சிவகாசி தொழிலாளர்களின் மகத்தான தலைவர் ஜே.லாசர்
படத்திறப்பு நிகழ்ச்சியில் பெ.சண்முகம் பெருமிதம்
“சிவகாசி பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் முன்னோடித் தலைவர் ஜே.லாசர் கட்சிக்காக உரு வாக்கிய அஸ்திவாரத்தில் நாம் கட்டடம் கட்டி கோபுரமாக உயர்த்துவோம்” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநில செயலாளர் பெ. சண்முகம் உறுதியளித்தார். சிவகாசியில் கட்சியின் முகமாகவும், விருதுநகர் மாவட்டத்தில் தொழிற்சங்க அமைப்பின் ஸ்தாபகத் தலைவராகவும் 60 ஆண்டு கள் மக்களின் நலனுக்காக போராடிய தோழர் ஜே.லாச ரின் உருவப்படம் திறக்கும் விழா சிவகாசி தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.என்.தேவா தலைமை வகித்தார். மாநகரச் செய லாளர் ஆர்.சுரேஷ்குமார் வரவேற்புரை நிகழ்த்தினார். மாவட்டக்குழு உறுப்பினர் பி.பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.
“சிவகாசி மக்களின் மகத்தான தலைவர்”
மாநில செயலாளர் பெ.சண்முகம் தனது உணர்ச்சிகரமான உரையில், “சிவகாசி மக்களின் மகத் தான தலைவர் லாசர். பரா சக்தி காலனியில் இருந்த கட்சி அலுவலகத்தில் எப்போ தும் அச்சு, பட்டாசு, தீப்பெட்டி தொழிலாளர்கள் தங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண நம்பிக்கையுடன் காத்தி ருப்பார்கள். அவர்களுக்கு ஆதரவாகவும், பக்கபலமாக வும் இருந்தவர் தோழர் லாசர்” என்று நினைவு கூர்ந்தார். தானும் இந்திய மாணவர் சங்கத்தின் ஒன்றுபட்ட இராமநாதபுரம் (முகவை) மாவட்ட செயலாளராக இருந்த போது, சிவகாசி கடை வீதிகளில் உண்டியல் வசூல் செய்த காலத்தில், காவல்துறை இடையூறு செய்தபோது லாசர் அவர்கள் தலையிட்டு தோழர்களை காப்பாற்றிய சம்பவத்தையும் உணர்ச்சிப்பூர்வமாக பகிர்ந்து கொண்டார்.
பட்டாசுத் தொழில் பாதுகாப்பு
“சிவகாசியின் தொழில் களைப் பாதுகாப்பது மிக அவ சியம். இந்திய நாட்டின் பொரு ளாதாரத்தில் மிக முக்கிய பங்கு வகிப்பது பட்டாசு, தீப் பெட்டி, அச்சுத் தொழில்கள்” என்று வலியுறுத்திய சண் முகம், “பட்டாசு தயாரிக்கத் தடை, வெடிக்கத் தடை என உச்சநீதிமன்றம் தெரிவித்த போது, லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வா தாரம் பாதிக்கப்படும் எனக் கூறி அதை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து, வாதாடிய பெரு மை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சிக்கே உண்டு” என்றார். அதேவேளை, பட்டாசுத் தொழிலில் தொடர்ந்து உயிரிழப்புகள் நிகழ்வதை சுட்டிக்காட்டிய அவர், “ஆலை உரிமையாளர்களுக்கு லாபம் எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியமானது தொழிலாளர்களின் உயிர்,” என்று குறிப்பிட்டார். மேலும், சிவகாசியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனைத்து வசதிகளுடன் கூடிய உயர் சிகிச்சை அளிக் கும் உட்கட்டமைப்பு களை தமி ழக அரசு ஏற்படுத்த வேண்டும் என்றும் கோரினார்.
காஷ்மீர் தாக்குதல் குறித்து கண்டனம்
காஷ்மீரில் சுற்றுலா பய ணிகள் மீது நடந்த பயங்கர வாத தாக்குதல் குறித்து கடுமையாக விமர்சித்த அவர், “கொல்லப்பட்ட 26 பேரில் 15 பேர் இஸ்லாமியர்கள் ஆவர். ஆனால், ஆர்.எஸ்.எஸ்., பாஜகவினர் தங்களது சொந்த அரசியல் நிகழ்ச்சி நிர லான வெறுப்பு அரசியலை பரப்புகிறார்கள்” என்று குற்றம் சாட்டினார். “ஒரு மாத காலம் அங்கு காத்திருந்து திட்டமிட்டு தாக்குதல் நடத்தியுள்ளனர் என செய்திகள் வருகின்றன. அங்கு ராணுவம், காவல் துறை பாதுகாப்பிற்கு இல்லையா? ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு இதுபற்றி ஏன் தெரியவில்லை?” என்று கேள்வி எழுப்பினார். “பாகிஸ்தானில் உள்ள அப்பாவி மக்களுக்கு எதிரான நடவடிக்கை எடுப்பதும், சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து செய்வதும் நாட்டை ஏமாற்றும் வேலையாகும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்காமல், தீவிரவாதிகள் மீதான மக்களின் எதிர்ப்பு உணர்வுகளை திசை திருப்பும் வேலையை பிரதமர் செய்து வருகிறார்,” என்று சாடினார். “கீழ்த்தரமான, அயோக்கியத்தனமான முறையில் இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரத்தை பாஜக, ஆர்.எஸ்.எஸ். செய்து வரு கின்றனர். இதை எதிர்த்து அனைவரும் கண்டன குரல் எழுப்ப வேண்டும். வெறுப்பு அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டும். அனைவரின் வாழ்விலும் வசந்தம் வீசிட ஒற்றுமையாக போராட வேண்டும்,” என்று அழைப்பு விடுத்தார். இந்நிகழ்ச்சியில் சிவகாசி சட்டப்பேரவை உறுப்பினர் ஜி. அசோகன், மாநில செயற்குழு உறுப்பினர் கே.அர்ஜூனன், மாவட்டச் செயலாளர் அ.குரு சாமி மாவட்ட செயற்குழு, மாவட்டக்குழு உறுப்பினர் கள், திமுக, சிபிஐ, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், இந்திய தேசிய லீக், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் பிரதி நிதிகளும் கலந்துகொண்டு புகழஞ்சலி செலுத்தினர்.