தேசிய தன்னார்வ ரத்ததான தினத்தையொட்டி (அக்.1) திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த வெள்ளியன்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ரத்த தான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில், வாலிபர் சங்க ரத்த தான கழகத்தை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் பாராட்டி கேடயமும் சான்றிதழும் வழங்கினார். வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் பா.லெனின், மாவட்டச் செயலாளர் சேதுபதி, மாவட்டப் பொருளாளர் நவநீதகிருஷ்ணன், மாவட்ட நிர்வாகி சந்தோஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.