கோவையில் அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டம்
கோவை, அக்.16- கோவையில் யானை வழித் தடங்களை ஆக்கிரமித்துள்ள ஈஷா, காருண்யா நிறுவனங்களுக்கு ஒன்றிய மாநில அரசுகள் சுற்றுச் சூழல் பாதுகாப்பிலிருந்து விலக் களிக்கக்கூடாது என வலியுறுத்தி சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் பெரியாரிய, அம் பேத்கரிய அமைப்பினர் ஞாயி றன்று ஆர்ப்பாட்டத்தில்ஈடுபட்டனர். மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள வனம் சார்ந்த, யானை வழித்தடங்கள் அமைந்துள்ள நிலங்களை ஆக்கிரமித்து ஈஷா மற்றும் காருண்யா நிறுவனங்கள் கட்டிடங்களை எழுப்பியுள்ளன. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சமூக நல அமைப்புகள், இயற்கை ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ஈஷா மையத் திற்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பி லிருந்து விலக்கு கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒன்றிய பாஜக அரசு முறையீடு செய்துள்ளது.
இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் விலக்கு அளிக்கக்கூடாது. மாநில அரசுகள் விலக்கு அளிக்காமல் இருக்க உறுதியுடன் வாதாட வேண்டும்; ஈஷா மற்றும் காருண்யா நிறு வனங்கள் கட்டியுள்ள கட்டிடங்கள் மீது அரசு சட்டப்படியான நட வடிக்கை மேற்கொள்ள வேண்டும்; ஈஷா மையம் பழங்குடி மக்களுக்கு என ஒதுக்கப்பட்ட நிலங்களை ஆக் கிரமித்துள்ளது. அவற்றை அவர் களுக்கு திருப்பி வழங்க வேண்டும்; ஒன்றிய அரசு, பயிற்சி என்ற பெய ரால் ஈஷா மையத்திற்கு வழங்கி வரும் மானியங்கள், உதவித் தொகைகளை உடனடியாக நிறுத்த வேண்டும்; மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டி உள்ள நன்செய் நிலங்களை வருவாய்த்துறை புன்செய் நிலங்களாக மாற்றித் தரக் கூடாது; தமிழக அரசு பொதுப் பணித்துறைக்குச் சொந்தமான குளங்களை ஈஷா மையத்திற்கு குத்தகைக்கு விடக்கூடாது; குளங் களில் பழங்குடியின மக்கள் மீன்பிடிப் பதை தடுக்கக்கூடாது; ஒன்றிய அரசு பெரும் நிறுவனங்களின் சமூக பொறுப்பு நிதியை ஈஷா மையம் பயன் படுத்துவதை அனுமதிக்க கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பெரியாரிய, அம்பேத் கரிய உணர்வாளர்கள் சார்பில் கோவை, ஆலாந்துறையில் ஞாயி றன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் சி.பத்மநாபன் தலைமை வகித்தார். இதில் கட்சி யின் மத்தியக்குழு உறுப்பினர் பெ.சண் முகம், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் யு.கே.சிவஞானம், வி.ஆறுச்சாமி, வி.ஆர்.பழனிசாமி, மாமன்ற உறுப்பினர் வி.ராமமூர்த்தி, ஜனநாயக மாதர் சங்க மாவட்டப் பொருளாளர் உஷா, வாலிபர் சங்க பொருளாளர் தினேஷ் ராஜா, மாணவர் சங்க மாநலி செயற்குழு உறுப்பினர் கயல்விழி, மாவட்டச் செயலாளர் அசாருதீன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணைச்செயலாளர் ஜே.ஜேம்ஸ், மண்டல செயலாளர் கே.ரவீந்திரன், தந்தை பெரியார் திராவிடர் கழ கத்தின் பொதுச்செயலாளர் கு.ராம கிருட்டிணன், தேசிய மாதர் சம்மே ளனத்தின் மாவட்ட செயலாளர் கே. சுமதி, அனைத்திந்திய பெரியார் விடுதலைக்கழகத்தின் நேருதாஸ், புரட்சிகர இளைஞர் முன்னணியின் மலரவன், மாணவர் பெருமன்றத் தின் மாவட்ட தலைவர் பூர்ணிமா நந்தினி, மாவட்ட செயலாளர் பவன் குமார் மற்றும் அம்பேத்கரிய, பெரி யாரிய உணர்வாளர்கள் திரளா னோர் கலந்து கொண்டனர்.