tamilnadu

img

கலைஞர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நிரந்தர கட்டமைப்பை அரசு உருவாக்க வேண்டும்

சென்னை, ஜன. 2 - கலைஞர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசு நிரந்தர கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று கனிமொழி எம்.பி., கோரிக்கை விடுத்துள்ளார். பேரிடரால் இழந்த கலையை பேணிக்காக்கும் வகையில் 9ஆவது வீதி விருது விழாவை ஞாயிறன்று (ஜன. 2) சென்னையில் நடைபெற்றது. லயோலா மாண வர்கள் அரவணைப்பு மையம், லயோலா கல்லூரி மாற்று ஊடக மையம் மற்றும் பள்ளிக் கல்வித்துறை இணைந்து இந்நிகழ்வை நடத்துகின்றன. மலேசியா புகழ் சி.பரமசிவம் குழு வினரின் மங்கள இசையுடன், பரிவட்ட ஊரழைப்புடன் துவங்கிய நிகழ்ச்சியில் கொரோனாவால் உயிர் நீத்த கலைஞர்கள் சிட்டம்மாள், சாலமன், பாக்கியராஜ் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்வுக்கு லயோலா கல்லூரி முதல்வர் அ.தாமஸ் தலைமை தாங்கினார். துணை முதல்வர் சித்ரா ரெஜிஸ் வரவேற்றார். மாணவர் அரவணைப்பு மையத்தின் இயக்குநர் விக்டர்ரோச் நிகழ்ச்சியின் நோக் ்கங்களை விளக்கினார். நிகழ்ச்சியை முனைவர் பேராசிரியர் இரா.காளீஸ்வரன் தொகுத்து வழங்கினார்.

இந்நிகழ்வில் பேசிய கனிமொழி, மக்களின் வாழ்வியலை பிரதிபலிக்கும்; கதைகளை சொல்லக் கூடிய கலைஞர்களை வாழும்போதே கொண்டாட வேண்டும். கலைகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றார். கலை, கலைஞர்களை சாதி, மதங்களை கடந்து கொண்டாட வேண்டும் என்பதற்காகவே சென்னை சங்கமத்தை உருவாக்கினோம். தற்போது அதை நடத்த முடியாத நிலை உள்ளது. கலைஞர்களை கொண்டாடும் வகையில் நிகழ்ச்சிகள் பல நடைபெற்றாலும், லயோலா கல்லூரி கலைஞர்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கி வருவதும், 360க்கும் மேற்பட்ட நாட்டுப்புறக் கலைஞர்களின் பிள்ளைகளுக்கு உயர்கல்வி வழங்கி உள்ளதும் பாராட்டுக்குரியது என்றும் அவர் கூறினார்.

தமிழகத்தின் வரலாறு, உரம் இந்த கலைகளில்தான் மறைந்து கிடக்கிறது. லயோலா கல்லூரியை ஒரு சமூக செயல்பாட்டு கூடமாக, சமூக செயல்பாட்டாளர்களை உருவாக்கக் கூடிய மையமாக பார்க்கிறோம். கொரோனா பெருந்தொற்றால் கோவில் விழாக்கள் நடைபெறாததால் நாட்டுப்புறக் கலைஞர்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். எனவே, நாட்டுப்புறக் கலைஞர்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க வேண்டும். இயற்கை பேரிடர் போன்ற எந்த ஒரு காலத்திலும் கலைஞர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க தமிழக அரசு நிரந்தர கட்டமைப்பை அரசு உருவாக்க வேண்டும். கலைஞர்கள் நடத்தப்படும் விதம், குறிப்பாக பெண் கலைஞர் துன்பத்திற்கு உள்ளாக்கப்படுவதை தடுக்க வேண்டும். கலைஞர்களை சமமாக பார்க்க; நடத்த வேண்டும் என்றும் அவர் கூறினார். இந்நிகழ்வில், ‘நாடக எதிர்காலம்’, ‘கிளர்ந்தெழும் மனசாட்சி’, ‘வெட்டிவேர்’, ‘அழகு தமிழ் பழகு’, ‘குலவைச்சத்தம்’, ‘உண்மை சொல்லும் வாழ்மொழி வரலாறு’ ஆகிய நூல்கள் வெளியிடப்பட்டன.