இயற்கை விவசாயத்தை பாதுகாக்க வேண் டும் என்கிற குரல் சமீபமாக வலுப்பெற்று வரு கிறது. நாட்டில் இதர மாநிலங்களுக்கு முன்னோடி யாக இடதுசாரிகள் ஆளும் கேரள மாநிலம் இயற்கை விவசாயத்திற்கு முன்னுரிமை கொடுத்து வருவது இயற்கை ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது மட்டுமல்லாமல், இயற்கை விவசா யத்தின் மீதான ஈடுபாட்டையும் விவசாயிகளிடம் கேரள அரசு விதைத்துள்ளது. தமிழ்நாட்டிலும், தற்போது இயற்கை விவசா யத்தின் அவசியம் குறித்தும், உணவே மருந்து, மருந்தே உணவு என்கிற பேச்சும் பரவலாக விவா திக்கப்படுகிறது. இதேபோன்று, பெரும் போராட் டங்களுக்கு பிறகே தமிழகத்தின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டை மீட்டெடுக்க வேண்டியதாகிற்று. அத்தகைய போராட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டி குறியீடாகவும், போராட்டத்தின் ஊடே பண்பாட்டு விழுமியங்களை பாதுகாக்க வேண் டும் என்கிற செய்தியையும் உரக்கச்சொன்னது. அந்த வகையிலேயே நாட்டு மாடுகள், ஆடுகள், கோழிகள் வளர்ப்பு குறித்தும் விவாதிக்கப்பட் ்டது. நமது மேற்கு மண்டலதில் நாட்டு மாட்டினங் களான காங்கேயம் போன்ற மாட்டு வகைகளை பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்து பேசப் படுகிறது. கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு மேற்கு மண்டலத்தில் உழவு, கிணற்றில் தண்ணீர் இறைப் பது, விளைபொருள்களை சந்தைகளுக்கு கொண்டு செல்வது போன்ற பல்வேறு வேலை களுக்கும் காங்கேயம் இனக் காளைகளை விவ சாயிகள் பயன்படுத்தி வந்தனர். ஆனால், தற் போது கிணற்றில் தண்ணீர் இறைக்க மின்மோட் டாரும், உழவுக்கு டிராக்டரும் என்றானதால், மாடு களின் தேவை குறையத் தொடங்கியது. வெளிநாட்டு கலப்பின மாடுகளின் வருகை யால் காங்கேயம் இன மாடுகளின் வளர்ப்பது சற்று குறையத் தொடங்கியது. இதனால் நாட்டு மாடுகள் அதிக அளவில் அடிமாட்டுக்காக விற் பனை செய்யப்பட்டன. தற்போது காங்கேயம் இன மாடுகளின் முக்கியத்துவம் குறித்து பேசப் படுகிறது. அதாவது திமில் உள்ள காங்கயம் இன மாடுகளில் இருந்து கறக்கும் ஏ2 வகை பாலானது மருத்துவக்குணம் கொண்டதுடன், உடல் நலத் துக்கும்
ஏற்றதாகும். ஆனால் திமில் இல்லாத கலப்பின மாடுகளில் இருந்து கறக்கும் பாலானது ஏ1 வகையைச் சேர்ந்ததாகும். இதன்காரணமா கவே காங்கேயம் மாடுகளின் பால் உலக அளவில் ஏ1 பாலை விட மூன்று மடங்கு அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது என்கிறார்கள் விவ சாயிகள். ஒன்றுபட்ட கோவை மண்டலத்தில் காங்கே யம் இன மாடுகள் அதிக அளவில் வளர்க்கப்பட்டு வந்தது. ஆனால் காலப்போக்கில் மின்மோட்டார், டிராக்டர், கலப்பின பசுக்களின் வருகை உள்ளிட்ட வற்றால் இந்த மாடுகள் வளர்ப்பின் எண்ணிக்கை யும் குறைந்து விட்டது. வெளிநாட்டு கலப்பின பசுக்கள் 10 லிட்டர் வரையில் பாலை நாள்தோறும் வழங்கும். அதேநேரத்தில், காங்கேயம் பசுக்கள் 5 லிட்டர் வரையில் பால் தரும். ஆனால், காங்கே யம் இனமாடுகளின் மூலம் கூடுதல் வருவாயை ஈட்டலாம். இந்த இரண்டு இன மாடுகளின் பராமரிப் புச் செலவும் கிட்டத்தட்ட ஒன்றுதான் என்பதே காங்கேயம் இன மாடுகள் வளர்ப்போரின் அசைக்க முடியாத கூற்றாக உள்ளது. மேலும், காங்கேயம் இன மாடுகளின் பால் அதிக நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும் ஆற்றல் நாட்டு மாட்டு பாலுக்கு உண்டு. ஆகவே, காங்கேயம் இன நாட்டு மாடுகளை வளர்ப்பில் ஊக்குவிக்க கூடுதலான அக்க றையை அரசு மேற்கொள்ள வேண்டும். கிராமப் புற மக்களிடம் பண புழக்கம் ஏற்பட்டால், அந்த பணம் சந்தைக்கு வரும், உற்பத்தி செய்யப்பட்டு சந்தைக்கு வரும் பொருட்களை மக்கள் வாங்கு வார்கள். பொருட்கள் விற்றுத்தீர உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். இதனால், வேலை வாய்ப்பு அதிகரிக்கும், இந்த சங்கிலியை பாதுகாக்க வேண்டும்.