tamilnadu

img

மதச்சார்பற்ற இந்தியாவைப் பாதுகாக்கும் போராட்டத்தில் வழிகாட்டும் கேரளா

சீத்தாராம் யெச்சூரி பெருமிதம்

கோழிக்கோடு, ஜுலை 16- பொது சிவில் சட்டத்திற்கு எதிரான போராட்  டத்தில் நாட்டிற்கு கேரளா வழிகாட்டியாக இருக்கும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்தார். பொது சிவில் சட்டம் என்ற தலைப்பில் கோழிக்கோட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய கருத்தரங்கை துவக்கி வைத்து அவர்  மேலும் பேசுகையில், கேரளா பல வழிகளில் நாட்டிற்கு முன்னுதாரணமாக உள்ளது. வகுப்பு வாத மற்றும் மத அடிப்படையில் பிளவுபடுத்து வதை நோக்கமாகக் கொண்ட பொது சிவில் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் கேரளா  உத்வேகமளிக்கும். பல்வேறு அரசியல்--மத--சமூகத் தலைவர்கள் ஒன்றிணைந்துள்ள இந்தக் கருத்தரங்கு ஒட்டுமொத்த நாட்டின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.பொது சிவில் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தை கேரளா முன்னெடுத்துச் செல்லும் என்பதற்கு இதுவே அடையாளம். சாதி, மத அடிப்படையில் ஏற்றத்தாழ்வு இல்லாத பூமி கேரளா. நான் நாடு முழு வதும் பயணம் செய்கிறேன். எங்கும் சாதி,  மதம் தான் விசாரிக்கப்படுகிறது. எந்த மதம்,  சாதி என்று கேட்காத ஒரே இடம் கேரளா என்பதுதான் அனுபவம். இந்தியாவின் மதச் சார்பற்ற தன்மையை பாதுகாக்கும் இந்தப் போராட்டத்தில் கேரளா வழிகாட்டியாக இருக்  கும் என்றார்.