விட அறிவாளிகள் என்பதை புரிந்து கொள்ளுங்கள்” என்றார். இந்த நிகழ்வில் பள்ளியில் வருகை,  திறன் உள்ளிட்ட பலப்பிரிவுகளில் முன்னணியில் உள்ள மாணவர் களுக்கு பள்ளியின் செயலாளர் அ.சவுந்தரராசன் பரிசுகளை வழங்கி னார். குழந்தைகளின் கலைநிகழ்ச்சி யோடு விழா நடைபெற்றது.