உதகை, ஜூலை 26- நீலகிரி மாவட்டத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், நீர்வரத்து அதிகரித்து முழு கொள்ளளவை எட்டிய தால் குந்தா அணை நடப்பாண்டில் 3 ஆவது முறையாக திறக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிர மடைந்து, கடந்த ஒரு வாரமாக கனமழையுடன் இரவு மற்றும் பகல் நேரங்களில் சூறாவளி காற்று வீசுகிறது. சூறாவளி காற்றுக்கு இதுவரை 180க்கும் மேற்பட்ட மரங்கள் விழுந் துள்ளன. சாலையோரங்கள், பள்ளி, கல்லூரி, குடியிருப்பு கள் மற்றும் அரசு அலுவலக கட்டடங்கள் அருகே அபாயகர மாக உள்ள மரங்களை உடனடியாக ஆய்வு மேற்கொண்டு அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து அகற்றி வரு கின்றனர். இந்நிலையில், உதகை, குந்தா தாலுகா பகுதிகளில் வியாழனன்று முதல் இடைவிடாமல் பலத்த காற்றுடன் கன மழை பெய்து வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக உதகை மற்றும் குந்தா தாலுகா பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் வெள்ளியன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தன்னீரு உத்தரவிட்டார். அவலாஞ்சியில் அதிகபட்சமாக 19.2 செ.மீ. மழை பதிவாகி யுள்ளது. குந்தா அணை திறப்பு தொடர் மழை காரணமாக நீரோடைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. மஞ்சூர் அருகே உள்ள குந்தா அணை முழு கொள்ளளவான 89 அடியை எட்டியது. மழைக்கு ஏற்கனவே நடப்பாண்டில் இரண்டு முறை அணை திறக்கப்பட்டது. இந்நி லையில், வெள்ளியன்று காலை 6 மணி நிலவரப்படி, குந்தா அணைக்கு விநாடிக்கு 400 கனஅடி நீர்வரத்து வந்து கொண்டி ருந்தது. அணையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, இரு மதகுகளில் விநாடிக்கு 200 கனஅடி வீதம், 400 கனஅடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கனமழையால் குந்தா அணை மூன்றாவது முறையாக திறக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. காவல் நிலைய கட்டிடம் சேதம் அடுத்தடுத்து சரியும் ராட்சத மரங்களால் பல பகுதிகளி லும் போக்குவரத்து பாதிப்பு மற்றும் மின் விநியோகம் தடை பட்டுள்ளன. கொட்டும் மழையிலும் சீரமைப்பு பணிகளில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கேத்தி காவல் நிலையம் மீது ராட்சத மரம் விழுந்தது. இச் சம்பவத்தால் எவ்வித உயிர் பாதிப்பும் ஏற்படவில்லை.