tamilnadu

img

நீதிக்காக உறுதியாக போராடிய கோகுல்ராஜ் குடும்பத்தினருக்கு கே.பாலகிருஷ்ணன் பாராட்டு

சேலம், மார்ச் 17- சாதி ஆணவப் படுகொலை செய்யப்பட்ட சேலம் கோகுல்ராஜ் வழக் கில், உறுதியாக போராடிய அவரது குடும்பத்தினருக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் பாராட்டு தெரிவித்தனர். 2015 ஆம் ஆண்டு சாதி ஆணவப் படுகொலை செய்யப்பட்ட சேலம் மாவட்டம், ஓமலூர் பகுதியைச் சேர்ந்த  கோகுல்ராஜ் இல்லத்தில், கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ் ணன், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து பேசினார். அப்போது, கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கும் வரை உறுதியாக போரா டிய கோகுல்ராஜின் தாயார் சித்ரா,  சகோதரர் கலைச்செல்வன் ஆகியோ ருக்கு சால்வை அணிவித்து பாராட்டுத் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, செய்தியாளர் களிடம் கே.பாலகிருஷ்ணன் கூறுகை யில், சாதி ஆணவ படுகொலைக்கு தனி  சட்டம் இயற்ற வேண்டும். சாதி மறுப்பு திருமணங்கள் செய்பவர்களுக்கு அரசு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.

ஆணவப் படுகொலை போன்ற குற்றங்கள் நடைபெறாத வகையில், நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார். மேலும், இவ்வழ க்கு ஆண்டுகள் பல கடந்தும், குற்ற வாளிகளுக்கு தகுந்த தண்டனை பெற்றுத் தந்து, நீதியை நிலைநாட்ட போராடிய வழக்கறிஞர் ப.பா.மோகன் மற்றும் அவரது சக வழக்கறிஞர் களுக்கும் பாராட்டுகளை தெரிவித்தார். வழக்கு நடைபெறும் போது, ஆதிக்க  சக்திகளால் கோகுல்ராஜ் குடும்பத்தி னர் கடுமையான நெருக்கடிக்கு தள்ளப்பட்ட போதும், கடைசிவரை நீதிக் காக போராடியது பாராட்டுக்குரியது இது சாதி மறுப்பு திருமணம் செய் பவர்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது.

இவ்வழக்கை விசாரித்த பெண் காவல் அதிகாரி விஷ்ணுப்ரியா உயரதி காரிகளின் நெருக்கடியின் காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளார். அந்த அளவிற்கு கோகுல்ராஜின் ஆண வப்படுகொலை தமிழ்நாட்டையே உலுக்கியது. மேலும், பாதிக்கப்பட்ட கோகுல்ராஜ் குடும்பத்தினருக்கு உரிய  நிவாரணம் வழங்க வேண்டும். கோகுல் ராஜின் சகோதரர் கலைச்செல்வனுக்கு அரசு வேலை வழங்க, சிபிஎம் சட்ட மன்ற உறுப்பினர்கள் மூலமாக தமிழக அரசுக்கு வலியுறுத்தப்படும், என்றார். முன்னதாக, இந்நிகழ்வில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில பொதுச்செய லாளர் கே.சாமுவேல்ராஜ், மாவட்டத் தலைவர் ஆர். குழந்தைவேல், காப்பீட்டு கழக ஊழியர் சங்கத்தின் தென் மண்டல துணைத் தலைவர் க.சுவாமிநாதன், சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் பி.டில்லிபாபு, மாவட்டச் செயலாளர் மேவை.சண்முகராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ். கே.சேகர், ஓமலூர் தாலுகா செயலா ளர் ஈஸ்வரன், சேலம் வடக்கு மாந கரச் செயலாளர் என்.பிரவீன் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.