tamilnadu

img

சமூக நீதிக்கான சமர்க்களத்தில்... சவால்கள் நிறைந்த காலம் அது!

சிபிஐ (எம்) உட்பட பல இடதுசாரி மற்றும் ஜனநாயக இயக்கங்கள் சாதி மோதல்களை தவிர்க்கவும், அமைதியை ஏற்படுத்தவும் பெரும் முயற்சிகளை அக்காலத்தில் செய்தபோதிலும் மறுபுறம் சாதிய சக்திகள் மௌனம் காக்கவில்லை. பகைமையையும், மோதல்களையும் அதிகரிக்க மிகத்தீவிரமாகவே செயல்பட்டன. இதனால் அந்நாட்களில் மிகக்கடுமையாகப் பாதிக்கப்பட்ட மாவட்டமாக விருதுநகர் மாவட்டம் இருந்தது. மோதல்களால் பாதிக்கப்பட்ட இம்மாவட் டத்தில் உள்ள ஏராளமான கிராமங்களுக்கும், நகரப்பகுதிகளுக்கும் மறைந்த தோழர் எம்.என்.எஸ். வெங்கட்ராமன் அவர்களோடும், தோழர்கள் எஸ்.பாலசுப்பிரமணியன், கே. சாமுவேல்ராஜ், அ.சேகர், கே.அர்ஜூனன், திரு ஞானம், சுப்பாராஜ் மற்றும் இதர மாவட்ட தலைவர்களோடு நானும் சென்றிருந்தேன். இம்மாவட்டத்தில் சாத்தூர், ராஜபாளை யம், சிவகாசி நகரங்களும், இந்நகரங்களை யொட்டிய கிராமங்களும் இம்மோதல்களில் கடுமையாக பாதிக்கப்பட்டன. இப்பகுதிகளில் தொடர்ச்சியான பல படுகொலைகள் நடந்தன. சமுத்திரம் என்ற தொழிலாளி தீயிட்டுக் கொளுத் தப்பட்டார். சிவகாசியில் துப்பாக்கிச்சூடு நடத்தும் அளவுக்கு நிலைமை சென்றது. 

முதல்வர் ஜெயலலிதா விசாரித்தறிந்தார்
ராஜபாளையம் நகரில் பதட்டம் எந்த அளவுக்கு இருந்தது என்றால் அன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதா நேரடியாக அந்நகருக்கு வருகை தந்து பார்வையிடும் அளவுக்கு இருந்தது. அங்கு சர்வ கட்சிக் கூட்டம் நடத்தப்பட்டு அதில் அவரும் பங்கேற் றார். இக்கூட்டத்தில் சிபிஐ (எம்) சார்பாக அப்போதைய ராஜபாளையம் நகர செய லாளர் ரவியும், எஸ்.பி. செல்லப்பிள்ளையும் கலந்து கொண்டனர். களத்தில் தீவிரமாகச் செயல்பட்டு ரவி ஏராளமான விபரங்களை திரட்டியிருந்தார். அவ்விபரங்களையும் நிலைமையை தணிக்க தக்க ஆலோசனை களையும் ரவி எடுத்து கூறும்போது, ஜெய லலிதா ஆர்வத்துடன் கேட்டதோடு பலமுறை அவரை குறுக்கு விசாரணை செய்து நிலைமை களை தெரிந்து கொண்டார். அமைதியை நிலைநாட்ட அனைத்து அரசியல் இயக்கங் களும் ஒன்றிணைந்து தீவிரமாகச் செயல் படுவது என இக்கூட்டத்தில் தீர்மானிக்கப் பட்டது. ஆயினும், நிலைமை கட்டுமீறி யதாகவே இருந்தது. ராஜபாளையம் நகர், மங்காபுரம் பகுதி மிக பதட்டமானதாக இருந்தது. இப்பகுதி யில் உள்ள தலித் மக்கள் இதில் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தனர்.

தலித் மக்கள் வாழும் குடியிருப்புப் பகுதியிலிருந்து நகருக்குள் செல்ல ஒரேயொரு பாதை தான் இருந்தது. அதுவும் சாதி இந்துக்கள் வசிக்கும் தெருக் கள் வழியாக செல்வதாகவே அமைந்திருந் தது. அப்போதைய சூழலில் அவ்வாறு செல்ல இயலாத நிலையில் தலித் மக்கள் ஏறத்தாழ அங்கிருந்து வெளியேற முடியாமல் சிறை வைக்கப்பட்ட நிலையிலிருந்தனர். இந்நிலையில் சிபிஐ (எம்) எடுத்த முன் முயற்சி அடிப்படையில் இதர பல ஜனநாயக இயக்கங்களும் இணைந்து செயல்பட்டு தமிழக அரசை ஒரு பாதை ஏற்படுத்தித் தர நிர்ப்பந்தம் செய்தனர். இதன் பிறகே அப்பகுதி யில் நகராட்சிக்கு சொந்தமான ஒரு பகுதியில் கட்டப்பட்டிருந்த சுவரை இடித்து ஒரு பாதை உருவாக்கப்பட்டு தலித் மக்கள் நகர் பகுதியை சென்றடைய வழி காணப்பட்டது. இதன்பிறகு இப்பகுதியில் பதட்ட நிலைமை சற்று தணிந்தது. சாத்தூரில் அமைதியை ஏற்படுத்துவதற் கான ஒரு கூட்டத்தை அப்போதைய காவல் துறை மாவட்ட கண்காணிப்பாளர் பாண்டியன் கூட்டியிருந்தார். ஒருநாள் இரவு முழுவதும் இரு சமூகத்தினரையும் சேர்ந்த முக்கிய பிரமுகர்களை சந்தித்து அவர்களை கூட்டத்தில் பங்கேற்க வைப்பதற்கான ஏற்பாடு களை காவலர்கள் செய்ய வேண்டியிருந்தது. பொழுது விடிந்ததும் அமைதி கூட்டம் கண் காணிப்பாளர் பாண்டியன் முன்னிலையில் வெற்றிகரமாகவே நடந்தது. இக்கூட்டத்தில் அரசியல் இயக்கம் என்ற முறையில் சிபிஐ(எம்)-ஐச் சார்ந்த அன்றைய சாத்தூர் தாலுகாச் செயலாளர் எஸ். பாலசுப்பிர மணியன் மட்டுமே கலந்து கொண்டார். நிலை மைகள் பற்றிய முழு ஞானம் அவருக்கு இருந்த தால் தக்க ஆலோசனைகளை இக்கூட்டத்தில் எடுத்துக் கூறினார். நீண்ட விவாதங்களுக்கு பிறகு இரு சமூகப் பிரிவினரும் அமைதியை ஏற்படுத்த ஒத்துழைப்பதாக ஏற்றுக் கொண்ட னர். ஆயினும், அமைதி நீடிக்கவில்லை. கூட்டம் நடைபெற்ற ஒரு சில நாட்களில் மீண்டும் கலவர நிலைமை ஏற்பட்டது.

குழந்தைகள் ஊர்வலம்
சாத்தூரில் தமுஎகச தோழர்கள் பதட்டத்தை தணிக்க சிறப்பான முயற்சிகளை மேற்கொண்டனர். அமைதியையும், ஒற்றுமையையும் ஏற்படுத்த வேண்டுகோள் விடுத்து கலைநயமிக்க வண்ண, வண்ண சுவரொட்டிகளை நகர் முழுவதும் ஒட்டினர். அதோடு நிற்காமல் நூற்றுக்கணக்கான குழந்தைகளை திரட்டி “மோதல் வேண்டாம், அமைதி வேண்டும்” என்ற பேனர் களை சுமந்தபடி குழந்தைகள் சாத்தூரின் பிரதான வீதிகளில் ஊர்வலம் வந்தனர். சாதிவெறிக்கு எதிராக மனித நேய உணர்வுகளை தட்டியெழுப்பிய இயக்கமாக குழந்தைகளின் ஊர்வலம் அமைந்தது. இத்தகைய சூழலில் மத்திய தர வர்க்க அரங்க தோழர்களின் தலையீடு பொதுவாக குறைவானதாகவே இருக்கும். ஆனால் சாத்தூரில் இந்நிலைமையில் மாற்றம் இருந்தது. அவர்களும் அமைதியை ஏற்படுத்த களத்தில் குதித்தனர். பல நூற்றுக் கணக்கான மத்திய தர வர்க்க தோழர்கள் பங்கேற்ற அமைதி பேரணி சாத்தூர் நகரில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியது. சமா தானத்தை நேசித்த அனைத்து தரப்பு மக்க ளுக்கும், மத்திய தர வர்க்க ஊழியர்கள், குழந் தைகள் நடத்திய அமைதி பேரணிகள் தக்க ஆறுதலாக இருந்தது. இவ்வாறு இடதுசாரி இயக்கங்களின் பெரும் முயற்சி உள்பட பல ஜனநாயக இயக்கங்களும், அமைதியை விரும்பிய அரசியல் இயக்கங்களும் பதட்டத்தை தணிக்க பெரும்பாடுபட்டாலும் சாதிவெறி சக்திகள் சமாதானம் அடையவில்லை.

மோதலை யும், பகைமையையும் புதிய பகுதிகளுக்கு விரிவுபடுத்தினர். தேசிகாபுரம், மம்சாபுரம், சேத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மோதல் களை உருவாக்கினர். சுதந்திரப்போராட்ட தியாகிகள்/மக்களுக்காக போராடிய தலைவர்களின் பெயரால் அக்காலத்தில் மாவட்டங்களும், போக்குவரத்து கழகங்களும் உருவாக்கப் பட்டன. தமிழக அரசின் இத்தகு முயற்சிக்கு ஜனநாயக, தேசபக்த இயக்கங்களின் மகத்தான ஆதரவு இருந்தது. ஆனால், சாதிய சக்திகளோ இப்பிரச்சனையை சாதி அடிப்படையிலேயே அணுகினர். இதன் ஒரு அனுபவத்தை விருதுநகர் மாவட்டத்தில் காண முடிந்தது. வீரன் சுந்தரலிங்கம் பெயர் விருதுநகர் மாவட்ட போக்குவரத்து கழகத் திற்கு சூட்டப்பட்டது. விடுதலைப்போரில் சாதி, மதம் கடந்து பல போராளிகள் ஈடுபட்டு தங்களின் இன்னுயிரை ஈந்தனர். இவ்வரிசை யில் சமூக ரீதியாக ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து ஆனால் வெள்ளை ஏகாதிபத்தியத் திற்கு எதிராக வீரச்சமர் புரிந்தவர் வீரன் சுந்தரலிங்கம். எனவே, அவர் பெயரால் அன் றைய தமிழக அரசு போக்குவரத்துக்கழகம் உருவாக்கிய வரவேற்கத் தகுந்ததாகும்

சாதியக் கண்ணோட்டத்துடன் எதிர்ப்பு
ஆனால், சாதிய சக்திகள் இப்பிரச் சனையை தேச பக்த கண்ணோட்டத்துடன் அணுகவில்லை. மாறாக, ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர் பெயரில் போக்கு வரத்துக் கழகமா என ஆத்திரமடைந்து கல வரத்தில் ஈடுபட்டனர். சாதிவெறி பிரச்சாரத்தை கட்டவிழ்த்துவிட்டனர். சாதிய சக்திகள் நிலை மையை எந்த அளவுக்கு கொண்டு சென்றனர் என்றால் வீரன் சுந்தரலிங்கம் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பயணிக்க மாட்டோம் என ஒரு பகுதியினர் அறிவித்து அதை செயல்படுத்தவும் செய்தனர்.பல இடங்களில் பேருந்துகளை மறித்தனர். மாவட்டம் முழுவதும் பதட்ட நிலையை உருவாக்கிய தால் கடையடைப்பு, போக்குவரத்து பாதிப்பு என நிலைமை மோசமடைந்தது. இத்தகைய நடவடிக்கை களால் மனம் பாதிப்படைந்த தலித் மக்களும் தங்கள் நலன், உரிமைகளை பாதுகாக்க நடவடிக்கையில் இறங்கினர். வீரன் சுந்தரலிங்கம் போக்குவரத்துக் கழகம் என்ற பெயரை கைவிடக் கூடாது என்பது இவர்களின் நிலையாக இருந்தது. சிபிஐ(எம்)-ஐ பொறுத்தவரை சாதி, மத பேதங்களைத் தாண்டி விடுதலைப்போரிலும் மக்களுடைய உரிமை களுக்கான போராட்டங்களிலும் ஈடுபட்ட போராளிகள் - தியாகிகள் பெயரால் மாவட்டங்கள் - போக்குவரத்துக் கழகங் கள் உருவாக்கப்பட்டது சரியே என்றும், அந்நிலைமை நீடிக்க வேண்டுமென்றும் வற்புறுத்தினோம். வீரன் சுந்தரலிங்கம் போக்குவரத்துக் கழகம் என்ற பெயர் நீக்கப்பட வேண்டுமென்பதற்கு நமது கண்டனத்தை தெரிவித்தோம். அப்போதைய சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் என்.சங்கரய்யா இதற்கான அறிக்கை வெளியிட்டு இச்செய்தி பரவலான பத்திரிகைகளில் வெளிவந்தது. மேலும் அப்போதைய முதல்வர் டாக்டர் கலைஞர் கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டத்திலும் என். சங்கரய்யா அவர்கள் கலந்து கொண்டு மேற்கண்ட கருத்தையே அழுத்தமாக வலியுறுத்தினார். என்றாலும், பதட்டம், கலவரச் சூழலும் அதிகரித்து வந்த பின்னணியில் தலைவர்கள், தியாகிகள் பெயர்களை சர்ச்சைக்குள்ளாக்க வேண்டாம் என நிலை யெடுத்து மாவட்டங்களுக்கும், போக்குவரத்து கழகங்க ளுக்கும் சூட்டப்பட்டிருந்த பெயர்கள் கைவிடப்பட்டன. தமிழக அரசு இத்தகைய நிலை எடுக்கும் அளவிற்கு அன்றைய நிலைமை மோசமானதாக இருந்தது.

உரிமைகள் பாதிப்பும் மீட்பும்
மேற்கண்ட சம்பவங்கள் நடைபெற்ற அக்காலத்தில் தலித் மக்கள் எதிர்கொண்ட பல வேதனைகள், துயரங்களை இங்கு குறிப்பிட வேண்டும். பொதுவாக, முந்தைய காலங்களில் அடிமைப்பட்டுக் கிடந்தது போலல்லாமல் சமீப காலமாக தலித் மக்கள் மத்தியில் விழிப்புணர்வும், எழுச்சியும் பலப்பட்டு வருவதை நாம் அறிவோம். இந்த எழுச்சியில் ஒரு ஜனநாயக உள்ளடக்கம் இருப்பதாக சிபிஐ(எம்) தனது திட்டத்திலேயே வரையறுத்துள்ளது. தலித் மக்களின் இந்த எழுச்சியின் ஒரு பகுதியாக இம்மக்கள் தங்களுக்கு மறுக்கப்பட்ட ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளை மீட்க களத்தில் இறங்கி பல இடங்களில் தீவிரமாகப் போராடி வருகின்றனர். பல பகுதிகளில் உரிமைகளை மீட்கவும் செய்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்துள்ள சாதிவெறி சக்திகள் தலித் மக்கள் மீது வன்மத்தோடு புதிய வன்கொடுமைத் தாக்குதல்களை ஏவினார்கள். சில பகுதிகளில் தலித் மக்கள் ஏற்கனவே அனுபவித்து வந்த உரிமைகளைப் பறித்தார்கள். விருதுநகர் மாவட்டத்தின் சில கிராமங்களில் தலித் மக்களுக்கு தேநீர் குவளைகளுக்கு பதில் சிரட்டையில் தேநீர் வழங்கினர். வேறு சில கிராமங்களில் அதுகாறும் குளிப்பதற்கு அனுமதித்த பொதுக்குளங்களில் குளிக்க அனுமதி மறுத்தனர். சில கிராமங்களில் தலித் மக்களுக்கு வேலை தர மறுத்து அவர்களைப் பட்டினிப் போட்டனர். வேறு சில கிராமங்களில் சமூக புறக்கணிப்புச் செய்தனர்.

இவ்வாறு தலித் மக்கள் மீது ஏவப்பட்ட வன்கொடுமை தாக்குதல்களுக்கு எதிராகவும், அதனை கைவிடவும் நடைபெற்ற போராட்டங்களில் சிபிஐ (எம்) முன்வரிசையில் இருந்தது. அத்தகைய சில அனுபவங்கள் இதோ.

* அப்பையநாயக்கன்பட்டி என்ற கிராமத்தில் கட்டாய உழைப்பு செய்ய வேண்டுமென்று வற்புறுத்தப்பட்ட போது அதனை மறுத்த முனியாண்டி என்பவர் சாதிய சக்தி களால் தாக்கப்பட்டார். சிபிஐ (எம்) தலையிட்டு மேற் கொண்ட நடவடிக்கைகள் காரணமாக குற்றவாளிகள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கு பதிவு செய்யப்பட்டது. வன்கொடுமை வழக்கில் சிக்கியவர்கள் பின்னர் தங்கள் தவறை உணர்ந்து தலித் மக்களின் சமூக உரிமைகளை தாங்கள் அங்கீகரிப்பதாகவும், இனிமேல் இத்தகைய தவறான நடவடிக்கைகளில் இறங்க மாட்டோம் என்றும் சமரசம் செய்து கொண்டனர்.

*  காக்கிவாடன்பட்டி என்ற கிராமத்தில் தலித் மக்களுக்கு மயானப் பாதை தர சாதிய சக்திகள் மறுத்தனர். சிபிஐ(எம்) தலையிட்டுப் போராடிய பிறகு தலித் மக்களுக்கு பாதை வசதி யுடன் மாவட்ட நிர்வாகத்தால் மயானம் ஒதுக்கப்பட்டது.

*    தலித் மக்களின் விழிப்புணர்வு - எழுச்சிக்கு எதிர்ப்பு தெரி வித்து வெள்ளையாபுரம் என்ற கிராமத்தில் தலித் மக்கள் ஏற்கனவே அனுபவித்து வந்த பொதுக்குளத்தில் குளிக்கும் உரிமையை சாதிய சக்திகள் தடை செய்தனர். சிபிஐ(எம்) உடனடியாகத் தலையிட்டு நடவடிக்கையில் இறங்கிய பிறகு அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தலித் மக்களை மீண்டும் பொதுக்குளத்தில் குளிப்பதற்கான உரிமையை மீட்டுத் தந்தனர்.

மேற்கண்ட சாதனைகள் விருதுநகர் மாவட்டத்தின் சில உதாரணங்களே. இவைபோன்ற ஏராளமான உதாரணங் களை விருதுநகர் மாவட்டம் மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் கூற முடியும்.