tamilnadu

img

மாற்றுத்திறனாளி குழந்தைகளின் கல்விக்கு உதவும் டிஜிட்டல் மறு வாழ்வு தளம் துவக்கம்

சென்னை,ஜூலை 26- மாற்றுத் திறனாளிக் குழந்தைகளுக்குக் கல்வி அளிக்க உதவும் டிஜிட்டல் மறு வாழ்வுத் தளத்தை தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்தார். அமர் சேவா சங்கம், தமிழ்நாடு அரசின் சமக்ர சிக்ஷா கல்விக்கான தமிழ்நாடு மாநிலக் கல்வி இயக்கத்துடன்இணைந்து மாற்றுத் திறனாளிக் குழந்தைகளுக்கான கல்வியை வழங்க டிஜிட்டல் மறுவாழ்வுத் தளமான எனேப்ளிங் இன்க்ளூஷன் வழியாக  அனைவரையும் உள்ளடக்கிய கல்விக்கான மாநிலத் திட்டத்தை முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்தார். மேலும், அமர் சேவா சங்கத்தின் 40-ஆவது ஆண்டு நினைவு மலரை வெளி யிட்டு, அமர் சேவா சங்கத்தின் வாழ்நாள் ஆதரவாளர்களையும் முதல்வர் கவுரவித் தார். மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான டிஜிட்டல் மறுவாழ்வு தளமான எனேப்ளிங் இன்க்ளூஷனுக்கான, புதிய லோகோவை வெளியிட்டு அமர் சேவா சங்கத்தின் நிறுவனத் தலைவர் எஸ். ராமகிருஷ்ணன் பேசுகையில், அரசுசாரா அமைப்புகள், அரசுத் துறைகள், மறுவாழ்வு மையங்கள் மற்றும் தொழில் வல்லுநர்களின் ஆதரவுடன் விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் பொதுமக்களிடையே மாற்றுத் திறனாளிகள் ஒதுக்கப்படாமல் இருப்பதற்கான சீர்திருத்த நடவடிக்கைகள், சமமான வாய்ப்புகள், கொள்கை மாற்றம் போன்றவற்றுக்கு உதவி வருகிறோம். இதன் மூலம் மாற்றுத் திறனாளிகள், சமூகத்தில் வெற்றிகரமாகப் பங்கேற்கவும் சுய உதவி குழுக்கள் போன்ற வற்றை அமைக்கவும் வாய்ப்பு ஏற்படும் என்றார்.

நிகழ்ச்சியில் அமர் சேவா சங்கச் செய லாளர் எஸ். சங்கர ராமன் பேசுகையில், “கடந்த ஆறு ஆண்டுகளாக, நாங்கள் 6 வய துக்கு உட்பட்ட குழந்தைகள் மீது அதிகக்  கவனம் செலுத்தி வருகிறோம். அத்துடன் 18 வயதுக்கு உட்பட்ட மாற்றுத் திற னாளிக் குழந்தைகளின் பள்ளி சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என்ற காரணத்தினா லும், குடும்பச் சிரமத்தைக் குறைப்பதற்கும், குழந்தைகளின் செயல்பாடுகளை மேம் படுத்துவதற்கும், ஆரம்பப் பள்ளி அளவில் மாற்றுத் திறனாளிக் குழந்தைகளின் பள்ளிச் சேர்க்கை விகிதத்தை கணிசமாக அதிகரிப்பதற்கும், எனேப்ளிங் இன்க்ளூ ஷன் என்கிற தொழில்நுட்பம் சார்ந்த தீர்வை  உருவாக்கியுள்ளோம் என்று கூறினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா.  சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் பொய்யா மொழி, பி.கே. சேகர்பாபு, பி. கீதா ஜீவன் உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்கள் கலந்து  கொண்டனர்.