tamilnadu

img

அரசுப் பள்ளிகளின் இதர பணிகளில் தமிழ் தெரிந்தவர்களை நியமிப்பது கட்டாயம்

சென்னை, ஏப்.25- அரசுப் பள்ளிகளில் பராமரிப்பு, பாதுகாப்பு,  தூய்மைப் பணிகளுக்கு தனியாரை நிய மிக்கும்போது, தமிழ் தெரிந்த பணியாளர் களை நியமிப்பதை கட்டாயமாக்குவது குறித்து  பரிசீலிக்க வேண்டும் என ஒப்பந்தக் (டெண்டர்)  குழுவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. தமிழகத்தில் முதல்முறையாக பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் பள்ளி களில், பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும்  தூய்மைப் பணிகளுக்கு தனியார் நிறுவனங்  களை அமர்த்த முடிவு செய்து, இதுதொடர்பாக ஒப்பந்தம் கோரப்பட்டது. இந்த ஒப்பந்தம் கோரி விண்ணப்பிக்கும் நிறுவனங்கள், 25 லட்சம் சதுர அடி பரப்பில் செயல்பட வேண் டும். கடந்த மூன்று ஆண்டுகளில் ஆண்டுக்கு ரூ.50 கோடி வரை வர்த்தகம் செய்திருக்க வேண்டும். 5 ஆயிரம் பணியாளர்களை கொண்டிருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன. இதனால் ஒப்பந்தத்தை எதிர்த்து குவா லிட்டி ப்ராப்பர்ட்டி மேனேஜ்மெண்ட் நிறு வனம், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு  தொடர்ந்தது.

ஆனால் ஒப்பந்த நிபந்தனை களில் தலையிட முடியாது என அந்த வழக்கை தனி நீதிபதி தள்ளுபடி செய்து உத்தர விட்டார். இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்  முறையீட்டு வழக்கு, பொறுப்பு தலைமை நீதி பதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசார ணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், “தற்போது இந்த நிபந்தனைகள் தளர்த்தப் பட்டு, 10 லட்சம் சதுர அடி பரப்பில் நிறுவனம்  செயல்பட்டிருக்க வேண்டும். ஆண்டுக்கு 30  கோடி ரூபாய் வர்த்தகம் செய்திருக்க வேண் டும். 3 ஆயிரம் ஊழியர்களை கொண்டிருக்க வேண்டும் என மாற்றியமைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டது. இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த நீதிபதி கள், ஒப்பந்த நிபந்தனைகள், ஒப்பந்த வெளிப்  படைத்தன்மை சட்டப்படி வெளியிடப்பட்டுள்ள தால், அவற்றை எதிர்க்க முடியாது என தெரி வித்த தமிழக அரசு, தற்போது அதை திருத்தி யது ஏன்? என்பதற்கு எந்தக் காரணமும் தெரி விக்கவில்லை எனக் கூறி, ஒப்பந்த நிபந்த னைகளை ரத்து செய்து, புதிய ஒப்பந்தம் கோர உத்தரவிட்டனர். மேலும் கிராமப்புற மாணவர்கள், பெற்றோ ரின் நலன் கருதி, தகவல் தொடர்புக்கு வசதி யாக, பாதுகாவலர் பணிக்கும், தூய்மைப் பணி யாளர் பணிக்கும் தமிழ் தெரிந்தவரையே கட்டா யமாக நியமிக்க வேண்டும் என நிபந்தனை விதிக்காததைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், இது தொடர்பாக பரிசீலிக்க ஒப்பந்த குழு வுக்கு உத்தரவிட்டனர்.