ஜூலை 9 - பொது வேலைநிறுத்தத்தை மாபெரும் வெற்றிபெறச் செய்வோம்!
நாட்டு மக்களுக்கு இடதுசாரிக் கட்சிகள் அறைகூவல்
புதுதில்லி, ஜூன் 24 - ஜூலை 9 அன்று நடைபெற வுள்ள அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தை மகத்தான வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று, நாட்டு மக்களுக்கு இடதுசாரிக் கட்சி கள் அறைகூவல் விடுத்துள்ளன. இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செய லாளர் எம்.ஏ. பேபி, இந்தியக் கம்யூ னிஸ்ட் கட்சியின் பொதுச்செயலா ளர் து. ராஜா, இந்தியக் கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்-லிப ரேசன்) கட்சியின் பொதுச்செய லாளர் திபங்கர் பட்டாச்சார்யா, புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் மனோஜ் பட்டாச் சார்யா மற்றும் அகில இந்திய பார்வர்ட் பிளாக் பொதுச்செயலாளர் தேவராஜன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது:
இடதுசாரி கட்சிகள் முழுமையான ஆதரவு
கீழே கையொப்பமிட்டுள்ள ஐந்து இடதுசாரிக் கட்சிகளும் மத்தியத் தொழிற்சங்கங்கள் மற்றும் சுயேச்சையான அகில இந்திய துறை வாரி சங்கங்களும் சம்மேளனங் களும் கூட்டாக அறிவித்துள்ள ‘2025 ஜூலை 9 - அகில இந்திய பொது வேலை நிறுத்த’த்திற்கு தங்களு டைய முழுமையான ஆதரவினை உரித்தாக்கிக் கொள்கிறோம். இந்தப் பொது வேலைநிறுத்த மானது, பிரதானமாக தொழிலாளர் களின் கூட்டுபேர உரிமை மற்றும் அணிதிரளும் உரிமை உட்பட அடிப்படை ஜனநாயக உரிமைகளை நசுக்கக்கூடிய விதத்தில்- கார்ப்பரேட் நிகழ்ச்சி நிரலின் அடிப்படை யில் புதிய தொழிலாளர் தொகுப்பு சட்டங்களை (Labour Codes) அமல்படுத்துவதற்கு எதிராக அறி விக்கப்பட்டுள்ளது.
மூர்க்கத்தனமான தனியார்மய நடவடிக்கை
மூன்றாவது முறையாக ஆட்சி யில் அமர்ந்திருக்கும் பாஜக தலை மையிலான ஒன்றிய அரசாங்கம் இப்போது தன்னுடைய இந்தத் தொழி லாளர் தொகுப்பு சட்டங்களைப் பயன்படுத்தி நவீன தாராளமய நிகழ்ச்சிநிரலை மிகவும் மூர்க்கத் தனமான முறையில் உந்தித் தள்ளிக் கொண்டிருக்கிறது. பாதுகாப்புத் துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை போன்ற கேந்திரமான பொதுத்துறை நிறுவனங்களைக்கூட தனியாரிடம் தாரை வார்ப்பதற்கு நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டி ருக்கிறது. தொழிலாளர் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக எழும் அனைத்து எதிர்ப்புகளையும் நசுக்கிட வும் நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கிறது. ‘ஜூலை 9 வேலை நிறுத்தமானது’, விவசாயிகள், விவசாயத் தொழி லாளர்கள் மற்றும் பொது மக்களின் கோரிக்கைகளையும் முன்வைத்து அறைகூவல் விடுக்க ப்பட்டிருக்கிறது.
விவசாயிகள் - விவசாயத் தொழிலாளர்களும் ஆதரவு
இந்த வேலைநிறுத்தத்திற்கு சம்யுக்த கிசான் மோர்ச்சா மற்றும் விவசாயத் தொழிலாளர் சங்கங் களும் தங்கள் ஆதரவை அறிவித்துள் ளன. ஜூலை 9 அன்று, வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக விவசாயி கள்- பொது மக்களை அணிதிரட்ட வும் அறைகூவல் விடுத்துள்ளன. இவ்வாறு விவசாயிகள் அமைப்பு களின் ஒருமைப்பாட்டோடு நடை பெறும் இவ்வேலைநிறுத்தம், தொழி லாளர்கள் மத்தியில் வெறுப்பை விதைத்து அவர்களைப் பிரித்தாள முயற்சிக்கும் அரசின் அனைத்து விதமான முயற்சிகளையும் தகர்த்தெறிந்து தொழிலாளர் ஒற்றுமையை உருக்குபோன்று ஒற்றுமைப்படுத்திட உதவிடும். இந்த பொது வேலை நிறுத்தத்திற்கு பொதுமக்கள் தங்கள் ஆதரவினை நல்கி மிகப் பெரிய அளவில் அணிதிரண்டு, வேலை நிறுத்தத்தை மகத்தான முறை யில் வெற்றிபெறச் செய்திட வேண்டு மாய் பொதுமக்களை இடதுசாரிக் கட்சிகள் சார்பில் அறைகூவி அழைக் கிறோம். இவ்வாறு இடதுசாரிக் கட்சித் தலைவர்கள் அறைகூவல் விடுத்துள் ளனர். (ந.நி.)