tamilnadu

img

பெரும்பாலான கிராமப் பகுதிகளில் நிலப்பிரபுக்கள் - பணக்கார விவசாயிகள்

பெரும்பாலான கிராமப் பகுதிகளில் நிலப்பிரபுக்கள் - பணக்கார விவசாயிகள் - ஒப்பந்ததாரர்கள் - பெரு வணிகர்கள் ஆகிய வர்க்கங்களின் வலிமைமிக்க இணைப்பு உருவாகியுள்ளது. இவர்கள்தான் கிராமப்புற செல்வந்தர்கள். இடதுசாரிகள் வலுவாக உள்ள இடங்கள் தவிர பிற இடங்களில் பஞ்சாயத்து அமைப்புகள், கூட்டுறவு சொசைட்டிகள், ஊரக வங்கிகள், கடன் வழங்கும் அமைப்புகள் அனைத்திலும் இவர்கள்தான் ஆதிக்கம் செலுத்துகின்றனர். முதலாளித்துவ - நிலபிரபுத்துவ கட்சிகளின் தலைவர்களாக இருப்பவர்களும் இவர்கள்தான். இவர்கள் பெறும் உபரிகளை கந்துவட்டி, ஊகவணிகம், ரியல் எஸ்டேட், வேளாண் சார் தொழில்களில் முதலீடு செய்கின்றனர். கிராமப்புற ஆதிக்க வர்க்கம், சாதி தொடர்புகளை பயன்படுத்தி ஆதரவு திரட்டி, வன்முறையில் இறங்கி, ஏழைகளை மிரட்டிப் பணிய வைக்கின்றனர்.

- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) - 
கட்சித் திட்டத்திலிருந்து