tamilnadu

img

பாலின சமத்துவத்தை உருவாக்க உறுதி ஏற்போம்!

சென்னை, மார்ச் 8- குடும்பம் சமூகம் ஊடகம் கல்வித் திட்டம் அரசு நடவடிக்கைகள் அமைப் புகள் என அனைத்திலும் பாலின சமத்துவத்தை உருவாக்க உறுதி ஏற்போம் என மகளிர் தின விழாவில் தலைவர்கள் சூளுரைத்தனர். சர்வதேச மகளிர் தின விழா தி.நக ரிலுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவ லகத்தில் கருவூல ஒருங்கிணைப் பாளர் நர்மதா தேவி தலைமையில் செவ்வாயன்று (மார்ச் 8) நடை பெற்றது. மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி பேசுகையில், “120  ஆண்டுகளுக்கு முன் வைக்கப்பட்ட முழக்கங்கள் இன்றைக்கும் தேவையாக உள்ளன. பெண்களுக் கான பிரச்சனைகள் என்று கூறினால் அது ஆண்களுக்கு எதிரானதாக பார்க் கக் கூடிய கண்ணோட்டம் இன்றும் உள்ளது” என்றார். சோசலிச கட்டமைப்பு உருவாக்கு கிற பௌதீகச்சூழலில்தான் முழுமை யான பெண் சமத்துவமும், விடுதலை யும் கிடைக்கும் என்றும் மோடி ஆட்சியில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வரு கின்றன.

சிறுபான்மை மக்கள் குறி  வைத்து தாக்கப்படுகிறார்கள் என்றும் அவர் கூறினார். கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், “முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ சுரண்டலுக்கு, சமூக ஒடுக்கு முறைக்கு எதிராக ஆண்கள் போராட வேண்டியிருந்தது. ஆனால்  பெண்கள் இந்த போராட்டத்தோடு மட்டுமல்லாமல் ஆணாதிக்கத்திற்கு எதிராகவும் போராட வேண்டி யுள்ளது” என்றார். பெண்களுக்கு எதிராக நடை பெறும் வன்முறையை, ஒடுக்கு முறையை எதிர்த்து போராடினால் மட்டும் போதாது, பெண்களுக்கு எதிரான பாஜகவின் மனுதர்ம கொள் கையையும் எதிர்த்து போராட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசுகையில், “மகளிர் தின விழா கொண்டாடப்படும் இந்த நேரத்தில், தமிழகத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சரிபாதி பெண்களுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.

சென்னை மாநகர மேயராக ஒரு பட்டியலின பெண் பதவி யேற்றுள்ளார். தமிழகத்தில் உள்ள  21 மாநகராட்சிகளில் 11 மாநக ராட்சிகளில் பெண்கள் மேயாராகி யுள்ளனர். அதேபோல் நகராட்சி, பேரூராட்சிகளிலும், வார்டுகளிலும் அதிகளவில் பெண்கள் வெற்றி பெற்றுள்ளனர். அதேபோல் இந்திய  நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கு 50 விழுக்காடு இடம் அளிக்கப்படும் என்றால் அதுதான் பெண்களுக்கு செய்யப்படும் மிகப்பெரிய சிறப் பாகும் என்றும் அவர் தெரிவித்தார். சமூகத்தில் நிலவும் ஏற்றத் தாழ்வுகள், ஒடுக்குமுறைகள், பொரு ளாதார சுரண்டல் இவற்றுடன் சேர்த்து பெண் அடிமைத்தனத்திற்கு எதிரான விடுதலை முழக்கத்தையும் எழுப்பியது உலகில் முதன்முதலில் மார்க்சியம்தான் எனவும் பாலகிரு ஷ்ணன் கூறினார். முன்னதாக டி.வில்சன் வரவேற் றார். மகளிர் தின உறுதிமொழியை இரா.சிந்தன், ரா.சுதிர் வாசிக்க  அனைவரும் உறுதியேற்றுக் கொண்டனர். முத்தமிழ்ச்செல்வி நன்றி கூறினார். இதில் மாநிலக் குழு உறுப்பினர் வே.ராஜசேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.