நாகர்கோவில், பிப்.17- குமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் நடக்கும் அத்துமீறல்களை தடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக கட்சியின் மாவட்டச் செயலாளர் ஆர்.செல்லசுவாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது: மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில், சமூக நல்லிணக்கத்திற்கும் மக்கள் ஒற்றுமைக்கும் எடுத்துக்காட்டாக திகழ்ந்த ஒரு திருத்தலமாகும். மாவட்டத்தில் எல்லா தரப்பு மக்கள் மட்டுமின்றி கேரள மாநிலம் கொல்லம் உட்பட பல மாவட்ட மக்களும் சாதி, மத வேறுபாடின்றி பெருவிழாவாக இக்கோயி லில் கொடை விழாக்களில் கலந்து கொள்கின்றனர். கோயில் கொடி ஏற்றும் கயிறு அருகாமை கிராமத்திலுள்ள கிறிஸ்தவ குடும்பத்திலிருந்து காலங்கால மாக எடுத்து செல்லப்பட்டது என்பது மத ஒற்றுமையின் அடையாளமாக இருந்து வந்தது. 1950-களில் ஆன்மீக பெரியோர்கள் இணைந்து ஹைந்தவ சேவா சங்கம் என்ற பெயரில் ஆன்மீக நிகழ்ச்சிகளை நடத்தி வந்தனர். அரசியல் சார்பின்றி, பணம் சேர்க்கும் நோக்கமின்றி ஆன்மீகத்தை மட்டுமே முன்னிறுத்தி நிகழ்ச்சிகளை நடத்திய அந்த பெரியவர்களின் மறைவுக்கு பின் எல்லாம் தலைகீழாகிப் போனது.
இம்மாவட்டத்தில் இந்து முன்னணி என்ற அமைப்பு காலூன்றி, இந்து ஆலய வளாகங்களை மதவாத அரசியலை வள ர்க்கும், மக்கள் ஒற்றுமையை குலைக்கும் இடங்களாக மாற்ற ஆரம்பித்தனர். பல்வேறு பெயர்களை வைத்துக் கொண்டு, பக்தர்களுக்கு உதவி செய்கிறோம் என நுழைந்து, வளாகங் களை கைப்பற்றி, எந்த அனுமதியுமின்றி ரசீதுகள் அச்ச டித்து பண வசூல் செய்து, விருப்பம் போல செலவு செய்து வந்தனர். அன்றைய அரசும் அறநிலையத் துறையின் பொறுப்பற்ற அதி காரிகளும் இவற்றை கண்டு கொள்ளாத தன் விளைவு, ஆலயங்கள் அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக ஆக்கிரமிக்கப் பட்டன. தற்போது பல கோவில்களில் விழாக்கள் என்றால் குறிப்பிட்ட ஒரு அர சியல் கட்சியினரின் மாநாடு போல கொடிகள், தலைவர்களின் கட்அவுட்டு கள், போஸ்டர்கள் போடப்பட்டு ஆன்மீகம் பின்னுக்குத் தள்ளப்படுகிறது. தற்போது தமிழ்நாடு அரசும் அறநிலையத்துறையும் சரியாக தலையிட்டு, கோவில் வளாகங் களில் இருந்து சீர்குலைவு அரசியல் சக்திகளை வெளியேற்றி வருவது மிகுந்த பாராட்டுதலுக்குரியது. அந்த வகையில், மண்டைக்காடு கோவிலிலிருந்தும் இத்தகையோரை அப் புறப்படுத்தி உண்மையான ஆன்மீக பெரியவர்களைக் கொண்டு மாநாடு மற்றும் நிகழ்ச்சிகளை நடத்த மேற்கொ ண்டுள்ள இந்த நடவடிக்கை, ஆன்மீக பெருமக்களிடையே பெருத்த வரவேற்பை யும் நம்பிக்கையையும் ஏற்படுத்தி யுள்ளது. இந்து மக்கள் மத்தியில் வேற்றுமை யை, வெறுப்பை ஏற்படுத்தி சமூக அமைதியையும், நல்லிணக்கத்தையும் கெடுத்தது மட்டுமல்லாமல், இந்து மக்க ளின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக ஏதும் செய்யாத பாஜக, தமிழ்நாடு அரசு எடுத்து வரும் சரியான நடவடிக்கை களுக்கு எதிராக நடத்திவரும் போராட் டம் வன்மையான கண்டனத்துக்குரியது. தமிழ்நாடு அரசின் அறநிலையத்துறையின் நேர்செய்யும் நடவடிக்கைகளை விரிவுபடுத்திட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.