tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

கர்நாடகா, தெலுங்கானா நீதிபதிகள் சென்னைக்கு பணியிட மாற்றம்

சென்னை, மே 2 - நாட்டில் உள்ள உயர்நீதிமன்றங்களின் உள்ளடக்கம் மற்றும் பன்முகத்தன்மையை ஊக்குவிப்பதற்கும், நீதி நிர்வாகத்தின் தரத்தை வலுப்படுத்துவதற்கும், கடந்த ஏப்ரல் 16 மற்றும் 19 ஆம் தேதிகளில் நடைபெற்ற உச்ச கொலீ ஜியம் கூட்டத்தில் நீதிபதிகளை இடமாற்றம் செய்ய பரிந்துரை  செய்யப்பட்டது. அதன்படி, கர்நாடக உயர் நீதிமன்றத்தின் 4 நீதிபதிகள் உட்பட 7 நீதிபதிகளை பணியிட மாற்றம் செய்ய நீதிபதிகள்  தேர்வுக் குழு (கொலீஜியம்) பரிந்துரைத்தது. இந்நிலை யில், கொலீஜியத்தின் பரிந்துரையை ஏற்று, கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி ஹேமந்த் சந்தானகவுடர் மற்றும் தெலுங்கானா உயர்நீதிமன்ற நீதிபதி கே.சுரேந்தர் ஆகியோரை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.

தமிழக அரசு ஆலோசனை!

அதிகரிக்கும் தெருநாய்கள் தொல்லை

 தமிழகம் முழுவதும் தெருநாய்கள் தொல்லை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இது தொடர்பாக மாவட்ட நிர்வா கங்களுக்கு, மாநகராட்சி களுக்கு, நகராட்சிகளுக்கும் தொடர்ந்து புகார்கள் வரு கின்றன.  இந்நிலையில் தெரு நாய்களின் தொல்லைகளை கட்டுப்படுத்துவது குறித்து தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை (மே 2) சென்னை தலைமைச்  செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.  இதில் அமைச்சர்கள் கே.என். நேரு, மா. சுப்பிர மணியன் மற்றும் பல்வேறு மாநகராட்சி அதிகாரிகள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பாதுகாப்பு குழுவில்  3 ஆயிரம் பெண்கள்

சென்னை: பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், தமிழக ரயில்வே காவல்துறை சார்பில் தொடங்கப்பட்ட பெண் பயணிகள் பாது காப்பு குழுவில் தமிழகம் முழுவதும் ஒரு  மாதத்தில் சுமார் 3 ஆயிரம் பெண் பயணி கள் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். சென்னை சென்ட்ரல், எழும்பூர், சேலம், கோவை ஆகிய நிலையங்களில் இருந்து  தலா 100 பெண் பயணிகள் இக்குழுவில் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். ரயில் பயணத்தின் போது, சிறிய குற்றங் கள் தொடர்பாக தகவல்கள் வருகின்றன. இந்த குற்றத்தில் ஈடுபடுபவர்கள் உடனடி யாக கைது செய்யப்படுகிறார்கள் என்று ரயில்வே அதிகாரி தெரிவித்திருக்கிறார்.

சகாயம் ஆஜராக மறுப்பு

சென்னை: “தமிழக அரசு தனது பாதுகாப்பு பிரிவை திரும்பப் பெற்றதால், எனது உயிருக்கு  ஆபத்து உள்ளது. இதனால், கிரானைட் ஊழல் வழக் கில் மதுரைக்குச் சென்று ஆதாரங்களை வழங்க முடியவில்லை” என்று சிறப்பு வழக்கறிஞருக்கு மதுரை முன்னாள் மாவட்ட ஆட்சியர் உ.சகாயம் மறுப்பு தெரிவித்து, கடிதம் எழுதியுள்ளதாக தகவல்  வெளியாகியுள்ளது.

ரூ.118 கோடி ஒதுக்கீடு

சென்னை: அரசு மருத்துவமனைகளில் கூடுதல் கட்டடம், ஆய்வகம் அமைக்க ரூ.118 கோடி  ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. 31 வட்டார மற்றும் வட்டாரம் அல்லாத மருத்துவமனைகளில் கூடுதல் கட்டிடம் கட்ட ரூ.108 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. 10 மாவட்டங்களில்  ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வகம் கட்ட ரூ.10.72 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.