tamilnadu

அரசு பேருந்துகளில் தமிழ்நாடு என்ற பெயரை நீக்கியது அதிமுக அரசுதான்! அமைச்சர் சிவசங்கர் பேட்டி

அரசு பேருந்துகளில் தமிழ்நாடு என்ற பெயரை நீக்கியது அதிமுக அரசுதான்! அமைச்சர் சிவசங்கர் பேட்டி

அரியலூர், ஜூன் 4 - அரசுப் பேருந்துகளில் தமிழ்நாடு என்ற பெயர் 2012-இல்  அதிமுக ஆட்சியில் தான் நீக்கப்பட்டது என போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் தெரிவித்துள்ளார். அரியலூரில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், பேருந்துகளில் தமிழ்நாடு என்ற பெயரை தற்போது நீக்கியதாக சிலர் சர்ச்சையை கிளப்புகின்றனர். இந்தப் பெயர் மாற்றம் அதிமுக ஆட்சிக் காலத்திலேயே, சுமார் 13 ஆண்டுகளுக்கு முன்பே மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த காலத்தில் தொடங்கப்பட்ட அரசுப் பேருந்துகளில் பேருந்தின் முன்பக் கத்தில் ‘அரசுப் போக்குவரத்து கழகம்’ என்று மட்டுமே பெயர்  குறிப்பிடப்பட்டிருந்தது. ‘தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம், திருநெல்வேலி’ என்று முழுமையாக எழுதும்போது, பெயர் நீளமாகவும், படிக்க வசதியாக இல்லை என்று கூறி  அதிமுக ஆட்சியில் மாற்றப்பட்டது. சிலர் அதிமுக ஆட்சியில் நடந்ததை தற்போது நடந்தது போல சர்ச்சை கிளப்பிக் கொண்டிருக்கின்றனர். பழைய பேருந்து கள் இன்னும் ஓடிக் கொண்டிருப்பதாகத் தகவல்கள் பரவி வந்தாலும், முதலமைச்சர் பல புதிய பேருந்துகளைத் தொடங்கி  வைத்துள்ளார். மேலும் பல புதிய பேருந்துகளை விரைவில் கொண்டுவர உள்ளார். அதிமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட வழித்தடங்களிலும் தற்போது பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு என பெயர் சூட்டியதே திமுக அரசு தான்; எனவே, யாரும் பாடம் எடுக்க வேண்டாம் என்று கூறி னார்.