tamilnadu

img

டிபிஐ வளாகத்துக்கு பேராசிரியர் அன்பழகன் பெயர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை,டிச.19- சென்னையிலுள்ள  பள்ளிக்கல்வித் துறை அலுவலக (டிபிஐ) வளாகத்துக்கு க.அன்பழகன் பெயர் வைக்கப்பட்ட கல்வெட்டு மற்றும் வளைவை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நினைவைப் போற்றும் வகையில் தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை செயல்படும் டிபிஐ வளாகத்தில் பேராசிரியர் அன்பழகன் சிலை நிறுவப்பட்டு, அவ்வளாகம் “பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம்” என்றும் அழைக்கப்படும். சிறந்த பள்ளிகளுக்கு பேராசிரியர் பெயரில் விருதும் வழங்கப்படும் என்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டா லின் ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி, பேராசிரியர் அன்பழகனின் 101 பிறந்தநாள் திங்க ளன்று (டிச.19) கொண்டாப்பட்டது. இதனை முன்னிட்டு சென்னை, நுங்கம் பாக்கத்திலுள்ள பள்ளிக்கல்வித்துறை அலுவலக வளாகத்திற்கு “பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பெயர் சூட்டி னார். மேலும் நூற்றாண்டு வளைவு மற்றும் கல்வெட்டையும் முதல்வர் திறந்து வைத்தார்.

‘எல்லார்க்கும்  எல்லாம்’

பேராசிரியர் அன்பழகனின் 101 பிறந்தநாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒன்பது முறை சட்ட மன்ற உறுப்பினர், 1967-1971 வரையில் திருச்செங்கோடு மக்களவைத் தொகுதி உறுப்பினர், இருமுறை கல்வித் துறை அமைச்சர், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர், சமூகநலத்துறை அமைச்சர், தலைவர் கருணாநிதி ஐந்தாம் முறையாக முதலமைச்சர் பொறுப்பேற்ற 2006-2011 காலத்தில் நிதி யமைச்சர், 1977 ஆம் ஆண்டு தொடங்கி 2020 வரையிலும் கழகத்தின் பொதுச் செயலாளர் எனத் தமிழ்நாட்டின் அரசிய லிலும் திமுகவின் வரலாற்றிலும் எவராலும் அழிக்க முடியாத் தடத்தை விட்டுச் சென்றுள்ளார் பேராசிரியர். நீதிக்கட்சி காலத்து சமூகநீதி - வகுப்புரிமை - ஆகியவை எந்தக் காலத்திலும் எந்தச் சூழலிலும் பட்டுப் போய்விட அனுமதிக்கக் கூடாது என்பதைப் பேராசிரியர் மேடைதோறும் வலியுறுத்திக் கொண்டிருந்தார். சமூகநீதிக் கருத்தியல், வகுப்புரிமை இந்தியா முழுமைக்கும் ஒலிக்கும் சொல்லாக - யார் நினைத்தாலும் அதில் கை வைக்க முடியாத கருத்தி யலாக இருக்கிறது. ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற இலக்கை நோக்கி இவ்வையகம் உயர உறுதி ஏற்போம்”. இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.