ஜூலை 9 அகில இந்திய பொது வேலை நிறுத்தம்
ஓசூரில் தொழிற்சங்கங்கள் கலந்துரையாடல்
கிருஷ்ணகிரி, ஜூன் 29- ஒன்றிய அரசின் தொழிலாளர்கள், விவ சாயிகள், மக்கள் விரோத கொள்கை களைக் கண்டித்து அனைத்துத் தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் அகில இந்திய பொது வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் ஜூலை 9 அன்று நடை பெற உள்ளது. தேச மக்களின் நலன் காத்திட நடைபெற இருக்கும் இந்தப் போராட்டத்தை வெற்றிகர மாக்க நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ண கிரி மண்டலங்களின் அனைத்து தொழிற் சங்கத் தலைவர்களின் கலந்துரையாடல் மற்றும் திட்டமிடல் கூட்டம் ஓசூர் ஏஐடியூசி அலுவலகத்தில் நடைபெற்றது. தொமுச கிருஷ்ணகிரி கவுன்சில் செய லாளர் கோபாலகிருஷ்ணன், ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலாளர் மாதையன், சிஐடியு மாவட்ட செயலாளர் ஸ்ரீதர், ஐஎன்டி யுசி மாவட்ட பொதுச் செயலாளர் ஜி.முனி ராஜ், எச்எம்எஸ் தருமபுரி செயலாளர் தாமோதரன் உள்ளிட்ட தொழிற்சங்கத் தலைவர்கள் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினர். ஏஐடியுசி மாநில செயலாளர் ராதா கிருஷ்ணன், தொமுச மாநில துணைத் தலைவர் கிருஷ்ணன், சிஐடியு மாநில செயலாளர் வெங்கடாபதி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். தேசம் தழுவிய பொது வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டங்களை வெற்றி கரமாக்க மேற்கொள்ள வேண்டிய நட வடிக்கைகள் குறித்து விளக்கினர். சிஐடியு தர்மபுரி மாவட்ட செயலாளர் ஜீவா, நாமக்கல் மாவட்ட செயலாளர் வேலுச்சாமி, தலைவர் அசோகன், சேலம் மாவட்ட செயலாளர் கோவிந்தன், சிஐடியு அங்கன்வாடி மாநில துணைச் செயலாளர் கோவிந்தம்மா உள்ளிட்ட 4 மண்டல அனைத்துத் தொழிற்சங்கத் தலைவர்களும் கலந்துகொண்டனர். ஐஎன்டியுசி மாவட்ட துணைத் தலைவர் பக்தவச்சலம் நன்றி கூறினார்.