மதநல்லிணக்கத்தைக் காக்க ஜூன் 22 மாநாட்டிற்கு தடை வேண்டும்
மதுரை மதநல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு வலியுறுத்தல்
மதுரை, ஜூன் 2 - திருப்பரங்குன்றம் பிரச்சனையின் தொடர்ச்சியாக, ஜூன் 22 அன்று மதுரை ரிங்ரோடு அம்மா திடலில் “முருக பக்தர்கள் மாநாடு” நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இந்த மாநாட்டிற்கு தடை விதிக்க வேண்டும் என மதுரை மதநல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
மதநல்லிணக்கத்திற்கு அச்சுறுத்தல்
கூட்டமைப்பின் கூற்றுப்படி, இந்த மாநாட்டுக்கான பிரச்சாரம் மத வெறுப்பை பரப்பும் விதத்தில் மேற் கொள்ளப்படுவதாகவும், “குன்றம் காக்க இந்துக்களே திரளுங்கள்” என்ற முழக்கத்துடன் சிறுபான்மை மக்கள் மீதான வெறுப்பை நுட்பமாக பரப்பும் முயற்சி நடைபெறுவதாகவும் தெரி வித்துள்ளது. கடந்த பிப்ரவரி 4 அன்று 144 தடை உத்தரவு நடைமுறையில் இருந்த போது திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் நடந்த சம்பவங்களை நினைவுபடுத்தியுள்ள கூட்டமைப்பு, அதே இந்துத்வா அமைப்புகள்தான் இந்த மாநாட்டையும் நடத்த உள்ள தாக குற்றம்சாட்டியுள்ளது. மக்கள் ஒற்றுமை மாநாடு அறிவிப்பு இந்நிலையில், மதநல்லி ணக்கத்தை வலியுறுத்தும் வகையில் ஜூன் 29 ஞாயிறு அன்று மதுரை ஓபுளாபடித்துரையில் “மக்கள் ஒற்றுமை மாநாடு” நடத்த கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. இந்த மாநாட்டில் கீழ்க்கண்ட கோரிக்கைகள் முன்வைக்கப்படும்: - திருப்பரங்குன்றம் மலையை மத நல்லிணக்க மலையாக அறிவிக்க வேண்டும். - அனைத்து மத வழிபாட்டு உரிமை களையும் பாதுகாக்க வேண்டும். - அன்னை தமிழில் அர்ச்சனை நடத்த அனைத்து தமிழர்களையும் அர்ச்சகராக்க வேண்டும். - சுப்ரமணியன் என்ற சமஸ்கிருதப் பெயரை முருகன் என மாற்றவேண்டும். மாவட்ட ஆட்சியரிடம் மனு மதுரையின் மதநல்லிணக்கம், அமைதி மற்றும் வளர்ச்சியைக் காக்கும் பொருட்டு ஜூன் 22 மாநாட்டி ற்கு தடை விதிக்கவும், தங்களின் மக்கள் ஒற்றுமை மாநாட்டிற்கு அனு மதி வழங்கவும் கோரி திங்களன்று மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. “அமைதிப் பூங்காவான தமிழ்நாடு குஜராத், உத்தரப்பிரதேசம் போல மாறாமல் இருக்க வேண்டும். மதுரையின் மதநல்லிணக்கம் பாதுகாக்கப்பட வேண்டும்” என இக்கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.