செங்கல்பட்டு, மே12- பஞ்சமி நிலங்களை மீட்கும் போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதியாக நடத்தும் என்று கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் தெரிவித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செங்கல்பட்டு மாவட்டக் குழு சார்பில் வியாழனன்று (மே 11) சிங்கபெருமாள் கோயில் அருகே காரல் மார்க்ஸ் 205வது பிறந்தநாள் கொண்டாட்டம், அரசியல் விளக்க பொதுக்கூட்டம், கட்சி நிதியளிப்பு என முப்பெரும் விழா நடை பெற்றது. இதில் பேசிய அவர், “செங்கல்பட்டு மாவட்டம், ஒரு காலத்தில் விவசாயத்தில் செழித்த மாவட்டம். ஏரிகள் நிறைந்த மாவட்டம், டெல்டா மாவட்டத்தை போன்று நெல் உற்பத்தி செய்த மாவட்டம், தற்போது, விளை நிலங்களை கார்ப்பரேட் நிறுவனங்கள் கபளீகரம் செய்துவிட்டன”என்றார். தமிழ்நாட்டில் 4 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பஞ்சமி நிலம் உள்ளது. இந்த நிலம் தற்போது தலித் மக்க ளிடம் கிடையாது. எனவே, அந்த நிலங்களை மீட்கும் போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து முன்னெடுக் கும் என்றும் அவர் கூறி னார். இத்தனை ஆண்டுக ளுக்கு பின்னும் மனிதன் மனிதனாக மதிக்கப்படுவ தில்லை. பெரியார், அம்பேத்கர் போராடினர். இடதுசாரி அமைப்பு கள், திராவிட அமைப்பு கள் போராடின. ஆனா லும் சாதியக் கொடுமை ஒழியவில்லை. சாதியக் கொடுமைக்கு எதிராக மிகப்பெரிய போராட் டத்தை நடத்த வேண்டிய கடமை நம்மிடம் உள்ளது. எனவே, அடிப்படை சமுக மாற்றத்தை வலியுறுத்தி விழுப்புரத்தில் நடைபெறும் பட்டியலின சிறப்பு மாநாட் டில் அனைவரும் பெருந் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
பேட்டி
முன்னதாக செய்தி யாளர்களிடம் பேசிய பால கிருஷ்ணன், ஆளுநர் ஆர்.என்.ரவி உடனடியாக பதவி விலக வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். “முந்தைய அதிமுக ஆட்சி யில் அனைத்துத் துறைகளி லும் நிர்வாக சீர்கேடு, முறை கேடுகள் தலைவிரித்து ஆடின. ஆட்சி மாற்றத் திற்கு பிறகு, தற்போதைய சூழ்நிலையில் திமுக அரசு மக்களின் பிரச்சனைக ளுக்கு தீர்வு காண்பதில் ஆக்கப்பூர்வமான நடவடிக் கையில் ஈடுபட்டிருப்பது வர வேற்கத்தக்கது”என்றார். கடுமையான பொரு ளாதார நெருக்கடியிலும் ஒன்றிய பாஜக அரசு தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிதியை வழங்கா மல் ஓர வஞ்சனையாக நடந்துகொள்கிறது. உள்ளாட்சி அமைப்புக ளுக்கு கொடுக்க வேண்டிய நிதியை கொடுக்கவில்லை. ஒன்றிய அரசின் பாரபட்ச மான நடவடிக்கைகளை சமாளித்து வரும் திமுக அரசு, தேர்தலின் போது கொடுத்த வாக்குறு திகளை நிறைவேற்றி வரு கிறது என்றும் பாலகிருஷ் ணன் கூறினார்.
ஒப்பந்த ஊழியர்கள்
மறுபுறத்தில், ஒப்பந்த முறையில் ஊழியர்களை பயன்படுத்துவதை மாநில அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டு மக்களைப் பாதுகாக்கும் நடிவடிக்கைகளை அரசு உறுதியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
எல்லை மீறும் ஆளுநர்
தமிழ்நாடு ஆளுநர் எல்லை மீறி செயல்படு கிறார். அரசியல் சாசனத் திற்கு மாறாக நடந்துகொள் கிறார். போட்டி அரசியல் நடத்தும் ஆளுநரை வன்மை யாக கண்டிப்பதுடன், இனி யும் அவரை தமிழ்நாட்டில் அனுமதிக்க முடியாது. உடனடியாக அவர் பதவி விலக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும் என்றும் முதலமைச்சருக்கு வேண்டு கோள் விடுத்தார். காட்டாங்கொளத்தூர் பகுதி செயலாளர் குண சேகரன் தலைமையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஆறுமுகநயினார் மாவட்டச் செயலாளர் ப.சு.பாரதி அண்ணா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் இ.சங்கர், கே.சேஷாத்திரி, வி.தமிழரசி உள்ளிட்ட பலர் பேசினர்.