tamilnadu

img

இயக்கத்திற்கு பெருமை சேர்ப்பவர் சிகரம் ச.செந்தில்நாதன்

சென்னை, டிச. 18 - இயக்கத்திற்கு பெருமை சேர்ப்பவராக சிகரம் ச.செந்தில் நாதன் உள்ளார் என்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் பாராட்டினார். மூத்த வழக்கறிஞர் சிகரம் ச.செந்தில்நாதன் 80 வயதை நிறைவு செய்துள்ளார். 50 ஆண்டு காலமாக வழக்கறிஞராக பணி யாற்றி வருகிறார். அவரிடம் பயிற்சி பெற்ற வழக்கறிஞர்கள் இணைந்து அவருக்கு ஞாயி றன்று (டிச.18) சென்னையில் பாராட்டு விழா நடத்தினர். இந்த நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசுகையில், “தமிழ்நாடு முற் போக்கு எழுத்தாளர் கலைஞர் கள் சங்கத்தின் நீண்டகால தலை வராக பணியாற்றியவர். வழக்கை தாண்டி சமூக பிரச்ச னைகள் குறித்து சிந்திக்க ஒரு சிலரால்தான் முடிகிறது. அத்தகைய பணியில் முத்திரை பதித்தவர் செந்தில்நாதன். தலை சிறந்த வழக்கறிஞராகவும், இலக்கியவாதியாகவும் இருக்கிற பெருமை அவரையே சாரும். சமூக நீதிக்கான போரா ட்டத்தில் முத்திரை பதித்த வழக்கு களை நடத்திய பெருமை அவ ருக்கு உண்டு” என்றார். 

அனைத்து சாதியினரும் அர்ச்சகர்

“அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தைத் தமிழக அரசு கொண்டு வந்தாலும் அமல் படுத்த முடியவில்லை. ஆனால், கேரள இடதுசாரி அரசு அதை அமல்படுத்தியது. தமிழக அரசு சட்டத்தை எதிர்த்து நீதிமன்றங் களில் வழக்குகள் நடந்தபோது, சமூக சிந்தனையாளர்களுடன் சேர்ந்து அளப்பரிய ஆலோச னைகளை வழங்கி, வழக்கில் வாதாடி வெற்றி பெற்று, சட்டம்  அமலாக்கப்பட்டுள்ளது. இதற் கான பெருமை செந்தில்நாத னையே சாரும். தில்லை சிதம்பரம் நடராஜன் கோவில் தீட்சிதர்களுக்குச் சொந்தம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி யது. இதனை மறுத்து ஆலய மீட்பு  போராட்டத்திற்கு உயிரூட்டிய பெருமை அவரை சாரும்” என்றும் அவர் கூறினார்.

மார்க்சிய இயக்கத்திற்குப் பெருமை 

“இலக்கியத்திற்கான தலைசிறந்த விருதான சாகித்திய அகாடமி விருதுகளைப் பெற்ற பலரையும் உருவாக்கிய அமைப்பு தமுஎகச. அத்தகைய அமைப்பை உருவாக்கிய வர்களில் ஒருவர் செந்தில்நாதன். மார்க்சியத்தால் கவரப்பட்டு, மார்க்சிய இயக்கத்தில் செயல் பட்டு வருகிறார். நீதிய ரசர்கள், எழுத்தாளர்கள், படைப்பாளிகள் வழங்கும் பாராட்டுக்கள் மார்க்சிய இயக்கத்திற்கும் சேரும். இயக்கத்திற்கு பெருமை சேர்ப்ப வராக அவர் உள்ளார். அவர் தொடர்ந்து நல்ல படைப்பு களைக் கொண்டு வர வேண்டும். சமூக நீதி போராட்டத்திற்கு, சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்திற்கு வலுசேர்க்கிற படைப்பாளியாகத் தொடர்ந்து திகழ வேண்டும்” என்றும் பாராட் டினார்.

ஆலயங்களில் தமிழ் ஒலிக்கப் போராடுபவர் 

நிகழ்விற்குத் தலைமை தாங்கிப் பேசிய சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிய ரசர் து.அரிபரந்தாமன், “தாம் உட்பட அவரிடம் சுமார் 40 பேர் பயிற்சி பெற்றுள்ளோம். 4 பேர் நீதிபதிகளாக உயர்ந்துள்ளோம். வழக்கறிஞராக மட்டுமின்றி இலக்கியவாதியாகவும் அவர் இருந்தார். 30 புத்தகங்களை எழுதியுள்ளார். கலை இலக்கியத் துறையில் திராவிட இயக்கத்தை விடக் கூடுதலான தாக்கத்தை தமுஎகச உருவாக்கியது. அந்த அமைப்பின் தலைவராகவும் அவர் செயலாற்றினார். தஞ்சை பெரிய கோவிலில் தமிழில் குட முழுக்கு நடத்த நீதிமன்றத்தில் வாதாடி வெற்றி பெற்றார். கோவில்களில் அனைத்து வகை களிலும் தமிழ் ஒலிக்க வேண்டும்  என்று தொடர்ந்து போராடி வருகிறார்” என்றார்.

சிறப்பு மலர் வெளியீடு

சிகரம் ச.செந்தில்நாதனின் 80வது வயது சிறப்பு மலரை வெளியிட்டு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சத்தி குமார் சுகு மார குரூப், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் தங்கள் தொழிலைத் தவிர வேறு எதிலும்  கவனம் செலுத்த முடியாது என்பார்கள். இதனை மீறி வழக் கறிஞராக பணியாற்றிக் கொண்டே பலநூல்களை எழுதி யுள்ள அவரை பாராட்டுகிறேன் என்றார்.

இளம் வழக்கறிஞர்களுக்கு அறிவுறுத்தல்

ஏற்புரையாற்றிய சிகரம் ச.செந்தில்நாதன், “சென்னை உயர்நீதிமன்றத்தில் இதற்கு முன்பு யாராவது இளம் வழக்கறி ஞர்கள் சேர்ந்து இதுபோன்ற மூத்த வழக்கறிஞருக்கு பாராட்டு விழா நடத்தியுள்ளார்களா என்று தெரியவில்லை. இளம் வழக்கறி ஞராக ஒருமுறை அரசு தலைமை  வழக்கறிஞரிடம் தோற்றேன். அடுத்தமுறை அதேபோன்ற ஒரு தலைமை வழக்கறிஞரிடம் வெற்றி பெற்றேன். தகவல், தரவு கள் சரியாக வைத்துக் கொண்டு தைரியமாக வாதாடுங்கள். என்னிடம் பயிற்சி பெறுகிற மேலும் சிலர் நீதிபதிகளாக உய ர்வார்கள்” என்றார். சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் வைத்தியநாதன், மேனாள் நீதியரசர்கள் வி.பார்த்தி பன், எஸ். இராஜேஸ்வரன், வைத்தியநாதன், வி.எஸ்.ரவி, விருதுநகர் மாவட்ட நீதிபதி கிறிஸ்டோபர், நீதிபதி எம்.அருந் ததி மற்றும் வழக்கறிஞர்கள் பேசி னர். வழக்கறிஞர் சி.பரந்தாமன் நன்றி கூறினார்.