குமரி அனந்தன் காலமானார்
மார்க்சிஸ்ட் கட்சி இரங்கல்
சென்னை, ஏப்.9- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் பெ. சண் முகம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், தேசப்பற்றுமிக்கவரு மான ‘இலக்கியச் செல்வர்’ குமரி அனந்தன் மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். இளம் வயதிலேயே காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்ட அவர், முதிர்ந்த தேசிய வாதியாகவும், ஆற்றல் வாய்ந்த பேச்சாளராகவும் திகழ்ந்தார். பண விடைத்தாளை தமிழில் கொண்டு வருவதற்காகவும், பனை மரத்தின் பயன்பாட்டை அதிகரிப்பதற்காக வும் அவர் ஆற்றிய பணி என்றென் றும் நினைவு கூறப்படும். தான் ஏற்றுக் கொண்ட கொள்கைகளை மக்கள் மத்தியில் பரப்புவதற்காக அதிகமான முறை நடைபய ணத்தை மேற்கொண்டவர். தமிழக அரசின், ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற அவர், மதச் சார்பற்ற சக்திகளுடன் எப்போதும் நெருக்கமாக இருந்தார். அரசியல் மேடைகளில் இலக்கியச் சுவை யோடு பேசும் அவர், சிறந்த எழுத்தா ளராகவும் திகழ்ந்தார். சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினராகவும் திறம்பட செயல்பட்டார். அவரை இழந்து வாடும் காங்கி ரஸ் கட்சிக்கும், அவரது குடும்பத்தி னருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் ஆறுதலை யும், அனுதாபத்தையும் தெரிவித் துக் கொள்கிறோம்.