tamilnadu

img

இந்திய முறை மருத்துவ கட்டிடம் விரைவில் திறக்கப்படுமா?

மன்னார்குடி, அக்.25 - படத்தில் நாம் காண்பது திருவாரூர் மாவட்டம் தலையாமங்கலம் ஊராட்சி யில் கட்டுமான வேலை பாதியில் நிறுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலை யத்திற்கு அருகில் உள்ள சித்த ஆயுர் வேத மருத்துவ கட்டிடத்தின் புகைப்படம். இதன் கட்டிட கட்டுமானப் பணிகள் 2015 ஆம் துவக்கப்பட்டு, 2016 ஆம் ஆண்டிலேயே   நிறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து தலையாமங்கலத்தின் பிர முகர்களான மதிமுக மன்னார்குடி ஒன்றிய செயலாளர் பி.மாசிலாமணி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மன்னார்குடி ஒன்றியக் குழு உறுப்பினர் ஏ.எஸ்.ஆர். சிவசேகரன் இருவரும் தெரிவித்ததாவது: இந்திய முறை (சித்த ஆயுர்வேத) மருத்துவ பிரிவிற்கான கட்டுமான பணி கள் 2015 ஆம் ஆண்டு துவக்கப்பட்டு 2016 ஆம் ஆண்டிலிருந்து பாதியில் அப்படியே விடப்பட்டுள்ளது. ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் பல இடங் களில் சிதிலமடைந்து உள்ளது. பல முறை இதுபற்றி சம்பந்தப்பட்ட அதி காரிகளிடம் முறையிட்டும் பலனில்லை.  இந்த சுகாதார நிலையத்தில் ஆயுர்வேத மருத்துவருக்கும் மருந்துகள் வைப்பதற்கும் இடமில்லாததால், அவ ரது சேவை நாகப்பட்டினம் மருத்துவ மனைக்கு வேற்றுப் பணியில் அவ்வப் போது பயன்படுத்தப்பட்டு வருவதாக தெரிகிறது.  சுகாதார நிலையத்தில் 10 படுக்கை  வசதியுடன் பிரசவ அறை உள்ளது. ஆனால்  ஒப்பளிக்கப்பட்ட 4 பணியிடங் களில் இரண்டு செவிலியர் பணியிடங் கள் நீண்ட காலமாக  நிரப்பப்படாமல் காலியாக வைக்கப்பட்டுள்ளன. மீத மிருக்கும் இரண்டு பணியிடங்களில் ஒரு  செவிலியர் மகப்பேறு விடுப்பில் உள் ளார். ஒருவர் மட்டும் சுகாதார நிலை யத்திற்கு எதிரில் உள்ள உறை விடத்தில் தங்கி பணியாற்றி வரு கிறார். 

எனவே தலையாமங்கலம் மற்றும் சுற்றுவட்டார ஊராட்சிகளில் இருந்து இங்கு வருகிற, சுகப்பிரசவம் ஆக வேண்டிய மகப்பேறு பெண்கள் அனைவரும், மன்னார்குடி நகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய அவல நிலை உள் ளது. ஒப்பளிக்கப்பட்ட இரண்டு மருத்துவர் பணியிடங்களும் அதிமுக  காலத்திலிருந்தே காலியாக வைக்கப் பட்டுள்ளன. வேற்றுப் பணியில் உள்ளிக் கோட்டையிலிருந்து ஒரு மருத்துவர் வந்து பணியாற்றிச் செல்கிறார்.    தலையாமங்கலம்  ஊராட்சியில் 1500 தலைக்கட்டு குடும்பங்கள் உள்ளன. தலையாமங்கலத்தை விட்டால் பெருகவாழ்ந்தானுக்கு 15 கிமீ அல்லது மன்னார்குடிக்கு 10 கிமீ தூரம் செல்ல வேண்டும். இதைத் தவிர  வேறு வழியில்லை. அருகாமை ஊராட்சிகளான ஏத்தக்குடி, வடபாதி, தென்பாதி, குறிச்சி ஊராட்சி மக்கள் அனைவரு்ம் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்குத்தான் வர வேண்டும். 

இதைத் தவிர கொரட்டூர், பாலையூர், தென்பரை ஊராட்சிகளில் உள்ள குடும்பங்கள்கூட  எங்கள் ஊர்  சுகாதார நிலையத்திற்குதான் வரு வார்கள். இந்த ஊராட்சிகளில் உள்ள மக்களின்  எண்ணிக்கையையும் கணக்கிட்டால், பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் தலையாமங்கலம்  ஆரம்ப சுகாதார நிலையத்தை தங்கள் சுகாதாரத்திற்கான நல மையமாக கருது கின்றனர். எங்கள் ஊரில் அதிக மக்கள் இந்திய முறை மருத்துவத்தை விரும்புகிறார்கள். ஆனால் அதற்கான இடம்தான் இல்லை.  ஆங்கில மருத்துவர்கள், செவிலி யர் பணியிடங்கள் காலியாக வைக்கப் பட்டுள்ளன. எனவே காலையில் எட்டு மணிக்கு எங்கள் ஊர் பேருந்து நிறுத்தத்தில் மன்னார்குடிக்கு  வைத்தியத்திற்காக செல்லும் மக்களை எப்போதும் பார்க்க முடியும். தினசரி 500 புறநோயாளிகள்  வரு வார்கள். ஆனால் இந்த குறைபாடுகள் காரணமாக சராசரியாக 150 நோயாளிகள்தான் வருகிறார்கள்.  எங்கள் கோரிக்கை, ‘எங்களுக்கு சித்தா ஆயுர்வேத மருத்துவம் வேண்டும்’. இந்திய முறை மருத்துவத் திற்காக பாதியில் நிறுத்தப்பட்ட கட்டி டம் உடனே முடிக்கப்பட வேண்டும். மருத்துவர், செவிலியர் காலியிடங்கள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். 

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.  பொதுப்பணித்துறை மன்னார்குடி கட்டுமான உதவி செயற்பொறி யாளரை தொடர்பு கொண்டு  கேட்ட போது, ஒப்பந்ததாரர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். திருத்தப்பட்ட மதிப்பீட்டுத் தொகை  பெற்று புதிய ஒப்பந்ததாரர் மூலம் கட்டிடம் முடிக்கப்பட வேண்டும் என்றார்.  மாவட்ட சித்த மருத்துவ அலு வலர் மரு.பத்மநாபனை தொடர்பு கொண்டு கேட்டபோது ஏற்கனவே இதுபற்றி சம்பந்தப்பட்ட துறை அலு வலர்களுக்கு எழுதி இருப்பதாகவும், மீண்டும் நினைவூட்டு கடிதம் அனுப்ப உள்ளதாகவும் தெரிவித்தார்.  தாமதம் செய்யாமல் இந்திய முறை மருத்துவத்திற்கான இந்த கட்டிட வேலை துவக்கப்பட்டு, இந்த  நிதியாண்டிற்குள் முடிக்கப்பட வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர். (ந.நி)