tamilnadu

img

‘தூய இலக்கியவாதிகளின்’ விமர்சனங்களை படைப்புகளால் வீழ்த்தியவர் பா.செயப்பிரகாசம்

சென்னை, நவ. 10 - ‘தூய இலக்கியவாதி’களின் விமர்சனங் களை தனது படைப்புகளால் வீழ்த்தியவர் பா.செயப்பிரகாசம் என்று தலைவர்கள் புகழஞ்சலி செலுத்தினர். 1965 ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் முன்னணியில் நின்ற போது, கைது செய்யப்பட்ட 10 மாணவர்  தலைவர்களில் ஒருவரான பா.செயப்பிர காசம் அண்மையில் காலமானார். அவரது நினைவேந்தல் கூட்டம் புதனன்று (நவ.9) சென்னையில் நடைபெற்றது. தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கத்தின் சென்னை மாவட்டக் குழுக்க ளும், மனித உரிமைப் போராளி வழக்கறி ஞர் பி.வி.பக்தவச்சலம் அறக்கட்டளையும் இணைந்து இந்த நிகழ்வை நடத்தின. ச.தமிழ்ச்செல்வன் இந்நிகழ்வில் பேசிய எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் பேசுகையில், “கட்சி சார்ந்த படைப்பாளிகளுக்கு இலக்கி யம் வராது, பிரச்சாரமாகத்தான் எழுது வார்கள் என்ற பிரச்சாரத்தை முறியடித்த வர் பா.செயப்பிரகாசம். தூய இலக்கிய வாதிகள் என்று கருதி கொண்டிருக்கக் கூடியவர்களின் விமர்சனங்களை, அவதூறுகளை வீழ்த்துகிற படைப்புகளை படைத்தார். சூரியதீபன் என்ற பெயரில் எழுதி அவரது படைப்புகள் கலை அமை தியை குலைத்தன. அவர் குறித்த நினைவு களை தொகுதிக்கு மலராக கொண்டு வரலாம். அனைவரும் ஒன்றிணைந்து நிற்க  வேண்டிய தேவையை உணர்ந்து செயல் படுகிறோம்.

அவர் இறப்பதற்கு முன்பு எழுதிய உச்சிவெயில் நாவலை இணைந்து வெளியிடுவோம்’’ என்றார். தமுஎகச மாநில துணைத்தலைவர் சிகரம் ச.செந்தில்நாதன் பேசுகையில், 1965ல் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டம், 1967ல் ஆட்சி மாற்றம் ஏற்பட காரணமாக அமைந்தது. அந்த போராட்டத்தில் பங்கேற்ற பா.செயப்பிரகாசம், திராவிட இயக்க கருத்தியலில் இருந்து விடுபட்டு, படைப்பிலக்கியத்திற்கு வந்து வெற்றி கண்டார். இறுதிவரை இடதுசாரி படைப் பாளியாக இருந்தார் என்றார். தமுஎகச-வுடன் பா.செயப்பிரகாசம் முரண்பாடு கொண்டிருந்தார். படைப்பு சார்ந்த பிரச்சனைகளில் தமுஎகச தொடர்ந்து தலையீடு செய்வதை கண்டு,  நெருங்கி வந்தார். சங்கத்தில் உறுப்பி னராக இல்லையென்றாலும் இணைந்து பயணித்தார். அவருடைய மறைவு தமுஎகச -வுக்கு ஏற்பட்ட இழப்பு. அதன் அடையாள மாக நினைவேந்தல் கூட்டத்தை தமுஎகச நடத்துகிறது என்றும் அவர் கூறினார். மாநில துணைத் தலைவர் மயிலை பாலு  தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத் தில், பேரா. வீ.அரசு, பேரா. சரஸ்வதி, பேரா.  ரவிக்குமார், பேரா. பெருமாள் முருகன், எழுத் தாளர்கள் அஸ்வகோஷ், வசந்தன், எஸ்.வி.வேணுகோபாலன், இரா.தெ.முத்து, மணிநாத், கவிஞர்கள் நா.வே.அருள், சி.எம். குமார், க.மலர்விழி, மருத்துவர் பி.வி. வெங்கட்ராமன், பா.செயப்பிரகாசத்தின் சகோதரி சரஸ்வதி உள்ளிட்டோர் பேசினர்.