புதுதில்லி, ஏப். 15 - தமிழ்நாட்டில் கட்சியை வளர்ப்ப தற்கு, பாஜக தன்னிடமுள்ள ஒன்றிய ஆட்சியதிகாரம் மூலம் பல்வேறு திட் டங்களை வகுத்து, அவற்றுக்காக கோ டிக்கணக்கில் அரசாங்கப் பணத்தை வாரியிறைத்து வருகிறது. சாதி, மதம், இனம், மொழி என எந்தெந்த வகையி லெல்லாம் பேசி வாக்குகளைப் பெற முடியுமோ அதற்கான வேலைகள் அனைத்தையும் செய்து வருகிறது. அவற்றில் ஒன்றுதான், காசி தமிழ்ச் சங்கமம், சவுராஷ்டிரா தமிழ்ச் சங்கமம் போன்ற நிகழ்வுகளாகும். பொதுவாக இந்த நிகழ்வுகள் மூலம் தமிழ்மொழி யின் பெருமை இந்தியா முழுவதும் எடுத்துச் செல்லப்படுவதாகவும், அதற் காகவே இந்த நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதாகவும் ஒன்றிய பாஜக அரசு கூறிக்கொள்கிறது. ஆனால், இது முழுக்க முழுக்க சாதிய மற்றும் மத வாத அணிதிரட்டலைத் தாண்டி ஒன்று மில்லை என்பதை அரசியல் அறிந்த வர்கள் அறிவார்கள்.
இதற்கு, ஏற்கெனவே 2022 நவம்பர் 17 முதல் டிசம்பர் 16 வரை ஒரு மாதத்தி ற்கு நடத்தப்பட்ட காசி தமிழ்ச் சங்க மத்தில் அரங்கேறிய நிகழ்வுகளே உதா ரணம். காசி தமிழ்ச் சங்கமத்திற் காக வைக்கப்பட்ட பேனர்கள் துவங்கி அனைத்திலும் தமிழைத் தப்பும் தவறு மாக அச்சிட்டு அசிங்கப்படுத்தினர். காசி விஸ்வநாதர் கோயில் அறக் கட்டளையின் சார்பில் தமிழர்களை வர வேற்கிறோம் என்று கூறி ஆங்கிலம், இந்தி, தமிழ் மொழிகளில் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. இதில், காசி விஸ்வநாதர் ஆலயத்தில் உள்ள பரிசுப் பொருள் மையத்தில், அனைத்து விருந்தினர்களையும் வரவேற்கிறோம் என்பதற்குப் பதில், “அனைத்து விருந்தி னர்களின் வரவேற்கிறது” என்று பிழை யான வாக்கிய அமைப்புடன் வைக்கப் பட்ட பேனர் பலரையும் முகம் சுளிக்க வைத்தது. அதுமட்டுமல்ல, எழுத்துக்களும் தமிழ் எழுத்துக்கள் போன்று இல்லா மல் எழுத்துக்களின் வடிவமே தவறாக அச்சிடப்பட்டு இருந்தது. தமிழைக் கணினியில் தட்டச்சு செய்யும்போது சரியாகத்தான் தட்டச்சு செய்யப்பட்டு இருக்கிறதா? என்பதைக் கூட சரிபார்க்க ஆளில்லை அல்லது தமிழர்கள் நேரில் வந்து பார்க்கவா போகிறார்கள்..? என்ற அலட்சியம். இவை அப்போதே சமூக வலைதளங்களில் விமர்சனத்திற்கு உள்ளாகின.
அது முடிந்து, தற்போது ஏப்ரல் 17 முதல் 26 வரை சவுராஷ்டிரா தமிழ்ச் சங்கமத்திற்கான வேலைகளை ஆரம்பித்து விட்டனர். ஆனால், வழக் கம்போல இப்போதும் அவர்கள் தமிழ்க் கொலையை துவங்கி விட்டனர். தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்புவோர் பதிவுசெய்து கொள்ளவும் இதுதொடர்பான தகவல் களை அறிந்து கொள்ளவும் சவு ராஷ்டிர தமிழ்ச் சங்கமம் இணைய தளம் (https://saurashtra.nitt.edu/) தொடங்கப்பட்டது. இந்த இணைய தளத்தில்தான், தமிழ் தப்பும் தவறு மாக மொழிபெயர்க்கப்பட்டு உள்ளது. ஓரிடத்தில், ‘Significance of Saura shtra Tamil Sangamam’ என்ற ஆங்கில வாக்கியம் இடம்பெற்றுள்ளது. இது தமிழில் “சவுராஷ்டிரா தமிழ்ச் சங்கமத் தின் முக்கியத்துவம்” என மொழி பெயர்க்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அதற்கு பதில் “சவுராஷ்டி ராவின் முக்கியத்துவம் தமிழ்ச் சங்க மம்” என தவறாக மொழி பெயர்க்கப் பட்டுள்ளது. அதேபோல, ‘செட்யூல் ஆப் சவு ராஷ்டிர தமிழ்ச் சங்கமம்’ (‘Sche dule of Saurashtra Tamil Sanga mam’) என்ற ஆங்கில வாக்கியம், தமிழில், “சவுராஷ்டிரா தமிழ்ச் சங்க மத்தின் நிகழ்ச்சி நிரல்” என்று மொழி பெயர்க்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அதுவும் “சவுராஷ்டிரா அட்ட வணை தமிழ் சங்கமம்” என தவறாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
பொதுவாகவே பாஜக-வினருக்கும் தமிழுக்கும் ஆகாது. முன்பொரு முறை உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாடு வந்தபோது, அவரின் பேச்சை தமிழ்நாட்டின் மூத்த பாஜக தலைவர் எச். ராஜா மொழிபெயர்த் தார். அப்போது, அமித்ஷா ‘மைக்ரோ இரிகேஷன்’ (Micro Irrigation) திட்டத் திற்காக ரூ. 332 கோடி கொடுக்கப் பட்டது என்று இந்தியில் பேச, அதனைத் தமிழில் மொழிபெயர்த்த எச். ராஜா, “சிறுநீர் பாசனத் திட்டங்களுக்காக ரூ. 332 கோடி கொடுக்கப்பட்டுள்ளது” என்று கூற, ஊரே சிரிப்பாய் சிரித்தது. நுண்ணீர் பாசனம் அல்லது சொட்டுநீர்ப் பாசனம் என்று தமிழில் பேசத் தெரி யாமல் மாட்டிக்கொண்டு அவமானப் பட்டார். எனவே, தமிழை வளர்க்குமாறு, இவர்கள் யாரிடமும் தமிழ்நாடு மக்கள் எப்போதும் கேட்டுக் கொண்டதில்லை. ஆனாலும் தாங்களாகவே வந்து ஆஜ ராகும் பாஜக தலைமையானது, உள் ளார்ந்த உணர்வு இல்லாமல் தமி ழுக்காக பாடுபடுகிறோம் வெறுமனே நாடகங்களை அரங்கேற்றி தமிழை அவமதித்து வருகிறது.