tamilnadu

img

சைதை துரைசாமி மகன் உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி

சென்னை, பிப்.14- இமாச்சலப் பிரதேசத்தில் விபத்தில்  சிக்கி உயிரிழந்த, சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமி யின் மகன் வெற்றியின் உடல் சென்னை யில் செவ்வாயன்று (பிப்.13)  தகனம் செய்யப் பட்டது. வெற்றியின் உடல் தனி விமானம்மூலம் செவ்வாய் மாலை சென்னைக்கு கொண்டு வரப்பட்டு தாம்பரம் அருகே ராஜகீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக சுமார் 40 நிமிடம் வைக்கப்பட்டது. உறவினர்கள், அரசு  அதிகாரிகள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். பின்னர், பூக்களால் அலங்கரிக்கப் பட்ட வாகனத்தில் சி.ஐ.டி. நகரில் உள்ள சைதை துரைசாமியின் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி,  தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தர ராஜன், முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், அதிமுக பொதுச்செய லாளர் எடப்பாடி பழனிசாமி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன், விசிக தலைவர் தொல்.திருமா வளவன்,  பாமக தலைவர் அன்புமணி, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பா ளர் சீமான், அதிமுக முன்னாள் அமை ச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள்,  உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் வெற்றியின் உடல்  தி.நகர் கண்ணம்மாபேட்டை மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. சைதை துரைசாமி உறுதி அங்கு குழுமியிருந்த கூட்டத்தினரி டையே பேசிய சைதை துரைசாமி, தமது மகன் மறைவுக்கு நேரிலும் தொலைபேசி யிலும் இரங்கல் தெரிவித்த அனைத்து கட்சித் தலைவர்கள், முன்னாள் இன்னாள் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் ஆகியோ ருக்கு நன்றி தெரிவித்தார். மகனை இழந்தாலும் மனிதநேய அறக்கட்டளை உருவாக்கிய ஏராளமான ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் தான் தமக்கு மகன்- மகள் என்று கண்ணீர் மல்க கூறினார். தமிழகத்தில் இருந்து இந்திய ஆட்சிப் பணி, இந்திய வருவாய் பணிக்கும் தமிழக அரசின் உயர் பதவிகளுக்கும் ஏரா ளமான அதிகாரிகளை உருவாக்குவதே தமது கடமையாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.