tamilnadu

img

காவல்துறையினரையும் கைது செய்க!

தமிழக அரசுக்கு சிபிஎம் வலியுறுத்தல்

சென்னை, ஜன.18- பெரம்பலூர் மாவட்டத்  தில் தலித் இளைஞர் மணி கண்டன் கழுத்தறுத்துப் படு கொலை செய்யப்பட்ட சம்ப வத்தில், காவலர்கள் மீதும் வன்கொடுமை தடுப்புச் சட் டத்தில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக கட்சி யின் மாநிலச் செயலாளர் பெ.  சண்முகம் தமது அறிக்கை யில் குறிப்பிட்டிருப்பதாவது: பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், கை. களத்தூர் கிராமம் காந்தி நகரைச் சேர்ந்த மோகன் என்  பவரின் மகன் மணிகண்டன்  (30). தலித் இளைஞரான மணிகண்டன் கொடூரமான முறையில் படுகொலை செய்  யப்பட்டிருப்பதை மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்  மையாகக் கண்டிக்கிறது. தீண்டாமையின் தொடர்ச்சியாகவே இந்த சாதிய வன்கொடுமை நடந் துள்ளது. இந்த தகராறை ஒட்டி சமாதானம் பேசலாம் என்று குற்றவாளிகளிடம் காவலர்களும், ஊர்க்காவல் படையைச் சேர்ந்த ஒருவ ரும் அழைத்துச் சென்றி ருக்கிறார்கள். இவர்களின் முன்னிலையிலேயே மணி கண்டனின் படுகொலை நடைபெற்றுள்ளது. சட்ட ரீதியாக காவ லர்கள் நடவடிக்கை எடுத்தி ருக்க வேண்டும். சம்மந்தப் பட்ட இருவரையும் காவல்  நிலையத்திற்கு அழைத்து  விசாரணை நடத்தியிருக்க வேண்டும். மாறாக கொலை யாளி தேவேந்திரனிடமே, கொலை செய்யப்பட்டவரை அழைத்துச் சென்றதன் மூலம் காவலர்களும் அந்தக் கொலைக்கு உடந்தையாக இருந்துள்ளனர். குற்றவாளிகள் அனை வரையும் கைது செய்வ தோடு, இந்தக் குற்றத்திற்கு உடந்தையாக இருந்த காவல்துறையினர் மீதும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து உடனடியாக கைது செய்யப்பட வேண் டும். கொலை செய்யப்பட்ட வரின் குடும்பத்திற்கு சட்ட ரீதியான இழப்பீடும் அவ ரது மனைவிக்கு அரசு வேலையும் வழங்கிட வேண்  டுமென்றும், இத்தகைய நிகழ்வுகளில் சட்டத்திற்குப்  புறம்பாக குற்றவாளி களுக்கு உடந்தையாக காவல்துறை செயல்படு வதைத் தடுக்கும் வகையில்  கடுமையான நடவடிக்கை களை மேற்கொள்ள வேண் டும் என்றும் மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது. இவ்வாறு பெ. சண்முகம்  தமது அறிக்கையில் குறிப் பிட்டுள்ளார்.

நிலைகுலைந்து நிற்கும் மணிகண்டன் குடும்பம்

தீண்டாமை ஒழிப்பு முன்னணி நேரில் ஆறுதல்

படுகொலை செய்யப்பட்ட மணி கண்டன் உடலுக்கு தீண்டாமை  ஒழிப்பு முன்னணியின் மாநில பொதுச்செயலாளர் கே.சாமுவேல் ராஜ் நேரில் அஞ்சலி செலுத்தி குடும் பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.  அதைத்தொடர்ந்து செய்தியா ளர்களுக்கு அளித்த பேட்டியில் கே.சாமு வேல்ராஜ் கூறியதாவது:  “காவல்துறையினரின் அலட்சி யமே இந்த கொலைக்கு காரணமாக உள்ளது. பாதிப்பிற்குள்ளான மணி கண்டன் கொடுத்த புகாரின் பேரில் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த கொடூரக்கொலை நடைபெற்று இருக்காது. திரைப்படத்தில் நடை பெறுவது போல் இந்த கொலை  மின்னல் வேகத்தில் நடைபெற்றுள் ளது. தமிழ்நாடு காவல்துறை இவற்றி லிருந்து பாடங்கள் கற்க வேண்டும், குற்றப் பின்னணி இருப்பவர்களோடு காவல்துறையினருக்கு உள்ள உறவு இதன் மூலம் அம்பலப்பட்டுள்ளது. இது குறித்து மாநில அரசு கவலை கொள்ள வேண்டும் மேலும் இதற்கான சரியான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க  வேண்டும். காவல்துறையை சீர மைக்க வேண்டும் என்பதில் மாநில அரசு உறுதிகாட்ட வேண்டும். இந்தக் கொலைக்கு சாதியும் ஒரு முக்கிய பின்னணியாக இருந்துள்ளது.  கை.களத்தூர் கிராமத்தில் நடை பெற்ற இந்த கொலைக்கு முக்கிய கார ணமாக தலைமைக் காவலர் ஸ்ரீதர்  இருந்துள்ளார். நாங்கள் கை.களத்தூர்  கிராமத்தில் ஆய்வு செய்த வரை கை. களத்தூர் காவல் நிலையம் என்றாலே கட்டப்பஞ்சாயத்து காவல் நிலையம் என்று பொதுமக்கள் சொல்கின்ற அளவுக்கு உள்ளது. இந்த நிலையை மாற்றுவதற்கு மாநில அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். எஸ்.சி. -எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஆறு மாதத்திற்குள் இந்த வழக்கை முடிக்க வேண்டும், உயிரிழந்த மணிகண்டன் குடும்பம் தற்போது நிலைகுலைந்து உள்ளது. எனவே மாநில அரசு சட்டப்படி செய்ய வேண்டிய அனைத்து கடமைகளையும் விரைவாக செய்ய வேண்டும்.”  இவ்வாறு சாமுவேல் ராஜ் தெரி வித்தார். அவருடன் தீ.ஒ.முன்னணி மூத்தத் தலைவர்  என். செல்லத்  துரை, மாவட்டத் தலைவர் பாஸ்கரன்,  மாவட்டச் செயலாளர் கோகுல கிருஷ்ணன், பொருளாளர் கருணாநிதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் பி. ரமேஷ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டாக்டர் கருணாகரன், கலையரசி, ரங்கநாதன், மாவட்டக்குழு உறுப்பினர் எழுத்தாளர் எட்வின், சிஐடியு மாவட்டச் செயலாளர் அகஸ்டின், சிபிஎம் வேப்பந்தட்டை ஒன்றியச் செயலாளர் சக்திவேல், கிளைச் செயலாளர் முருகேசன் ஆகி யோர் உடன் இருந்தனர்.